Sunday 26 October 2014

நேருவை விட கோட்சே நல்லவராம்! - RSS சொல்கிறது

பாகிஸ்தான் பிரிவினைக்கும் காந்தி படுகொலை செய்யப்பட்டதற் கும் நேரு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், காந்தியை சுட்ட கோட்சே, நேருவை விட எவ்வளவோ மேலான வர் என்றும் கேரள RSSஸின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான கேசரியில் வெளியிடப்பட்டுள்ள அவதூறுக் கட்டுரைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
கேரள மாநிலத்தில் RSSஸின் பத்திரிகையான கேசரியில், காந்தியை பின்னால் இருந்து குத்தியதுயார்என்ற தலைப்பில் ஒரு கட்டு ரை வெளியிடப்பட்டிருந்தது. இந்த கட்டுரையை எழுதியவர் பி.கோபால கிருஷ்ணன் என்பவர் . இவர் BJP தலைவராவார். இவர் சாலக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டவர். அக்கட்டுரையில் அவர் கூறியுள்ளதாவது:நாட்டின் பிரிவினைக்கும் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கும் நேருவே பொறுப்பேற்க வேண்டும். வரலாற்று ஆவணங்களையும் நாதுராம் வினாயக் கோட்சேயின் வாக்குமூலங்களையும் ஆய்வு செய்து பார்த்தால் யாரும் கோட்சேயின் நோக்கம் தவறு என்று கூற முடியாது. நேரு ஒரு சுய நலவாதி. பாகிஸ்தான் பிரிவினை பற்றிய முக்கிய உண்மைகளை காந்தியிடமிருந்து மறைத்தார்.
பாகிஸ்தான் தொடர்பாக இறுதியாக நடை பெற்ற விவாதங்களில் அவரைத் திட்டமிட்டுதனிமைப்படுத்தினார். நேருவை விட கோட்சே எவ்வளவோ மேலானவர். காந்தியை நேருக்கு நேராக இருந்துதான் கோட்சே சுட்டார், நேரு போல அவரை பின்னால் இருந்து கத்தியால் குத்தவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இக்கட்டுரை தொடர்பாக, உம்மன்சாண்டி அரசு கடும் கண்டனம் தெரிவித்ததோடு மாநில போலீஸ் தலைமை அதிகாரியிடம் விசாரணை செய்யவும் கேசரி பத்திரிகை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி , வரலாற்றை மிகவும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் RSSஸின் போக்கு பாசிசத்தன் மை கொண்டதாகும் மிகவும் அபாயகரமானதாகும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார் .இதுதொடர்பாக விமர்சித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் து.ராஜா, இது பாஜகவின் நோயுற்ற மனப்பாங்கை காட்டுகிறது; இக்கட்டுரையாளர் முழுமையான மனநோயாளிஎன்பதையும் காட்டுகிறது; இதுகட்டுரை ஆசிரியரான கோபாலகிருஷ்ணனின் தனிப்பட்ட கருத்தா அல்லதுகட்சியின் கருத்தா என்பதை BJP தலைமைதான் விளக்க வேண்டும். இவரைப்போன்றவர்களை எல்லாம் BJP கட்சி எப்படி சகித்துக்கொள்கிறது என்பதையும் அந்த கட்சி விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

No comments: