Friday 27 February 2015

26.02.15 அனைத்து தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டம் . . .

அருமைத் தோழர்களே ! 26.02.15 வியாழன் மாலை மதுரை தலைமை தபால் நிலையம் முன்பாக CITU தலைவர் தோழர்.பிச்சை அவர்களின் தலைமையில்மதுரைஅனைத்துதொழிற்சங்கங்கள்சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...
ஆர்பாட்டத்தில், CITU, AITUC, LPF, INTUC, HMS, BMS, AICCTU போன்ற அனைத்து மத்திய தொழிற்சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர் அனைத்து தரப்பு நிர்வாகிகளும் கோரிக்கையை விளக்கி பேசினர். பொதுத்துறை நிறுவனங்கள் என்ற அடிப்படையில் LIC,  நமது BSNL போன்ற தொழிற்சங்க தோழர்களும் கலந்து கொண்டனர்.
நமது BSNLEU சங்கத்தின் சார்பாக தோழர்கள்...எஸ். சூரியன், என். செல்வம், எ.நெடுஞ்சழியன், ஆர். குருசாமி, எஸ். சலீம், வி. செல்லன் மற்றும் TEPU சார்பாக தோழர்.என்.முருகன், தோழியர். டி.மகேஸ்வரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments: