Saturday 18 October 2014

நோய் எதிர்ப்பு சக்தி!

உடலுக்குள் குடியிருந்து
உயிர் குடிக்கும் புற்று நோய் போல்
சமூகத்தில் குடியிருக்கிறது உலகமயம்.

நேற்று காலனியாக 
இன்றுநவகாலனியாக ரத்தஅணுக்களைத்
தின்றபின்உயிர்குடிப்பது போலவே
நிலம், நீர் என இயற்கை வளங்களைத்தின்றபின்
மனிதவளத்தைத் தின்கிறது.

ஆலைகளை மூடி நடைபிணங்களாக்குகிறது.
சாவு வீட்டு ஒப்பாரி பழகிவிட்டது.
கும்பகோணம் பள்ளிக்குழந்தைகள்
மவுலிவாக்கம் கட்டிடத் தொழிலாளர்பிணங்களின்
மீது ஆர்ப்பரித்த முதலாளித்துவம்.

வெளியேற்றப்படும் தொழிலாளர்களுக்காகவும்
நீலிக்கண்ணீர் வடிக்கிறது.
எல்லாம் ஒருநாள் நிகழ்ச்சி நிரல்!.
நோக்கியா ஒருநாளாக இருக்கலாம்.
சுரண்டலும் வெளியேற்றமும்
ஒருநாள் நிகழ்ச்சி நிரலா?
நோய் எதிர்ப்பு சக்தி
சமூகத்தின் தேவைதளராத போராட்டங்களே
ஊற்றுக்கண்ஊறட்டும் ஏராளமாய்!

No comments: