Wednesday 1 June 2016

போதைப் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரம் கேரளத்தின் தூதராகிறார் சச்சின்.

கேரளாவில் மது மற்றும் போதைப் பொருள் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தில் தனது பெயரை பயன்படுத்திக்கொள்ள சச்சின் டெண்டுல்கர் அனுமதி வழங்கியுள்ளார்.கேரளா பிளாஸ்டர்ஸ் கால்பந்து கிளப் (கேபிஎப்சி) உரிமையாளர்களான சச்சின் டெண் டுல்கர், நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜூனா, தொழிலதிபர் நிம்ம கட்டா பிரசாத் ஆகியோர் திரு வனந்தபுரத்தில் உள்ள கேரள தலைமைச் செயலகத்தில் முதல்வர் பினராயி விஜயனை புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.இந்தச் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறும் போது, “கேரளாவில் மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தை வலுப் படுத்துவதற்கு கேரள அரசு தனதுபெயரை பயன்படுத்திக் கொள்ளசச்சின் அனுமதி வழங்கியுள் ளார். இந்தப் பிரச்சாரத்தில் ஒத்துழைக்கவும் ஒப்புக்கொண்டுள் ளார். இந்தப் பிரச்சாரத்தில் மாநிலத்தின் தூதராக சச்சின் டெண் டுல்கர் நியமிக்கப்படுவது உள் ளிட்ட பிற விசயங்கள் குறித்து பின்னர் விவாதிக்கப்படும்.கேரளாவில் திறமையான கால்பந்து வீரர்களை உருவாக்க, தங்கும் வசதியுடன் கூடிய கால் பந்து அகாடமி தொடங்க கேபிஎப்சி ஒப்புக்கொண்டுள்ளதுஎன்றார்.சச்சின் டெண்டுல்கர் கூறும் போது, “கேரளாவில் அடுத்த 5 ஆண்டுகளில் சர்வதேச தரத் திலான கால்பந்து வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதே கேபி எப்சி-யின் முக்கிய நோக்கம். இன் னும் சில ஆண்டுகளில் நீங்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் இதன்பணிகள் இருக்கும்என்றார்.கேரள விளையாட்டுத் துறை அமைச்சர் .பி.ஜெயராஜன், நிதியமைச்சர் டி.எம்.தாமஸ் ஐசக்ஆகியோர் அப்போது உடனிருந் தனர்.

No comments: