Friday 18 October 2013

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் .

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று நான் ஏற்கனவே கடந்த மார்ச் 25-ம் தேதி கடிதம் எழுதியிருந்தேன். இதுதொடர்பாக தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் இலங்கைக்கு அது ஊக்கம் அளிப்பது மட்டுமல்லாமல், தமிழகத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, தமிழ் மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு இந்த மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும். இதன்மூலம் இலங்கைக்கு இந்தியா அழுத்தம் தரமுடியும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments: