Tuesday 17 February 2015

எகிப்திய கிறிஸ்தவர்கள் 21 பேரின் தலை துண்டிப்பு:

ஐ.எஸ். வெளியிட்ட வீடியோ காட்சியிலிருந்து. | படம்: ராய்ட்டர்ஸ். எகிப்தைச் சேர்ந்த கிறிஸ்தவ பிணைக் கைதிகள் 21 பேரை வரிசையாக மண்டியிட வைத்து, அவர்களது தலையை துண்டிக்கும் வெறிச்செயல் வீடியோவை .எஸ் . அமைப்பு பகிரங்கமாக வெளியிட்டு, சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .இது தொடர் பான வீடியோ காட்சிகளை .எஸ். அமைப்பு ஞாயிற்று கிழமை இரவு வெளியிட் டுள்ளது. அதில், எகிப்திய கிறிஸ்தவர்கள் 21 பேரை கடற்கரைப் பகுதியில் வரிசையாக மண்டியிட வைத்து அமர்த்தி, அவர்களுக்கு பின்னால் .எஸ்தீவிரவாதிகள் முகமூடியுடன்   கருப்பு  நிற உடையில் நிற்பதாகவும் காண்பிக்கப் படுகிறது.  பின்னர், தீவிரவாதி ஒருவர் பேசும் காட்சியும், சிறிது இடைவெளியில் கடற்கரையில் 21 பேரின் ரத்தத்தை அலைகள் அடித்துச் செல்லும்படியான காட்சிகளும் இடம் பெற்று ள்ளன.வீடியோவில் தோன்றிப் பேசும் தீவிரவாதி, கிறிஸ்தவர் களை குறிப்பிடும்படியாக, "சிலுவைப் போராளிகளே, அனைவரும் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள். எங்களுக்கு எதிராக ஒன்றுபட்டு இயங்கும் நீங்கள் உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள். ஒசாமா பின் லேடனை புதைத்த இந்தக் கடலில் உங்களது ரத்தத்தைக் கலப்போம் என்று அல்லாவுக்கு உறுதி அளிக்கிறோம்" என்கிறார்.வீடியோவில் தோன்றும் தீவிரவாதி .எஸுக்கு ஆதரவான லிபிய நாட்டவர் என்று தன்னை வட - அமெரிக்க ஆங்கில மொழித் தோரணையில் அறிமுகப் படுத்தியுள்ளார்..எஸின் இந்த கொடூரச் செயலை சர்வதேச நாடுகள் கண்டித்துள்ளன. எகிப்து அரசு, இந்த சம்பவத்தை அடுத்து தங்களது நாட்டில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
.எஸ். நடத்தும் இந்த காட்டுமிராண்டித்தனத்துக்கு நமது BSNLEU மதுரை  மாவட்ட சங்கம் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறதுஉலக நாடுகள் ஒன்றிணைந்து இதுபோன்ற தீவிரவாதம் என்ற பெயரால் நடத்தப்படும் பேயாட்டத்தை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

கொடுமை ஐயா கொடுமை