Tuesday 28 April 2015

அணு ஆயுதத்துக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்...

அணு ஆயுதத்துக்கு எதிராக அமெரிக்காவில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அணு ஆயுத ஒழிப்பு மாநாடு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இந்த ஆண்டு இந்த அணு ஆயுத ஒழிப்பு மாநாடு நியூயார்க் நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி நியூயார்க் நகரில் உள்ள யூனியன் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் அணு ஆயுதத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதில் ஜப்பான் உள்பட உலகம் முழுவதும் இருந்து மக்கள் கலந்து கொண்டனர். அணு ஆயுதம் முற்றிலும் ஒழிக்க வேண்டும், அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். இதில் கலந்து கொண்ட ஜப்பான் நாட்டை சேர்ந்த அணுகுண்டு வீச்சில் தப்பி பிழைத்த 83 வயதான பெண் கூறும்போது, இப்போதிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அணுஆயுதம் இல்லாத உலகை காண விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

No comments: