Friday 26 September 2014

25.09.14 ஒப்புயர்வு பெற்ற ஒட்டன்சத்திரம் கிளை மாநாடு. . .

அருமைத் தோழர்களே! 25.09.14 அன்று ஒட்டன்சத்திரம் தொலைபேசியகத்தில் மிகவும் சீரும் சிறப்புமாக 8 மாவட்டசங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு இன்றைய நமது கடமை குறித்து நல்ல பல கருத்துக்களை எடுத்தியம்பி தொழிற்சங்க வகுப்பாக மாறிய, ஒப்புயர்வு பெற்றமாநாடாக  ஒட்டன்சத்திரம் கிளை மாநாடு. . . மிளிர்ந்தது என்றால் மிகையாகாது.
மாநாட்டின் தலைமை உரையை தோழர். S.கனகராஜ் நிகழ்த்தினார். நமது சங்க கொடியை தோழர்  V.முனியாண்டி, ஏற்றிவைத்தார்.அதன்பின், கிளச்செயலர் தோழர். K.சுப்பிரமணியன் வந்திருந்த அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.
மாநாட்டின் துவக்கவுரையை மாவட்டச் செயலர் தோழர். S. சூரியன் நிகழ்த்தினார்.மதுரை மாவட்ட சங்கம்  செயல்பாடுகளில் எவ்வாறு முன் நிற்கிறது, கிளச்சங்கங்கள் மிகவும் தயாரான நிலையில் இருக்கவேண்டிய அவசியம் குறித்தும், வரும் காலம் அரசின், BSNL நிர்வனத்தின் தவறான நிலை பாட்டின் காரணமாக போராட்டம் மிகுந்த காலமாக இருக்கும் என்பது குறித்தும் எடுத்துரைத்தார். ஏற்கனவே நடைபெற்ற  7.8.14 ஆர்ப்பாட்டம் , 23.09.14 தர்ணா பங்கேற்பிற்கு பாராட்டுக்களை தெரிவித்து, அடுத்து 30.09.2014 அன்று நடைபெற விருக்கும் . காலை 11 மணிமுதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ள 2 மணி நேர வெளிநடப்பு போராட்டத்தில் அனைத்து ஊழியர்களையும் பங்குபெற வைக்க வேண்டிய கடமைகுறித்தும் விளக்கினார்.அதன் பின் கிளைச் செயலரால் ஆண்டறிக்கை சமர்பிக்கப்பட்டு  மாநாடு  ஏற்றுக்கொண்டது.  தொடர்ந்து BSNLEU & TNTCWU இரு கிளைகளுக்கும் கீழ்கண்ட புதிய நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
BSNLEU புதியநிர்வாகிகள் 
தலைவர்.தோழர்.S. திருமலை சாமி, செயலர்.K. தோழர் சுப்பிரமணியன், பொருளர். தோழர் .A.சண்முகம் 
TNTCWU புதிய நிர்வாகிகள் 
தலைவர்.தோழர்.K சரவணன் , செயலர்.K. தோழர்லெட்சுமணன் , பொருளர். தோழர் .A.முருகேசன்  
அதற்கடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை வாழ்த்தி மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள், கணேசன், சுமதி, சிவப்பிரகாசம், பரிமள ரெங்கராஜ், வைத்தியலிங்க பூபதி, சௌந்தரராஜன், வெங்கடேசன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
அதன் பின் மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் C.செல்வின்சத்தியராஜ், S.ஜான் போர்ஜியா இருவரும் சிறப்புரை நிகழ்த்தினர். அவர்களது உரையில் மத்திய அரசின் நிலைபாடுகுறித்தும், நமது மத்திய, மாநில, மாவட்ட, கிளை செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தனர். இறுதியாக  நன்றியுரையை  தோழர். S.சையது ரசூல் கூறி மாநாட்டை நிறைவு செய்தார்.புதிய நிர்வாகிகள் பனி சிறக்க BSNLEU மாவட்டசங்கம் வாழ்த்துகிறது.




No comments: