Tuesday 14 October 2014

சபாஷ்-தோழனே ! மாவட்ட சங்கம் ...மனதார வாழ்த்துகிறது.

அருமைத் தோழர்களே ! திண்டுக்கல்லில் நமது தபால்-தந்தி ஊழியர்களின் பயன்பாட்டிற்காக, இல்லங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கென, DD-393 தபால்-தந்தி ஊழியர்களின் கூட்டுறவு பண்டகசாலை-திண்டுக்கல்  ஒன்று  பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது . (இதே போன்று மதுரை நகரிலும் ஒரு பண்டசாலை உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.) 11 டைரக்டர்களை கொண்ட தேர்தலிலும் நமது மாவட்ட சங்க நிர்வாகி தோழியர் எஸ்.சுமதி உட்பட பெரும்பான்மையான டைரக்டர்களாக நமது தோழர்கள்  ஏற்கனவே நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்கள். நேற்று 13.10.14 திங்கள் அன்று நடைபெற்ற தலைவர் தேர்தலில் நமது திண்டுக்கல் புறநகர் BSNLEU கிளைச் செயலர்  தோழர் A.குருசாமி போட்டி இன்றி தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார் என்பதை மிக, மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். சபாஷ்... தோழர்  ! உங்களது பணிசிறக்க மாவட்ட சங்கம்...மனதார வாழ்த்துகிறது.
---என்றும் தோழமையுடன், எஸ்.சூரியன் ---D/S-BSNLEU.

No comments: