Tuesday 15 October 2013

ஒடிசாவில் பைலின் புயல் பாதிப்பு பற்றி...

மறு சீரமைப்புப் பணி சவாலாக
இருக்கும்- நவீன் பட்நாயக்- பேட்டி
ஒடிசாவில், பைலின் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், மறுசீரமைப்புப் பணிகள் சவாலாக இருக்கும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் கூறினார்.பைலின் புயல் பாதிப்பு பற்றி திங்களன்று செய்தி யாளர்களிடம் பேசிய முதல்வர் நவீன் பட்நாயக் கூறியதாவது:ஒடிசாவில் பைலின் புயல் போன்ற பேரிடர் இதற்கு முன் ஏற்பட்டதில்லை.
தற்போது ஏற்பட்ட இந்த புயல் சீற்றத்தால் 9 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மக்களை காப்பதற்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும் மறுசீரமைப்புப் பணிகள் சவாலாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார் .மேலும் அவர் கூறுகையில், புயல் மற்றும் மழையால் 2400கோடி ரூபாய்மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்திருப்பதாகவும் மொத்தம் 12 மாவட்டங்களில் 14,514 கிராமங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

No comments: