Sunday 23 November 2014

22.14.2014 மேலூரில் கிளைக்கூட்டம் . . .

அருமைத்தோழர்களே!22.14.2014அன்றுமேலூரில்நமது BSNLEU+TNTCWU இரு கிளைகளின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஏராளமான ஒப்பந்த ஊழியர்களும், நிரந்தர ஊழியர்களும் கலந்து கொண்டனர். 
கூட்டத்தில் BSNLEU+TNTCWU இரு சங்கங்களின் மாவட்ட செயலர்கள் தோழர்கள் எஸ்.சூரியன், என்.சோனைமுத்து ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.ஸ்தலமட்ட பிரச்சனைகள் குறித்து விரிவாகவிவாதிக்கப்பட்டதுஒப்பந்த ஊழியர்கள் பணி குறித்து எழுந்த  பிரச்சனைகளுக்கு ஸ்தல மட்ட தோழர்களுடன் அனைத்து கருத்துக் களையும்  கேட்டு முறையாக எல்லோருக்கும் வழி கட்டப்பட்டது.
இறுதியாக எதிர்வரும், 27.11.2014 போராட்டத்தின் கோரிக்கை குறித்தும், நியாயம் குறித்தும், நிர்வாகத்தின் அலச்சிய போக்கு,அக்கறையற்ற நடவடிக்கையும் விளக்கப்பட்டது. நமது ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிட்ட அணைத்து C&D ஊழியர்கள் உக்கரமாக போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என மாவட்ட சங்கத்தின் சார்பாக, JACசார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது.27.11.2014 அன்று மேலூர் துனைக்கோட்டத்தில் 100 சதம் வேலை நிறுத்தத்தை உறுதி படுத்திட அனைத்து தோழர்களும் உறுதி பூண்டனர்.
       ---போராட்ட வாழ்த்துக்களுடன், எஸ்.சூரியன், D/S-BSNLEU. 

No comments: