Saturday 31 August 2013

புதிய பென்ஷன் 02.09.13 ஆர்ப்பாட்டம்

02.09.13 புதிய பென்ஷன்- மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் 

ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணையம்  புதிய பென்சன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.அதுதான் ஓய்வூதிய நிதியை கையாளு வதற்கான அறக்கட்டளை வங்கியையும், பதிவேடுகள் காப்பக நிறுவனத்தையும், அமலாக்க அறக்கட்டளையையும், ஓய்வூதிய நிதி நிர்வாக அமைப்புகளையும் , பென்சன் வழங்கும்  கம்பெனிகளையும் நியமித்து செயல்படுத்துகிறது.
நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து அந்த ஆணையத்தையும் புதிய பென்சன் திட்டத்தையும் சட்டப்பூர்வ மாக்கிவிடலாம்என்றுகாங்கிரஸ்ஐ.மு.கூட்டணி அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், அவசரச் சட்டம் காலாவதியாகும் முன் ஒரு மசோதா கொண்டுவர முடியவில்லை. 2005 மார்ச்சில் நாடாளுமன்றத்தில்ஓய்வூதிய நிதி ஒழுங்கு படுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2005” என்பதை அறிமுகப்படுத்தியது. இடது சாரிகளின் எதிர்ப்பால் அந்த மசோதா 14வது நாடாளுமன்றம் முடியும்வரை சட்டமாக நிறை வேற்ற முடியவில்லை. அந்த மசோதாவும் காலாவதியாகிவிட்டது.
நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு 3 திருத்தங்களை  முன்வைத்தது.
1. ஓய்வூதிய நிதியிலிருந்து முக்கிய தே வைகளுக்கு பணம் எடுக்க வழிவகை செய்ய வேண்டும்
2. ஓய்வூதிய நிதி நிர்வாக நிறுவனங்கள் குறைந்தபட்ச லாபத்தை உத்தரவாதம் செய்ய வேண்டும்.
3. மசோதாவில் ஓய்வூதிய நிதி கம்பெனி களுக்கு அந்நிய மூலதனம் வரலாம் என்றும் அது எந்த அளவு வரலாம் என்பது இன்சூர ன்ஸ் திருத்த மசோதாவில் இருக்கும் உச்ச வரம்பைப் பொருத்திருக்கும் என்று கூறப் பட்டுள்ளது.இதன்படிஉடனடியாக26சதவீதம் வரலாம். அதற்கு ஏற்கனவே சட்டம் உள்ளது. திருத்த மசோதா 49 சதவீதத்தை இப்போது பிறப் பித்துள்ளது. சட்டம் நிறைவேறினால் ஓய் வூதிய நிதிக் கம்பெனிகளிலும் அந்நிய மூல தனம் 49 சதவீதம் வரலாம். நாளைக்கு 74 சத வீதம், 100 சதவீதம் என்று அந்த சட்டம் திருத் தப்பட்டால் அதுவும் இதற்குப் பொருந்தும்.
1. ஊழியரின் பங்கிலிருந்து 25 சதவீதம் வரை கடன் பெறலாம். அரசின் பங்கில் கடன் கோர முடியாது. எதற்காக, எத்தனைமுறை, எவ்வ ளவு வரை கடன் பெறலாம் என்பதை ஆணை யம் முடிவு செய்யும்.2. மசோதாவுக்குள்ளேயே ஓய்வூதிய நிதி கம்பெனிகளில் அந்நிய மூலதனம் 26 சதம் வரை வரலாம் என்று சேர்க்கப்படும்.
இன்சூரன்ஸ் திருத்த மசோதா அந்த உச்ச வரம்பை 49 சதவீதமாக்க ஆகஸ்ட் 14 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக என்று முன்வைக்கப்பட்டது. பட்டியலில் இருந்தது.ஆனால், அரசியல் மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர் எதிர்ப்பால் அது பின் வாங்கப்பட்டது. சிதம்பரம் கருத்தொற்றுமை இல்லாததால் பின்வாங்கப்பட்டதாகவும் கருத்தொற்றுமை ஏற்பட்டால் நாளையே நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.
PFRDAமசோதா 19.8.2013 அன்று முதல் தினந்தோறும் பட்டியலில் வைக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றம் பல காரணங் களால் முடங்கி நேரமின்றி நிறைவேற்றப் படாமல் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.30.8.2013 வரைதான் நாடாளுமன்றக் கூட் டத்தொடர். இரு கட்சிகளும் விவாதத்தைத் தவிர்க்க நாடாளுமன்றத்தை முடக்கி சதி செய்துவிட்டு கடைசியில் குரல் வாக்கெடுப் பில் நிறைவேற்ற சதி செய்கிறார்களா என்பது பரிசீலனைக்குரியது.பாஜகவின் திருத்தங்களை ஏற்றாலும் மசோதா சட்டமானால் புதிய பென்சன் திட்டம் ஒழியாது. திருத்தங்கள் புதிய பென்சன் திட் டத்தை ஒழித்து பழைய பென்சனை கொண்டு வரும் நோக்கில் இல்லை என்பதை புரிந்து கொண்டால் பாஜகவும் காங்கிரசும் ஒண்ணு உழைப்பவன் வாயில் மண்ணு என்பதை புரிந்துகொள்ளலாம்.
ஓய்வூதிய நிதி நிர்வாக நிறுவனங்களும் அறக்கட்டளை வங்கியும் தனியாரானால், பின் அந்நிய மூலதனமும் வந்தால் வெனிசுலாவில் ஓய்வூதிய நிதியை எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளையடித்தது போல போய்விடும்.
பங்குச்சந்தையில் மூல தனமிடவே பணமிருக்காது.மேற்கு வங்கம், திரிபுரா தவிர அனைத்து மாநிலங்களிலும் புதிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்டது. இடதுசாரிகள் மேற்குவங்கம் கேரளா, திரிபுரா அரசில் இருந்த போது தடுத்துவைத்தனர். கேரளாவில் 1.4.2013 முதல் புதிய பென்சன் திட்டம் அமலாகிறது. அந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் கூட செய்துவிட்டனர்.ஆணைய தலைவரின் கூற்றுப்படி இந்தி யாவில் இதுவரை 53 லட்சம் பேர் இந்த திட் டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
.நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிதி அமைச்சர் கொடுத்த ஒருபதிலில் 2012-13ல் 47,70,503 பேர் சேர்ந்திருப்பதாகவும் அவர் களின் மொத்த ஓய்வூதிய நிதி ரூ.29852 கோடி என்றும் கூறியுள்ளார்.17.8.2012ல் ரூ.17,623 கோடி இந்த நிதியாக இருந்தது என்றும் அதில் மத்திய அரசு ஊழியர்களின் பங்கு ரூ.11,315 கோடி என் றும் மாநில அரசு ஊழியர்களின் பங்கு ரூ.5500 கோடி என்றும் மற்ற தனியார் கம்பெனிகளிடம் இருந்து வந்தது வெறும் ரூ. 801 கோடி என்றும் தெரிகிறது.
வெளியே போராட்டம் தீவிர மானால் மசோதா இந்த 15வது மக்களவை யிலும் நிறைவேறாது. மத்திய அரசு ஊழியர்கள் வாக்கெடுப்பு வரும் தினத்தில் 2 மணி நேர வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். ரயில்வேயும் சேர்ந்தால் பலன் அதிகம் இருக்கும்.
அனைவருக்கும் 1.1.2004 முதல் புதிய பென்சன் திட்டம் அமலானால் தமிழகத்தில் மட்டும் 1.4.2003 முதலே அமல்படுத்தப்பட்டு விட்டது. அமல்படுத்தியது அண்ணாதிமுக அரசு. அதன் பின் வந்த திமுக அது நல்லது என்று கண்டது. அதைத்தொடர்ந்தது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கடைசி தினத்தில் ஜெயலலிதா அவர்கள் புதிய பென்சன் திட்டத்தை வாபஸ் வாங்குவேன் என்று அறிவித்தார். அதற்கேற்றாற்போல மசோதா 2011 மார்ச்சில் அறிமுகப்படுத்தப் பட்டபோது இடதுசாரிகளோடு சேர்ந்து அதிமுக எதிர்த்து வாக்களித்தது.
ஆனால், தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியப் பணம் அறக்கட்டளை வங்கிக்கு இப்போது அனுப்பப்பட்டு எல்லா ஊழியர்களிடமும் நிரந்தர ஓய்வுக் கணக்கு எண்  வழங்க கையெழுத்து வாங்கப்படுகிறது
அருமை தோழர்களே ! மதுரை நேதாஜி சிலை அருகில் 02-09-13 மாலை 6 மணிக்கு நகர தொழிற் சங்கங்களின் சார்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம் .
...என்றும் தோழமையுடன் ...எஸ். சூரியன் ----மாவட்ட செயலர் 

பணி ஓய்வு சிறக்க தோழமை வாழ்த்துக்கள் . . . .

தோழர் S.ராமலிங்கம் ,மாவட்ட அமைப்புசெயலர் 
உளமார வாழ்த்துகிறோம்  . . . .

நமது மாவட்ட சங்கத்திற்கு எல்லாநேரமும் ,எந்த பணியாக இருந்தாலும் முகம் சுளிக்காமல் தொடர்ந்து ஒரு வாலிபனை போல் சுறுசுறுப்பாக கொஞ்சம் கூட சலிப்பு இல்லாமல் ,இலக்கா பணியாக இருந்தாலும் ,சங்க பணியாக இருந்தாலும் பம்பரமாக சூழன்று கொண்டு இருக்கும் அருமை தோழர் எஸ்.இராமலிங்கம் அனைவரின் பாராட்டுக்கு உரியவர் என்றால் அது மிகை ஆகாது .நமது தோழருடன் சேர்த்து 5பேர் இன்று பணி நிறைவு செய்கிறார்கள் ,அனைவரின் பணி ஓய்வு காலம்சிறக்க  மனதார , உளமார வாழ்த்துகிறோம்  . . . . 
நமது அருமை தோழர் எஸ்.இராமலிங்கம் ,அவர்களுக்கு மதுரை மாவட்ட சங்கம் எதிர்வரும் 03.09.13 அன்று ,திருமங்கலத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளது ,அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம் .
. . . என்றும் தோழமையுடன் ---எஸ்.சூரியன் ,மாவட்ட செயலர் .

Friday 30 August 2013

ஓய்வூதியர்கள் கோரிக்கைக்காக தர்ணா 28.08.13

ஓய்வூதியர்களுக்கும் 78.2 IDAவழங்கவலியுறுத்திதர்ணா . . . . 
ஓய்வூதியர்களுக்கும் 78.2 விழுக்காடு பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண் டும் என்று வலியுறுத்தி அகில இந்திய பிஎஸ்என்எல்- டெலிகாம் துறை DOT ஓய்வூதியர் சங்கம் சார்பில் வியாழனன்று (ஆக.29) தமிழ கம் முழுவதும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.புதிய பென்சன் மசோ தாவை திரும்ப பெற வேண் டும், DOT ஓய்வூதியர் களுக்கு மாதம் 1200 ரூபாய் மருத்துவப்படி வழங்க வேண் டும், பிஎஸ்என்எல் ஓய்வூதி யர்களுக்கு நிறுத்தப்பட்ட மருத்துவப்படியை மாதந் தோறும் திரும்ப வழங்க வேண்டும்; ஆண்டு வரம்பு, புதிய சம்பளத்தில் 30 நாட் களாக உயர்த்த வேண்டும்.
பிஎஸ்என்எல்-லில் இருந்து 1.10.2000 முதல் 31.7.2011 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு உள்ள ஓய்வூதியக் குறைபாட்டை சரி செய்ய வேண்டும்.இறுதியாக பெற்ற ஊதியத்தில் 60 விழுக் காட்டை ஓய்வூதியமாக வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியத்தை குறைந்தபட் சம் 3880 ரூபாயாக உயர்த்த வேண்டும், இறுதிச்சடங்கு நிதியாக 15ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் DOT ஓய்வூதியர்களுக்கு பிராட் பேண்ட் சலுகை நீட்டிக்க வேண்டும், ஓய்வூதியர் களுக்கு குடியிருப்பு வாடகை, அடிப்படை ஊதியத்தில் 10விழுக்காடு என நிர்ண யிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 23 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற் றது.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி , மதுரையில் தர்ணா நடைபெற்றது பிஎஸ்என்எல் LEVEL -4 அலுவலகம் முன்பு தர்ணா நடைபெற்றது.இப்போராட்டத்திற்குதோழர் பி .முருகேசன்  தலைமை தாங்கினர்.BSNLEU  சங்கத்தின் தமிழ் மாநிலஅமைப்பு  செயலாளர் தோழர்.சி .செல்வின் சத்தியராஜ் சிறப்புரை நிகழ்த்தினார்  போராட்டத்தை தொடங்கி வைத்து தோழர் .எஸ்.சூரியன் BSNLEU  மாவட்ட செயலர் உரையாற்றினார் . தோழர் எம் .செல்வராஜ் கோரிக்கையை விளக்கி உரையாற்றினார்..
போராட்ட வாழ்த்துக்களுடன் ....எஸ்.சூரியன் ---மாவட்ட செயலர் .

Thursday 29 August 2013

நம்மை காக்கும் சங்கத்திற்கு நிதி தாரீர் . . . . .

நிதி நினைவூட்டல் வேண்டுகோள் . . .NO - 2
நமது சங்கத்திற்கு நிதி தாருங்கள் . . . . . 
தோழர்களே !

 நமது  உரிமைக்காக  தொடர்ந்து போராடி வரும்நமது பாதுகாவலன் BSNLEU  சங்கத்துக்கு நிதி  தாரீர் . . . . . 
  மத்திய  சங்கத்துக்கு :  ரூ .100            
  மாநில சங்கத்துக்கு  :  ரூ .100  
  மாவட்ட  த்துக்கு        :  ரூ .100 
 
 கிளைக்கு நிதி              :  ரூ .100   

வசூல் செய்திட  வேண்டுகிறோம்  
 நமது  கிளைசெயலாளர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் முழுக் கவனம் செலுத்தி நன்கொடையினை நமது உறுப்பினர்களிமிருந்து வசூல் செய்து  காலத்தே மாவட்டப் பொருளர் தோழர். எஸ். மாயாண்டி அவர்களிடம்   ஒப்படைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் தோழமையுடன்,

S. சூரியன் - மாவட்ட செயலர்.