Monday 7 October 2013

மோடி போஸ்டரில் ரஜினி ஏன்? - கமல் கேள்வி..

திருச்சியில் நடைபெற்றநரேந் திர மோடியின் கூட்டத்தில் ரஜினியின் போஸ்டரை பயன் படுத்தினார்கள். அதற்கு ரஜினி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதேபோல என்னுடைய போஸ் டரை பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று நடிகர் கமல் ஹாசன் கூறினார். ஃபிக்கி அமைப்பின் சார்பாக ஆண்டு தோறும் நடத்தப்படும்ஊடகம் மற்றும் சினிமா குறித்த கருத்தரங்கம்இந்த ஆண்டு அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் பெங்களூரில் நடைபெற இருக்கிறது. இதனை அறிவிப்பதற்காக அந்த அமைப்பின் தலைவர் நடிகர் கமல் ஹாசன் சனிக்கிழமை பெங் களூர் வந்திருந்தார். கமலின் நண் பரும்,கன்னட நடிகருமான ரமேஷ் அரவிந்த் உடன் இருந்தார். அப்போது கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசிய தாவது: அரசியல் என்பது சிறந்த சமூகத்தை கட்டமைக்கும் உன்னதமான கருவி. என்னுடைய சினிமா வாழ்க்கையில் இதுவரை பேய் படங்கள் மட்டும்தான் எடுத்ததில்லை.
மற்ற எல்லா வகையான படங்களும் எடுத் திருக்கிறேன். இனிமேலும் பேய் படம் எடுக்க மாட்டேன். அதைத் தானே அரசியலில் சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். ராமானுஜரின் தம்பிதான் பெரியார். ரசிகர்களுக்கு எப்படி என் னையும் பிடிக்கும். ரஜினியையும் பிடிக்குமோ, அதே போல எனக்கு காந்தியையும் பிடிக்கும். பெரியாரையும் பிடிக்கும். மூட நம்பிக்கை எந்த மதத்தில் இருந்தாலும் கண்டிப்பேன். பகுத்தறிவையும்,முற்போக்கு சிந் தனைகளையும் எப்போதும் போற்றுவேன். இன்னும் சொல்லப்போனால் பெரியார் செய்த தைத்தான் பல ஆண்டுகளுக்கு முன்பே ராமானுஜர் செய்தார். ஆத லால் பெரியாரை ராமானுஜரின் இளைய தம்பி என்பேன்.சேகுவேராவும் ஆயுதம் ஏந்தினார்.

பின்லேடனும் ஆயுதம் ஏந்தினார். அதனால் இருவரையும் போராளி என்று சொல்லிவிட முடியுமா? நான் `ஹிம்சைவாதி. ஆதலால் காந்தியை நேசிக்கிறேன். நான் அரசியலுக்கு வர மாட்டேன். என்னுடைய அரசியல் என்பது வாக்களிக்கும் நேரத்தில் ஆள் காட்டி விரலில் மை இடுவதுதான். அந்த மையை என் கை முழுவதும் பூசி கறையாக்கிக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. திருச்சியில் நடைபெற்றநரேந்திர மோடியின் கூட்டத்தில் பாஜக வினர் ரஜினியின் போஸ்டரை பயன்படுத்தினார்கள். அதற்கு அவர் (ரஜினி) எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதேபோல என்னுடைய போஸ்டரை பயன் படுத்த அனுமதிக்கமாட்டேன். ஏனென்றால் என்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை வாக்குச்சாவடியில் மட்டுமே தெரிவிப் பேன் என்று கமல்ஹாசன் கூறி னார்.

No comments: