Monday 7 October 2013

மத்திய அரசு ஊழியர் காலவரையற்ற வேலைநிறுத்தம்..

6 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பவேண் டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் மாதம் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.கிருஷ்ணன் கூறினார்.மத்திய, மாநில பொதுத் துறை நிறுவனங்கள், மாநில அரசு ஊழியர்களுக்கு              5 வரு டங்களுக்கு ஒரு முறை ஊதிய விகிதம் மாற்றப்படு கிறது. மத்திய அரசு ஊழி யர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய மாற்றம் செய்யப்படுகிறது.அதன்படி, 1.1.2011 முதல் 7வது ஊதியக் குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் கடந்த 3 ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தி வரு கின்றனர். இதனால் மத்திய அரசு 7வது ஊதியக் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தது. இந்த ஊதியக் குழுவின் முடிவுகள் 2016 ஜனவரி முதல் அமலாக்கப் படும் என்று அறிவித்துள்ளது. இதனை மத்திய அரசு ஊழியர்கள் ஏற்க மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில், 7வது ஊதி யக்குழு அளிக்க உள்ள பரிந் துரைகளை 1.1.2011ம் தேதியி லிருந்து அமல்படுத்த வேண் டும், 50 விழுக்காடு பஞ்சப் படியை அடிப்படை ஊதியத் துடன் இணைத்து, ஓய்வூதி யம் உள்ளிட்ட அனைத்து நிதிப் பயன்களையும் வழங்க வேண்டும்,3 லட்சம் கிராம அஞ்சல் துறை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, அவர் களை 7வது ஊதியக்குழு வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், ஓராண்டு காலி யாக இருந்தால் அந்த பணி யிடங்களை நிரப்பத் தேவை யில்லை என்ற முடிவை திரும்பப் பெற வேண்டும், பணிக்காலத்தில் 5 பதவி உயர்வு வழங்க வேண்டும்.புதிய ஓய்வூதிய திட் டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 கோரிக் கைகளை வலியுறுத்தி டிசம் பர் மாதத்தில் காலவரை யரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.இதனையொட்டி மத் திய அரசு ஊழியர் மகா சம் மேளனத்தின் சார்பில் வேலை நிறுத்த தயாரிப்பு மாநாடு மற்றும் அமைப்பு மாநாடு சனிக்கிழமையன்று (அக்.5) சென்னை தி.நகரில் உள்ள ஜெர்மன் ஹாலில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு அமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.கிருஷ்ணன், “பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சி களுமே மத்திய அரசு ஊழி யர்களுக்கு விரோதமாகவே நடந்து கொள்கின்றன. இந்த இரு கட்சிகளும் சேர்ந்து தான் புதிய பென்சன் மசோ தாவை கொண்டு வந்துள் ளன.” என்றார்.“துறைகள் தோறும் நடை பெற்று வரும் வாக்கெடுப் பில் 90 விழுக்காடு ஊழியர் கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய தயார் என்று வாக்களித்துள்ளனர். மகா சம்மேளனத்தின் தொடர் போராட்டத்தா லும், தில்லி சட்டமன்ற தேர்தலில் பெரும் பகுதியாக உள்ள மத்திய அரசு ஊழியர் கள், ஓய்வூதியர்களின் வாக்கு களை பெறவும் 7வது ஊதி யக்குழு அமைக்கப்பட்டுள் ளதுஎன்றும் அவர் கூறி னார்.“7வது ஊதியக்குழு அமைக்கப்பட்டால் மட் டும் போதாது. சம்மேளனம் முன்வைத்த 15 அம்ச கோரிக் கைகளை ஏற்க வலியுறுத்தி டிசம்பர் மாதத்தில் வேலை நிறுத்தம் நடைபெறும். அக்.23 தில்லியில் கூடும் செயற்குழு கூட்டத்தில் வேலைநிறுத்ததேதி அறி விக்கப்படும்என்றும் கிருஷ்ணன் கூறினார்.இந்த மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் .ஜி.பசுபதி தலைமை தாங்கினார். மாநிலப் பொதுச்செயலாளர் எம்.துரைப்பாண்டியன், பொருளாளர் .சுந்தரம் மற்றும் ஜெ.ராமமூர்த்தி (அஞ்சல்), எம்.எஸ்.வெங்க டேசன் (வருமானவரி) உள் ளிட்டோர் பேசினர்


No comments: