உணவு தானியங்களுக்காக மக்களுக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்தும் மத்திய அரசு முயற்சியின் முதல் நடவடிக்கை புதுச்சேரியில் தொடங்கி உள்ளது. அதன் முதல்கட்டமாக, ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் 10 கிலோ அரிசிக்கு பதில் இனி 300 ரூபாய் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
|

பொதுமக்கள் கடும் எதிர்ப்பு:இது குறித்து இல்லத்தரசி கூறுகையில், இந்தத் திட்டம் நடுத்தர, ஏழை மக்களைக் கடுமையாக பாதிக்கும். ஏற்கனவே சமையல் எரிவாயுக்கான மானியத்தை வங்கியில் செலுத்தும் பணம் பெரும்பாலானவர்கள் வீட்டிற்கு போய் சேருவதே இல்லை. இந்தத் திட்டம், அரசாங்கம் தெருவுக்குத் தெரு அனுமதி கொடுத்திருக்கும் மதுபானக் கடைகளின் வருமானத்திற்குதான் பயன்படுமே தவிர ஏழை மக்களுக்குப் பயன்படாது. இதற்கு பதில் 5 கிலோ அரிசியும், பருப்பு வகைகளில் தலா ஒரு கிலோவும் கொடுத்தால் கூட ஏழை மக்களுக்கு உதவியாக இருக்கும்" என்றார்.சமூக ஆர்வலர் தெரிவிக்கையில், "மக்களை ஏமாற்றி அலைக்கழிக்க போட்டிருக்கும் திட்டம்தான் இது. ஏற்கனவே சிகப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வருடத்திற்கொருமுறை தரும் இலவச வேட்டி- சேலைக்கு பதிலாக ரூ.600 பணம் தரப்படும் என்று அறிவித்திருந்தார் முதல்வர் ரங்கசாமி. அதையே இன்னும் முறையாக செயல்படுத்தப்படவில்லை. ஒரு ஊரில் 500 சிகப்பு அட்டைதாரர்கள் இருக்கிறார்கள் என்றால் 50 அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்தத் தொகை வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்கள் அங்கன்வாடி மையத்துக்கும், ரேஷன் கடைகளுக்கும் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது இந்தத் திட்டத்தை இவர்களால் சரியாக செயல்படுத்த முடியும் ? ரேஷன் அரிசியை நிறுத்தி மக்களை நயவஞ்சமாக ஏமாற்றப் பார்க்கிறது இந்த அரசு" என்றார்.
1 comment:
உண்மைதான் ஐயா
அக்கவுண்டுக்கு வரும் பணம்
டாஸ்ம்ர்க்கிற்கு அல்லவா போய் சேரும்
Post a Comment