Wednesday 17 September 2014

தமிழை விரும்புவது ஏன்?-செப்.17 தந்தை பெரியார் பிறந்த நாள்.

நான் தமிழினிடத்தில் அன்புவைத்திருக்கிறேன் என்றால், அதனிடத்தில் அதன்மூலம் நான் எதிர்பார்க்கும் நன்மையும், அது மறைய நேர்ந்தால் அதனால் நஷ்டமேற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழினிடம் அன்பு செலுத்துகிறேன். அப்படியென்றால் மற்றொரு மொழி நமது நாட்டில் புகுத்தப்படுவதை பார்த்து, அதனால் நமக்கு ஏற்படும் நஷ்டத்தை அறிந்து, சகிக்க முடியாமல் தான் எதிர்க்கிறேனே ஒழிய, புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை. தமிழ் இந்த நாட்டுமக்களுக்கு சகல துறைக்கும் முன்னேற்ற மளிக்கக்கூடியதும் சுதந்திரத்தை அளிக்கக்கூடியதும், மானத்துடனும், பகுத்தறிவுடனும் வாழத்தக்க வாழ்க்கை அளிக்கக்கூடியதும் என்பது எனது அபிப்பிராயம். தமிழுக்கு கேடு உண்டாக்கும் என சந்தேகப்படத்தக்க வேறு எந்த மொழியும் விரும்பத்தகாததேயாகும்.    - தந்தை பெரியார்

No comments: