Sunday 28 September 2014

மாநில மாநாட்டிற்கு திட்டம் தீட்டிய 27.09.14 செயற்குழு...

அருமைத் தோழர்களே! நமது BSNLEU தமிழ் மாநிலசங்கத்தின் செயற்குழு கூட்டம் மாநில துணைத் தலைவர் தோழர்.L.பரமேஸ்வரன் தலைமையில் 27.09.14 சனிக்கிழமை அன்று சென்னை கிண்டி CITU அலுவலகத்தில் நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக  நமது BSNLEU சங்க கொடியை, இம் மாதம் பனி ஓய்வில் செல்லவிருக்கும் வேலூர் மாவட்டச் செயலர் தோழர். ஞானசேகரன் ஏற்றிவைத்தார்.மாநில செயற்குழு அஞ்சலி செலுத்திய பின், செயற்குழுவிற்கு வந்திருந்தவர்களை வரவேற்று, CGM அலுவலக மாவட்டச்செயலர் தோழர்.சிவக்குமரன் உரை நிகழ்த்தினார். அதன் பின் மாநிலச் செயற்குழுவில் தோழர்.S.செல்லப்பா, மாநிலச் செயலர்   நமது 7 வதுதமிழ்மாநிலமாநாட்டிற்குஉரியஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். ஆண்ட றிக்கை மீதான திருத்தங்களை நமது மாவட்டச் செயலர் தோழர்.S.சூரியன் உட்பட அனைத்து மாநில செயற்குழு உறுப்பினர்களின் கருத்துக்களின் இணைப்போடு, ஆண்டறிக்கை ஒருமனதாக மாநில செயற்குழு ஏற்றுக் கொண்டது. அதன் பின் மாநில பொருளர் தோழர் K.சீனிவாசன் மாநாட்டின் வரவு-செலவுகளை சமர்ப்பித்தார்.  மாநில செயற்குழு வரவு-செலவு கணக்கையும் ஒரு மனதாக ஏற்றுக்கொன்டது.தோழர்.சுப்பிரமணியன்(திருப்பூர்) நன்றி கூறினார்.நமது மதுரை மாவட்டத் திலிருந்து, தோழர்கள், S.ஜான் போர்ஜியா, C.செல்வின் சத்தியராஜ், S.சூரியன் ஆகியோர் மாநில செயற் குழு கூட்டத்தில்  கலந்து கொண்டனர். 
எதிர் வரும் அக்டோபர் 11,12-13 தேதிகளில் திருச்சி மாநகரில் மிகவும் எழுச்சியுடன்  நடைபெறவுள்ள 7 வது மாநில மாநாட்டை சிறப்பாக நடத்திட அனைத்து வகையான  திட்டங்களையும்  செயற்குழு தீட்டியது. மாநில மாநாடு 11.10.14 அன்று காலை சரியாக 10 மணிக்கு துவங்கும். முதல் நாள் நிகழ்சியில், தோழர்கள், P.அபிமன்யு,G.S-BSNLEU, T.K ரெங்கராஜன்,M.P, P. சம்பத், தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியோரும், நமது BSNL பகுதி தொழிற்சங்க தலைவர்களும்  உரையற்ற இருக்கிறார்கள்.
 *  மாநிலமாநாட்டு நிதியாக ஒவ்வொரு உறுப்பினரும் ரூ.250 வீதம் தரவேண்டும்.
 * நமது மதுரை மாவட்டத்தின் சார்பாக இதுவரை வசூலான ரூ.80000 மாநில சங்கத்திடம்  வழங்கப்பட்டுள்ளது. நிதி தரவேண்டிய கிளை சங்கங்கள் தாமதம் இன்றி  நமது மாவட்ட பொருளர் தோழர்.S. மாயாண்டி வசம் தரவேண்டும்.
  *  மாநில மாநாட்டிற்கு வரும் பெண்களுக்கு சார்பாளர் ஒதுக்கீட்டுலிருந்து விதி விலக்கு அளிக்க மாநில சங்கம் முடிவு செய்துள்ளது.
 *  நமது மதுரை மாவட்டத்திற்கு Voting Strength அடிப்படையில் 43 சார்பாளர்கள் அனுமதிக் கப்படுவர். 
 * மாநில மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியான 11.10.14 பொது அரங்கிற்கு எவ்வளவு பார்வையாளகள்  வேண்டு மானாலும் அனுமதிக்கப்படுவர். ஆனால்   சார்பாளர் நிகழ்ச்சி  நாட்களான 12.10.14 & 13.10.14 ஆகிய நாட்களில்  பார்வையாளர்கள் அனுமதி இல்லை.
*மாநிலமாநாட்டிற்கானசார்பாளர்கட்டணம் ரூ.350  என முடிவு செய்யப்பட்டுள்ளது.













No comments: