Saturday 19 October 2013

18.10.2013 நடந்தவை....

அருமை தோழர்களே!  அனைவருக்கும் வணக்கம் ...

நமது K.G.போஸ் அணி BSNLEU சங்கத்தின் தொடர் முயற்சியால்தான்  நாம் பணிபுரியும் BSNL நிறுவனத்தையும்ஊழியர் நலன்களையும் ஒருசேர பாதுகாத்து உள்ளோம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. நமது சங்கத்திலிருந்த சிலர்வளர்த்த தாயை எட்டி உதைக்கின்ற கதையாக தற்போது  நமது பெருமைமிகு BSNLEU சங்கத்திற்கு எதிராக சீர்குலைவு பணியில் களம் இறங்கி உள்ளனர்

குறிப்பாக நமது மாவட்டத்தில் மாநில,மாவட்ட பொறுப்பில் இருந்த சிலர் நமது சங்க அங்கத்தினர்களிடம் தவறானஉண்மைக்கு மாறான செய்திகளை கூறிஏதோ உல்லாச பயணம் செல்வதை போன்று, நாங்கள் அங்கே போகிறோம் நீங்களும் வாருங்கள் என்று அழைத்துக்கொண்டு இருப்பதாக அறிகிறோம்.

BSNLEU கிளையை இல்லாமல் செய்து விடுவோம் என கூக்குரலிட்டு அவர்களிடம் இருந்த ஓரிரு கிளைகளின் செயலர் பதவியை ராஜினாமா செய்வதின் மூலம் (சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் திருமணமே என்று கருதுபவர்கள் போல்கதை முடிந்து விடும் என நினைத்தவர்களுக்கு வாய் அடைக்கும் விதமாக ..... மதுரையில்திருப்பாலைபழங்காநத்தம் ஆகிய இரண்டு இடங்களிலும் ஸ்தலமட்ட தோழர்களின் உளப்பூர்வமான ஒத்துழைப்போடு மிகவும் உற்சாகமாக கிளையை புனரமைத்துள்ளோம் என்பதை அகமகிழ்வோடு பதிவு செய்கிறது மாவட்ட சங்கம்மாவட்ட செயற்குழு எடுத்தமுடிவை மனநிறைவோடு அமுல்படுத்தியுள்ளோம்.

18.10.2013 அன்று மாலை அழகப்பநகர் தொலைபேசி நிலையத்தில்  நடைபெற்ற கூட்டத்தில்தோழர்சிசெல்வின் சத்தியராஜ், COS, தோழர்எஸ்சூரியன், D/S, மாவட்ட சங்க நிர்வாகிகளான தோழர்கள், மானுவேல் பால்ராஜ்மாயாண்டி, ரவிச்சந்திரன்வெங்கடேசன், இராமலிங்கம் மற்றும் கிளை செயலர்களான தோழர்கள் சுப்புராஜ்கிருபானந்தன்சண்முகவேல்சாத்தாவுகுருசாமி  மற்றும் முன்னணி தோழர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டது நல்ல அம்சமாகும்இக்கூட்டத்தில் கீழ்கண்ட தோழர்கள் வரும் 2013-2014 ஆண்டிற்கான நிர்வாகிகளாக தலைவர், செயலர், பொருளராக  முறையே  தோழர்கள் P. ஜெகநாதன், V.K. ராஜமார்த்தாண்டன், M. முருகன் .ஆகியோர்  தேர்ந்து எடுக்கப் பட்டுள்ளனர்.   புதிய நிர்வாகிகள் பணி சிறக்க நமது மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.   
பழங்காநத்தம் BSNLEU  கிளை புணரமைப்பு மாநாட்டின் போது . . . . 
 
         

No comments: