Tuesday 22 October 2013

தயாளு உட்பட 17 பேர் நீதிமன்றத்தில் வரும் 28-ந் தேதி ..

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உட்பட 17 பேர் சென்னை பெருநகர நீதிமன்றத்தில் வரும் 28-ந் தேதி ஆஜராக சம்மன் அனுப் பப்பட்டுள்ளது.
தயாளு அம்மாளின் உடல்நிலை சரியில்லை என்பதால் அவ ரது வீட்டுக்கே சென்று சாட்சியத்தை மாஜிஸ்திரேட் பதிவு செய்ய இருக்கிறார். ஸ்பெக்ட்ரம் அலைக் கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் கலைஞர் தொலைக்காட்சி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சியாக கலைஞர் டிவி பங்குதாரரான தயாளு அம்மாள் சேர்க்கப் பட்டிருந்தார். அவரை சாட்சி யமளிக்க தில்லி வருமாறு விசாரணை நீதிமன்றம் சம் மன் அனுப்பியது.
ஆனால் உடல் நலமில்லாததால் தம்மால் நேரில் ஆஜராக முடியாது என கூறினார். இதைத்தொடர்ந்து அவரது உடல் நிலையை பரிசீலிக்க தில்லி மருத்துவர் குழுவை உச்சநீதி மன்றம் நியமித்தது. அக்குழுவும் சென்னை வந்து தயாளு அம்மாள் உடல்நிலையை பரிசீலித்து சென்றது. இந்த வழக்கில் சென்னைபெருநகர நீதிமன்ற நீதிபதியிடம் தயாளு அம்மாள்சாட்சியம் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. இதைத்தொடந்து, தயாளுஅம்மாள் உட்பட 17 பேர் வரும் 28-ந் தேதி சென்னை நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை பெருநகர நீதிமன்றம் திங்களன்று சம்மன் அனுப்பியுள்ளது.

இருப்பினும் தயாளு அம்மாள் உடல்நிலை சரியில்லை என்றும் அவரால் வீட்டை விட்டு வெளியேற முடியாது என்றும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து 28-ந் தேதியன்று தயாளு அம்மாள் வீட்டுக்கு நேரில் சென்று அவரது சாட்சியத்தை மாஜிஸ்திரேட் பதிவு செய்ய இருக்கிறார்.

No comments: