Saturday 28 February 2015

28.02.15 பணி நிறைவு செய்வோருக்கு BSNLEU வாழ்த்துக்கள் ...
























28.02.2015 அன்று நமது மதுரை  மாவட்டத்தில் ஓய்வு பெறும் அனைத்து ஊழியர்களுக்கும், அதிகாரிக்கும், மதுரை மாவட்ட BSNLEU சங்கத்தின் நல் வாழ்த்துக்கள். ...
அனைவரின் பணி ஓய்வு காலமும் சிறப்பாக அமைய நமது இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்
 ... என்றும் தோழமையுடன் --எஸ்.சூரியன் D/S-BSNLEU

மோடிக்கு கார்ப்பரேட்கள் வாரி வழங்கிய நன்கொடை . . .

மோடிக்கு கார்ப்பரேட் வழங்கிய நன்கொடைஜனநாயக சீர்திருத்த அமைப்பு பட்டியலை வெளியிட்டது
பாஜகவை சேர்ந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் காலத்தில் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் பல நூறுகோடி ரூபாய்களை நன்கொடையாக வாரி இறைத்திருக்கின்றன. இந்தியாவில் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவது வழக்கம். அந்த வகையில் மக்களிடம் இருந்தும், கட்சி உறுப்பினர்களிடம் இருந்தும், தொழில் அதிபர்களிடம் இருந்து அரசியல் கட்சிகள் நன்கொடையை திரட்டுகின்றன.
ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எப்போதும் ஆதரவாக செயல்படும் பாரதிய ஜனதா கட்சி, தேர்தல் நேரத்தில் அந்த நிறுவனங்களிடம் பல நூறு கோடிக் கணக்கான ரூபாயை நன்கொடையாய் பெற்றிருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. கடந்த தில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெளிநாடுகளில் இருந்தும்,தொழில் அதிபர்களிடம் இருந்தும் கோடி கணக்கான ரூபாயை நன்கொடையாக பெற்றது என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியது. பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் இதை பெரிய குற்றச்சாட்டாக தெரிவித்தார். ஆனால் அவருடைய பாரதிய ஜனதா கட்சியே தில்லி சட்டசபை தேர்தலையொட்டி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து அதிக நன்கொடை பெற்றது இப்போது தெரியவந்துள்ளது. தில்லி தேர்தலையொட்டி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பாரதிய ஜனதா கட்சி மொத்தம் ரூ.60.78 கோடி நன்கொடை பெற்றது தெரியவந்துள்ளது.இதுகுறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கடந்த 2013-2014-ம் ஆண்டில் மொத்த தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடையில் பாரதிய ஜனதா கட்சி 69 சதவிகிதம் நன்கொடை பெற்றுள்ளது. அதாவது கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்ற கட்சிகளில் பாரதிய ஜனதா கட்சி முதலிடத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடை குறித்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது
:-பாரதிய ஜனதா கட்சி கடந்த 2012-13-ம் நிதி ஆண்டில் ரூ.83.19 கோடி நன்கொடை பெற்றது. இது கடந்த 2013-2014-ம் ஆண்டில் ரூ.87.67 கோடியாகவும், 2014-2015-ம் ஆண்டில் 170.86 கோடியாக உயர்ந்து விட்டது. அதாவது பாரதிய ஜனதாவின் நன்கொடை வசூல் 2012-2013-ம் ஆண்டை விட 2014-2015-ம் ஆண்டில் இரு மடங்கு மேல் உயர்ந்திருக்கிறது. பார்தி குழுமத்தின் சத்யா எலக்ட்ரோல் அறக்கட்டளை பாரதிய ஜனதா கட்சிக்கு 3 தடவையாக கடந்த 2012-2013-ம் ஆண்டில் ரூ.41.37 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளது.இதேபோல் சத்யா எலக்ட்ரோல் அறக்கட்டளை காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2013-2014-ம் ஆண்டில் 36.50 கோடியை கொடுத்து உள்ளது. சரத்பவாரின் தேசியவாத கட்சிக்கு சத்யா எலக்ட்ரோல் அறக்கட்டளை கடந்த 2013-2014-ம் ஆண்டில் அளித்து உள்ளது.தேசிய அரசியல் கட்சிகள் கடந்த 2013-2014-ம் ஆண்டில் மொத்தம் ரூ. 247 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளன. இது கடந்த 2012-2013-ம்ஆண்டை விட 158 சதவிகிதம் அதிகமாகும்.மாநிலம் வாரியாக பார்த்தாலும் பாரதிய ஜனதா கட்சி தான் அதிக நன்கொடை வசூலித்தது தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ரூ.23.25 கோடியை வசூலித்து முதலிடத்தில் உள்ளது. மராட்டிய மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ரூ. 22.24 கோடியை வசூலித்து முதலிடத்தை பிடித்து உள்ளது. இதெல்லாம் வெளிப்படையாக தெரிந்த நன்கொடைகள் மட்டுமே ஆகும். அதானி குழுமம் போன்ற பாஜக மற்றும் மோடி விசுவாச கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்லாயிரங்கோடிகளை வரி இறைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிரதிபலனாகவே,தற்போது நரேந்திர மோடி அரசு மக்கள் நலனை பின்னுக்கு தள்ளி, கார்ப்பரேட் நலனை முன்நிறுத்தி வருகிறார். மேலும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர் போன்று செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுக்களையும் மோடியின் மீது சமூக ஆர்வலர்கள் வைக்கின்றனர். பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, பூடான், நேபாளம், பிரேசில், பல்கேரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்பட பல நாடுகளில் அரசியல் கட்சிகள் நன்கொடை வசூலிப்பதில் வெளிப்படைத் தன்மை உள்ளது. ஆனால், இந்தியாவில் மட்டும் அரசியல் கட்சிகள் நன்கொடை வசூலிப்பதில் மறைமுகப் போக்கை கடைப்பிடிக்கின்றன என்று ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.

28.02.15 இன்று...சர்.சி.வி.ராமனின் பிறந்த நாள் . . .

இந்தியாவின் மகத்தான விஞ்ஞானிகளில் ஒருவரான 


சர்.சி.வி.ராமனின் 


பிறந்த நாளான இன்று (பிப்ரவரி 28) தேசிய 



அறிவியல் நாளாக கொண்டாடப்படுகிறது . . .

நமது BSNLEU தமிழ் மாநில சங்க சுற்றிக்கை ...

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU தமிழ் மாநில சங்கம்  சுற்றிக்கை களை வெளியிட்டுள்ளது  அவற்றை காண இங்கே கிளிக் ...எண் -21  எண் 22
எண் -23 

Friday 27 February 2015

26.02.15 அனைத்து தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டம் . . .

அருமைத் தோழர்களே ! 26.02.15 வியாழன் மாலை மதுரை தலைமை தபால் நிலையம் முன்பாக CITU தலைவர் தோழர்.பிச்சை அவர்களின் தலைமையில்மதுரைஅனைத்துதொழிற்சங்கங்கள்சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...
ஆர்பாட்டத்தில், CITU, AITUC, LPF, INTUC, HMS, BMS, AICCTU போன்ற அனைத்து மத்திய தொழிற்சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர் அனைத்து தரப்பு நிர்வாகிகளும் கோரிக்கையை விளக்கி பேசினர். பொதுத்துறை நிறுவனங்கள் என்ற அடிப்படையில் LIC,  நமது BSNL போன்ற தொழிற்சங்க தோழர்களும் கலந்து கொண்டனர்.
நமது BSNLEU சங்கத்தின் சார்பாக தோழர்கள்...எஸ். சூரியன், என். செல்வம், எ.நெடுஞ்சழியன், ஆர். குருசாமி, எஸ். சலீம், வி. செல்லன் மற்றும் TEPU சார்பாக தோழர்.என்.முருகன், தோழியர். டி.மகேஸ்வரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

BSNL ஊழியர்கள் மார்ச் 17 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்.

BSNLநிறுவனத்தைப் பாதுகாத்திட வரும் மார்ச் 17முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கிட BSNLஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.BSNL நிறுவனத்தைப் பாதுகாத்திட BSNL ஊழியர்கள் நாடு முழுவதும் ஒரு கோடிபேர்களிடம் கையெழுத்துக்கள் பெற்றனர். அந்த கையெழுத்துக்களை பிரதமரிடம் ஒப்படைப்பதற்கான மாபெரும் பேரணி புதுதில்லியில் 25.02.15 அன்று நடைபெற்றது.
BSNL கார்ப்பரேட் நிறுவனத்திலிருந்து நாடு முழுவதும் இருந்து வந்திருந்த அனைத்து சங்கங்களையும் சார்ந்த ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஜன்பத் வழியாக நாடாளுமன்ற வீதிவரை வந்தார்கள். அங்கே நடைபெற்ற பேரணி/ஆர்ப்பாட்டத்தில் BSNL ஊழியர் சங்கங்களின் கன்வீனர் VAN. நம்பூதிரி, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் P. அபிமன்யு மற்றும் அனைத்து BSNL சங்கங்களின் பொதுச் செயலாளர்களும் உரையாற்றினார்கள்.
BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் P. அபிமன்யு கூறியதாவது:“மத்திய அரசுக்குச் சொந்தமான   BSNL நிறுவனத்தை மேம்படுத்தாமல், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவற்றுக்குச் சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.2006 முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் BSNL நிறுவனத்தை மேம்படுத்த எந்தத் திட்டத்தையும் அமல்படுத்தவோ, புதிய கருவிகளை வாங்கவோ மத்திய அரசு அனுமதிக்க வில்லை.மாறாக, தனியார் நிறுவனங்களான ஏர்டெல், வோடாபோன் போன்றவற்றிற்கு பல சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.இதேபோல் அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் BSNL தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. புதிய திட்டங்களைச் செயல்படுத்தத் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகள் கடனுதவி அளித்து வருகின்றன. ஆனால், மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் BSNL நிறுவனத்துக்கு எந்த வங்கியும் கடன் அளிக்க முன்வருவதில்லை.இவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது.இவ்வாறு மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், பொதுத்துறை நிறுவனமான BSNL நிறுவனத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது. தனியார்நிறுவனங்களுக்கு வழங்குவது போல் BSNL நிறுவனத்துக்கும் சலுகைகளை வழங்கி, நிறுவனத்தைப் பாதுகாத்திட மத்திய அரசு முன் வர வேண்டும். மத்திய அரசு  BSNL நிறுவனத்தின் கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணிக்குமானால் வரும் மார்ச் 17 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கிடவும் முடிவு செய்துள்ளோம்’’ என்று கூறினார்.
டெல்லி பேரணிக்கு  தமிழகத்திலிருந்து,BSNL ஊழியர்சங்கத் தலைவர் எஸ். செல்லப்பா, மாநிலச் செயலாளர் பாபு ராதாகிருஷ்ணன், துணைச் செயலாளர் V.P.. இந்திரா உட்பட 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வந்திருந்தார்கள்..தீக்கதிர்  

தமிழக திட்டங்களுக்கு சாவுமணி அடித்தது மோடி அரசு.

தமிழகத்துக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களைநிறைவேற்ற 2015- 2016-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் தேவையான நிதி ஒதுக்கப்படாதது மட்டுமல்ல; அந்த திட்டங்களையே மோடி அரசு கைவிட்டுள்ளது.கடந்த 2013- 2014-ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 12 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு, கடந்தகாங்கிரஸ் கூட்டணி அரசால் போடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிலும், 2014- 2015-ம் ஆண்டுக்கான பாஜக அரசின் பட்ஜெட்டிலும் போதிய புதிய ரயில்கள் அறிவிக்கப் படவில்லை.அதிலும், கடந்த 3 ஆண்டுகளில் தமிழக தென் மாவட்டங்களுக்கு புதிய ரயில்கள் அறிவிக்கப்படவில்லை.தமிழகத்துக்கு ஏற்கனவே அறி விக்கப்பட்ட ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற ரூ.10 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுகிறது. ஆனால், இதுவரை ரூ.679 கோடி நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி அனைத்தும் தமிழகத்தின் புதிய ரயில் பாதை திட்டங்கள், இரு வழிப்பாதை திட்டங்கள், அகலப்பாதை திட் டங்களுக்கானதாகும்.
2015- 2016-ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு வியாழக்கிழமை தாக்கல் செய்தார். ஆனால், அவர் இத்திட்டங்களுக்கு சாவுமணியே அடித்தார். ஏற்கனவே, அவர் ரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், ரயில்வேத் துறையில் `மறுமலர்ச்சியைஏற் படுத்தப் போவதாக 7 குழுக்களை அமைத்தார். குழுக்களின் பரிந்து ரைப்படி, நாடு முழுவதும் அனுமதிஅளிக்கப்பட்ட சுமார் 160 திட்டங் கள் கிடப்பில் போடப்பட்டன. அதில், தமிழகத்துக்கான 24 திட் டங்களும் அடங்கும்.
கடந்தகால ஆட்சிகளில் அறிவிக் கப்பட்டு செயல்படுத்தப்படாமல் இருக்கும் திட்டங்கள் தொடர் ந்து செயல்படுத்தப்பட்டு முடிக்கப் படும் என்று பாஜக அரசின் ரயில்வேஅமைச்சராக முதலில் பொறுப்பேற்ற சதானந்த கௌடா கடந்த பட்ஜெட்டில் தெரிவித்தார்.முக்கிய ரயில் திட்டமான சென்னை- கன்னியாகுமரி இரு வழிப்பாதைத் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வந்தது.அதேபோல, சென்னை- நாகர்கோவில் வரையிலான வழித்தடத்தில் இரு வழிப்பாதை திட்டம், செங்கல்பட்டு- திண்டுக்கல் இருவழிப்பாதை திட்டம் முடங்கி உள்ளன.இவற்றை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்கள் ரயில்வே அமைச்சகத்திடம் இருந்து வராமல் இழுபறியாகவே ஆண்டுகள் ஓடிக்கொண்டு இருந்தன. இவை அனைத்தையும் தற்போது ஒழித்து விட்டது மோடி அரசின் ரயில்வே பட்ஜெட்.
ராயபுரம் ரயில் முனையம்
2012- 2013-ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் சென்னை ராயபுரம் ரயில் நிலையம் 4-வது ரயில் முனையமாகவும், தாம்பரம் ரயில் நிலையம் 3-ஆவது ரயில் முனையமாகவும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.ஆனால், ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக மாற்ற எவ்விதமுயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும், 2013-2014-ஆம்ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் ராயபுரத்தை ரயில் முனையமாக மாற்றுவதற்கான எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.
ஆனால், சிறப்பு திட்டத்தின் கீழ் ராயபுரம் ரயில் முனையமாக்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, நடைமேடைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. அது இனி தொடருமா என்பது தெரியவில்லை.
கிடப்பில் போடப்பட்ட 100 ஆண்டு கோரிக்கை.ஈரோட்டிலிருந்து தாராபுரம் வழியாக பழனி வரையிலான ரயில்வே திட்டம் கிடப்பில் போடப்பட்டது.ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை இணைக்கும் வகையில், ஈரோட்டிலிருந்து தாராபுரம் வழியாக பழனி வரை புதிய ரயில் பாதை அமைக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது.இப்பகுதி மக்களின் 100 ஆண்டுகால கோரிக்கையை ஏற்ற காங்கிரஸ் அரசு இத் திட்டத்தை நிறைவேற்ற 2011-ஆம் ஆண்டு நிதி ஒதுக்கியது. 2011-ல் ரூ.33 கோடியும், 2012-ல் ரூ.10 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது..இவ்வளவு தொகை ஒதுக்கப்பட்ட பிறகும் சர்வே பணிகளைத் தவிர வேறு எந்தப் பணிகளும் நடைபெறவில்லை.ஒதுக்கப்பட்ட பணம் என்னவானது என்ற கேள்விஎழுந்த போது, ரயில்வேத் துறை திடீரென திட்டத்தை நிறுத்தி வைத்தது. காலப்போக்கில் அதைகிடப்பில் போட்டுவிட்டது. இதனால் இப்பகுதி மக்களின் 100 ஆண்டுகால கனவு கேள்விக்குறியாகவே உள்ளது.
கைவிடப்பட்ட புதிய ரயில் பாதை திட்டங்கள்
1. சென்னை- ஸ்ரீபெரும்புதூர் (வழி - பூந்தமல்லி)2. ஆவடி- ஸ்ரீபெரும்புதூர்3. இராமேஸ்வரம்- தனுஷ்கோடி4. தஞ்சாவூர்- அரியலூர்- சென்னை எழும்பூர்5. திண்டிவனம்- கடலூர் (வழி - புதுச்சேரி)6. மயிலாடுதுறை- திருக்கடையூர்- திருநள்ளாறு- காரைக்கால்7. ஜோலார்பேட்டை- ஒசூர் (வழி - கிருஷ்ணகிரி)8. சத்தியமங்கலம்- மேட்டூர்9. ஈரோடு- சத்தியமங்கலம்10. சத்தியமங்கலம்- பெங்களூரு11. மொரப்பூர்- தருமபுரி (வழி - முக்கனூர்)12. மதுரை- காரைக்குடி (வழி - திருப்பத்தூர்)13. வில்லிவாக்கம்- காட்பாடி14. திருவண்ணாமலை- ஜோலார்பேட்டை15. மதுரை- கோட்டயம்16.அரக்கோணம்- திண்டிவனம் (வழி- வாலாஜாபேட்டை)17. சிதம்பரம்- ஆத்தூர் (வழி - அரியலூர்)18. திண்டுக்கல்- கூடலூர்19. திண்டுக்கல்- குமுளி20. காட்பாடி- சென்னை (வழி - பூந்தமல்லி)21. கும்பகோணம்- நாமக்கல்22. மானாமதுரை- தூத்துக்குடி23. நீடாமங்கலம்- பட்டுக்கோட்டை (வழி - மன்னார்குடி)24. தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை
பாதியில் கைவிடப்பட்டவை
1. சென்னை- கடலூர்2. பழனி- ஈரோடு3. திண்டிவனம்- செஞ்சி-திருவண்ணாமலை4.திண்டிவனம்- வாலாஜா- நகரி (திண்டிவனம்- வாலாஜா வரை கைவிடப்படுகிறது)5.ஸ்ரீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி அகலப்பாதைப் பணி6. மதுரை- போடி7. திண்டுக்கல்- கோவைஇரு வழிப்பாதைப் பணி1. திருச்சி- தஞ்சாவூர்2. இருகூர்- போத்தனூர்.