Sunday 8 November 2015

ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் & சம்பளம் பட்டுவாடா...

அருமைத் தோழர்களே ! நமது மதுரை மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் , கேபிள், வாட்சுமேன் மற்றும் கவுஸ் கீப்பிங் ஆகிய பகுதிகளில் பணிபுரியும் அனைவருக்கும்  போனஸ் & சம்பளம் பட்டுவாடா செய்வதற்கு நமது மாவட்ட சங்கம் தொடர்முயர்ச்சியை எடுத்து வந்தது  அதன் விளைவாக நமது மதுரை மாவட்டத்தில் உள்ள  அனைவருக்கும் போனஸ்  பட்டுவாடா ஏற்கனவே,செய்யப்பட்டுவிட்டது. ஒருபகுதி ஊழியர்களுக்கு  மட்டும் அக்டோபர் -2015 க்கான சம்பளம் நிலுவையிருந்தது. நாம் உடனடியாக மாவட்ட நிர்வாகத்துடன் & ஒப்பந்தகாரர்  நடத்திய பேச்சு வார்த்தையின் அடிப்படையில் எஞ்சியிருந்த வர்களுக்கும் 09.11.15 அன்று சம்பளமும் வழங்கப்படும்.... இதன்மூலம் நமது மாவட்டத்தில் அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் சம்பளம் & போனஸ் நிறைவுற்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ---வாழ்த்துக்களுடன், S. சூரியன் ---D/S-BSNLEU.

No comments: