Friday 7 November 2014

நவம்பர் - 7 புரட்சி தின நல் வாழ்த்துக்கள் . . .

உலகைக் குலுக்கியநவம்பர் புரட்சிநடந்தேறிய நாள் இன்று.உலகில் முதன் முதலாய்மனிதனை
 மனிதன்சுரண்டாத சோசலிசஅமைப்பைஅமைப்பதற்குகால்கோள் நடத்தியநாள் இன்று.....
இரண்டாம்உலகப்போரின்போது இரண்டுகோடி மக்களை களப்பலிஆக்கி பாசிசபேரபாயத்திலிருந்து
பூவுலகை காத்தது சோவியத்யூனியன்இன்றைக்கு இந்தியாவில் மதவெறி பாசிச சக்திகள்
தலையெடுக்கமுயல்கின்றன...... .... பாசிசசக்திகளை முற்றாக முறியடித்துஎல்லோரும் எல்லாமும்பெறுகிற சோசலிச 
சமுதாயத்தை அமைத்திடஇந்நாளில் சூளுரைப்போம்..கடந்தநூற்றாண்டின் மிகப்பெரிய 
சாதனையாகவே நவம்பர் புரட்சி திகழ்கிறது.
சோவியத்பின்னடைவு ஏற்பட்டு இருபது ஆண்டுகளுக்குப்பிறகு இன்றைய உலக நிகழ்வுகள்,அதை
 உண்மை என்று நிரூபித்து வருகின்றனமுதலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ளநெருக்கடியும் 
அதிலிருந்து மீள உலகத்திலுள்ள உழைப்பாளிமக்களின் மீது தனதுசுமையை சுமத்த 
முதலாளித்துவம் முயற்சிசெய்வதும் அதற்குஎதிரானபோராட்டங்கள் வெடித்து கிளம்புவதும், 
சோசலிசமே நெருக்கடிக்கு தீர்வாக அமையும்என்பதைஎடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
மாமருந்து
அந்தந்த நாடுகளில் நிலவி வரும் அரசியல் நிலையற்ற நிலைமைகளை தனக்குசாதகமாக்கிக்
கொண்டு ஆதாயம் தேட ஏகாதிபத்தியம் முயல்கிறதுஇதனுடைய ஒரு பகுதிதான் இந்தியாவில்
தற்போது நரேந்திர மோடி  அரசு மேற்கொண்டுவரும் பொருளாதாரசீர்திருத்தங்கள் என்றபெயரில்
 மக்கள் மீதான தாக்குதல்கள் அமெரிக்காவின் ஆணையைசிரமேற்கொண்டு நிறைவேற்றுவதில்
 இன்று மத்திய அரசு,இந்தியநாடாளுமன்றஜனநாயத்திற்கே வேட்டு வைக்கிறதுஅமைச்சரவை
 கூட்டங்களிலேயே  இன்று  சாதாரண   இந்தியனின்  தலைவிதி  நிர்ணயிக்கப்படுகிறது.
உலகமயம்தாராளமயம்தனியார் மயம் போன்ற கொள்கைகளை அமல் படுத்துவதின்
காரணமாகவேஇன்று மைய அரசிலும் பெரும்பான்மையான மாநில அரசுகளிலும்,தலை
விரித்தாடும் லஞ்சமும்ஊழலும். மக்களிடையே தலைவிரித்தாடும் வறுமைப்பசியும் ஆகும்
தற்கொலைவேலையின்மை,பாலின சுரண்டல் உள்ளிட்ட பல கொடியஉயிர்க்கொல்லி 
நோய்களை இது உருவாக்கியுள்ளது.இதற்குமருந்து உழைக்கும் மக்களின்ஒற்றுமையை 
விரிவாக்கி போராட்டங்களை ஒருங்கிணைத்துசோசலிச சக்திகளைவலுப்பெறச் செய்து 
அரசியல் அதிகாரம் பெற வைப்பதுமே ஆகும்இந்த சமூக மா மருந்து
உருவாகுமிடம் தொழிற்சங்க கூடங்களே! இதை உருவாக்கும் மருத்துவர்கள்தொழிலாளர்களே!
சீரிய இப்பணியினை செய்து முடிக்க நவம்பர் புரட்சி வகுத்துக் கொடுத்தபாதையில் 
முன்னேறுவோம்மதுரை BSNLEU மாவட்டசங்கம் அனைவருக்கும் 
நவம்பர்-7   புரட்சி தின  நல் வாழ்த்துக்களை  உரித்தாக்குகிறது

No comments: