Thursday 30 April 2015

திருநகர் கிளையில் பணி நிறைவு பாராட்டுவிழா . . .

அருமைத் தோழர்களே ! நமது திருநகர் BSNLEU கிளை சங்கத்தின் சார்பாக தோழர்.
A.முருகையா TM  அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டுவிழா, "கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது" என்ற   சொல்லாடை  கேற்ப, நமது திருநகர் கிளச்சங்கம் மிக சிறப்பான ஏற்பாட்டை செய்து இருந்தது, கிளை சங்கத்திற்க்கு   நமது BSNLEU மதுரை  மாவட்ட சங்கத்தின்  பாரட்டுக்களை   உரித்தாக்குகின்றோம் .  .  .
இந்த 30.04.2015 பணிநிறைவு செய்த நமது திருநகர் கிளையின் உறுப்பினர் அருமைத் தோழர். முருகையா மிக, மிக அமைதியானவர், எளிமையானவர், உறுதியான உறுப்பினர், நல்ல பண்பாளர் எனவே, அவருக்கு நடைபெற்ற பணிநிறைவு பாராட்டு விழாவில்  அனைத்து  உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொண்டனர்.
 தோழர் முருகையாவின் பணி சிறப்பை, நமது சங்கத்தின் மீது உள்ள பற்றை நமது கிளைச் செயலர், தோழர். நாராயணன், மாவட்டச் செயலர் தோழர். சூரியன், மாவட்ட அமைப்பு செயலர் தோழர். சண்முகவேல் ஆகியோர் பாராட்டி , பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கி கெளரவித்தனர். தோழர் முருகையா ஏற்புரை நிகழ்தினார் அதன்பின் விழா இனிதே நிறைவுற்றது... வாழ்த்துக்களுடன், எஸ். சூரியன் D/S-BSNLEU.

No comments: