Saturday 26 October 2013

மாணவிக்கு படிப்பதற்கு உதவி செய்யவேண்டும்

வழக்கறிஞராக விரும்பும் நரிக்குறவர் மாணவி

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ளது எச். தொட்டம்பட்டி நரிக் குற வர் காலனி. இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசை அமைத்து பல ஆண்டுகாலமாக வசித்து வருகின்றனர். இவர்களது தொழில் ஊசி, பாசிமணி விற்பதும், கிராமங்களில் திருவிழா நடைபெற்றால் குழந்தைகளுக்கு தேவை யான விளையாட்டு பொருட் களும் விற்பது தான். நரிக்குறவர் காலனியைச் நேர்ந்த ராமையா(42) லல்லி (38) தம்பதியினரின் மகன் பிரசாத் (20). பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். அஜித் (15) பத்தாம் வகுப்பும், ராகுல் (12) 8 ம்வகுப்பும் படித்துவருன்றனர். மகள் கல்கி (18) தருமபுரி அரசு கல் லூரியில் பி. காம், (வணிக வியல்) முதலாம் ஆண்டு படித்துவருகிறார். தருமபுரி மாவட்டத்திலேயே குறவர் சமூகத்தில் கல்லூரி படிப் பிற்கு செல்லும் முதல் மாணவி என்ற பெருமைக் குரியவர் இவர். தனது விருப்பம் குறித்து தெரிவித்த கல்கிநான் ஏழ் மையான குடும்பத்தைச் சார்ந்தவள். என் அப்பா, அம்மா ஊசி, பாசிமணி, விற்றுதான் படிக்கவைக் கிறாங்க. என் அம்மாவுக்கு உடம்புசரியில்ல.படிக்க வைக்க பணம் இல்லாத கார ணத்தினால் என் படிப்பை பாதியிலேயே நிறுத்திடச் சொன்னாங்க. கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னாங்க. நான் படிக் கிறேன்னு அடம்பிடிச்சி கல்லூரி சேர்ந்து படிச்சு வர்றேன். நான் வழக்கறிஞராக ஆசைப்படுறேன். என் சமு தாயத்தில் எல்லோரும் படிக்கனும்னு ஆசப்படு றேன். இதற்காக நான் என் சமூக மக்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்துவேன்என்று உற்சாகத்துடன் அவர் கூறினார்.நரிக்குறவர் சமூகத்துக்கே முன் உதாரணமாக இருக்கும் மாணவிக்கு மாவட்ட நிர் வாகமும் அரசும் படிப்பதற்கு உதவி செய்யவேண்டும் என் பதே அனைவரின் எதிர் பார்ப்பாகும்.

No comments: