Thursday 26 November 2015

நான் ஒரு பெருமைமிகு இந்தியன் - அமீர்கான் . . .

நாட்டில் சகிப்பற்ற தன்மை பெருகி வருவதாகவும், அதுமக்கள் மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வை அளிப்பதாகவும், பிரபல இந்தி நடிகர் அமீர்கான் கூறியிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சங்-பரிவார் கூட்டம், நாடு முழுவதும் கூச்சலில் இறங்கியுள்ளது.அமீர்கான் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று சிவசேனா உள்ளிட்ட மதவெறி அமைப்புக்கள் வெளிப்படையாகவே மிரட்டலும் விடுத்து வருகின்றன.பா... எம்.பி.யும், இந்துத்துவ வெறியைக் கிளப்பும் வகையில் தொடர்ந்து பேசி வருபவருமான யோகி ஆதித்ய நாத்,” இந்தியாவை விட்டு அமீர்கான் செல்வதை ஒருவரும் தடுக்கவில்லை; மேலும் நாட்டின் மக்கள் தொகையைக் குறைக்க இது உதவும்என்று விஷத்தைக் கக்கினார்.மகாராஷ்டிர மாநில சுற்றுச்சூழல் அமைச்சரும், சிவசேனா தலைவருமான ராம்தாஸ் காதம், “அமீர்கான் இங்குஇருக்க விரும்பவில்லை எனில் பாகிஸ்தான் செல்லட்டும்என்று கூறினார். “இந்தியாவை தன் நாடாக உணராதவர்கள் தேசப்பற்று பற்றியும்சத்யமேவ ஜெயதேபற்றியும் பேசக்கூடாதுஎன்று சிவசேனாவின் பத்திரிகையானசாம்னாதலையங்கம் சாடியது. “மக்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கு வளர்ந்து வரும் புகழையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் காங்கிரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை;
அதன்காரணமாகவே அமீர் கானை தூண்டிவிட்டு இவ்வாறு அவர்கள் பேச வைத்துள்ளனர்என்று பாஜக தலைவர்களில் ஒருவரான ஷாநவாஸ் ஹூசைன் விமர்சித்தார்.இந்நிலையில், ‘நாட்டில் சகிப்பற்ற தன்மை நிலவுகிறதுஎன்ற தனது கருத்தில் இப்போதும் உறுதியுடன்இருப்பதாகவும், தற்போது தனக்கு எதிராக கூச்சலிடு பவர்கள், தனது கருத்தை நிரூபித்து இருப்பதாகவும் அமீர்கான் பதிலடி கொடுத்துள்ளார்.மேலும், தான் ஒரு பெருமித இந்தியன் என்றும், தனக்கோ, தன் மனைவிக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அமீர்கான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி நானும் என் மனைவியும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஒருபோதும் நினைத்தது இல்லை; எனக்கு எதிராகப் பேசுபவர்கள் எனது பேட்டியை பார்த்திருக்க மாட்டார்கள் அல்லது வேண்டுமென்றே தவறாக பேசுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்; என்னை தேச எதிர்ப்பாளன் என்று அழைக்கும் அனைவருக்கும்நான் ஒரு பெருமைமிகு இந்தியன்என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்; இதை சொல்வதற்கு யாரின் ஒப்புதலும் தேவையில்லை; ஏனெனில் நான் இந்தியாவை நேசிக்கிறேன்; இங்கு பிறந்தது எனது நல்வாய்ப்பு; நான் மனம் திறந்துபேசியதற்காக, என்னை நோக்கி சரமாரியாக கூச்சலிட்டவர்கள் அனைவருமே நான் குறிப்பிட்ட (சகிப்புத் தன்மை குறைகிறது) என்ற அந்த கருத்தை தான் நிரூபித்திருக்கிறார்கள்; இது என்னை வருத்தமடையச் செய்கிறது; ஆனால், நான் ஏற்கெனவே கூறிய கருத்துகளில் உறுதியாகஇருக்கிறேன்என்று அந்த அறிக்கையில் அமீர்கான் குறிப்பிட்டுள்ளார்.மேலும், இந்தியா என்ற அழகான நாட்டின் ஒருமைப்பாடு, பன்முகத்தன்மை, மொழிகள், கலாச்சாரங்கள், வரலாறு, சகிப்புத்தன்மை ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ள அமீர்கான், இவ்விஷயத்தில் தனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். இதனிடையே, அமீர்கானுக்கு எதிராக தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படவேண்டும் என்று, வழக்கறிஞர் ஒருவர் கான்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

வருத்தமாக இருக்கிறது ஐயா