Sunday 1 November 2015

"மூடு டாஸ்மாக்கை மூடு " பாடல் இயற்றி பாடிய கோவன் கைது .....

"மூடு டாஸ்மாக்கை மூடு "  பாடல் இயற்றி கைதாகியுள்ள கோவன், சமூக மாற்றம் குறித்தும் அதன் அத்தியாவசியம் குறித்தும் பல ஆண்டுகளாகப் பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருபவர். கோவன் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 124- (தேச துரோகம்), 153- (சமூகத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்துதல்), 505 (1) பி, சி (வதந்திகளை பிரசுரித்து, பரப்பி மக்களை அரசுக்கு எதிராக செயல்படும்படி தூண்டுவது) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மத்திய கிரைம் பிராஞ்சு வட்டாரம் தெரிவிக்கின்றது. அணைத்து ஜனநாயக சக்திகளும் அரசின் இந்  நடவடிக்கையை  கண்டித் துள்ளார்கள்.

No comments: