Monday 30 November 2015

30.11.15-ஒப்பந்த ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கை ஆர்பாட்டம்...1


30.11.15-ஒப்பந்த ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கை ஆர்பாட்டம்...

அருமைத் தோழர்களே ! 30.11.15 திங்கள் கிழமை   அன்று காலையில் மதுரை தல்லாகுளம் லெவல்-4வளாகத்தில் ஒப்பந்த ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கை ஆர்பாட்டம் BSNLEU & TNTCWU ஆகிய   இரு மாவட்ட சங்கங்களின் சார்பாக தோழர்கள் செலவின் சத்தியராஜ், வீரபத்திரன் கூட்டுத்தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலர்கள் சூரியன், சோனை முத்து கோரிக்கையை விளக்கி உரையாற்றினர். செல்வம் கோஷம் எழுப்பினார், முத்துப்பாண்டி நன்றிகூறினார்.

தமுஎகச -வின் 29.11.15 முழுநாள் கலை -பண்பாட்டு நிகழ்வு-1


தமுஎகச -வின் 29.11.15 முழுநாள் கலை -பண்பாட்டு நிகழ்வுகள்...

1974-ஆம் ஆண்டு நவம்பர் 23,24 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற்ற செம்மலர் இலக்கிய இதழ் எழுத்தாளர்களின் கூட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (தமுஎச) என்ற பெயரில் ஒரு இலக்கிய அமைப்பைத் துவக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 1975-ஆம் ஆண்டு ஜூலை 12,13 ஆகிய தேதிகளில் மதுரை தமுக்கம் அரங்கில் இதன் முதலாவது அமைப்பு மாநாடு நடைபெற்றது.இந்த அமைப்பின் வளர்ச்சியின் ஒரு கட்டத்தில், அது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கமாக (தமுஎகச) பரிணமித்தது.
முதல் மாநாடு நடைபெற்ற அதே தமுக்கத்தில் அமைப்பின் 40-ஆவது ஆண்டு மாநில சிறப்பு மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது.தோழர் கே.முத்தையா நினைவுச் சுடர்தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் களில் ஒருவரான தோழர் கே.முத்தையா நினைவுச்சுடர், அவர் ஆசிரியராகப் பணியாற்றிய செம்மலர் இலக்கிய மாத இதழ் வளாகத்தில் இருந்து புறப்பட்டது.நினைவுச்சுடரை, தமுஎகச மூத்த தலைவர்களில் ஒருவரும் செம்மலர் துணை ஆசிரியருமான தி.வரதராசன் எடுத்துக் கொடுத்தார்..சுடரை லட்சுமிகாந்தன் தலைமையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த என்.முத்துப்பாண்டி, பி.பாலசுப்பிரமணியன், வி.நம்புராஜன், K.R.ராமலிங்கம், வி.ராமச்சந்திரன், என்.யோகேஷ், சி.கௌசிக், ஆர்.கஜோல்ராம், ஜி.சுனந்தா, என்.யோகதர்ஷினி ஆகியோர் கொண்டு சென்றனர்.துவக்க நிகழ்வுமாநாட்டின் துவக்கத்தில் மதுரை தமுக்கம் மைதானத்தில் அமைந்துள்ள தமிழன்னை சிலைக்கு தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்..பெருமாள், சங்கரதாஸ் சுவாமிகள் சிலைக்கு சுந்தா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த தமுஎகச வரலாற்றுக் கண்காட்சியை இரா.தெ.முத்து, ஓவியர் வெண்புறா, எஸ்.கருணா, ஈஸ்வரன் ஆகியோர் திறந்து வைத்தனர். அதைத் தொடர்ந்து மாநாட்டு அரங்கில் தோழர். கே.முத்தையாவின் படத்தை மூத்த தலைவர் .ரத்தினம் திறந்து வைத்தார்.தொடர்ந்து பல்வேறு அமர்வுகளில் தலைவர்கள் உரையாற்றினர். முதலாவது அமர்விற்கு மாநிலத் தலைவர் .தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். வரவேற்புக் குழு தலைவர் இசையறிஞர் .மம்முது பிரதிநிதிகளை வரவேற்றார். எழுத்தாளர் பிரபஞ்சன் துவக்க உரையாற்றினார்.முன்னோடிகளுக்குபாராட்டி மாநாட்டில் தமுஎகச முன்னோடிகள் பேரா.அருணன், டி.செல்வராஜ், .செந்தில்நாதன், தி.வரதராசன், எஸ்..பெருமாள், .ரத்தினம், வேல.ராமமூர்த்தி, புலவர் பாலு ஆகியோர் கௌரவிக்கப் பட்டனர். இந்நிகழ்விற்கு மாநில பொதுச்செயலாளர் சு.வெங்கடசேன் தலைமை வகித்தார்.நூல் வெளியீடுகாலத்தின் குரல் தமுஎகச நாற்பது ஆண்டுவரலாற்று நூல் வெளியிடப்பட்டது. நூலை நந்தலாலா வெளியிட சு.ராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார்.தமுஎகச வழங்கும் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது வரலாற்று ஆய்வாளர் முனைவர் .சிவசுப்ரமணியனுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக விருதாளரை அறிமுகம் செய்து உதயசங்கர் பேசினார்.
கலை இலக்கிய உலகில் நாம் பதித்த தடங்கள்என்ற தலைப்பில் தமுஎகச கௌரவத் தலைவர் பேரா.அருணன் கருத்துரையாற்றினார். இந்த அமர்விற்கு சிகரம் .செந்தில்நாதன் தலைமை வகித்தார்.‘உலகமயமும் பண்பாட்டுக் களமும்என்ற தலைப்பில் பிரளயன், ‘சாதி-மதம்: இன்றைய சவால்கள்என்ற தலைப்பில் மதுக்கூர் இராமலிங்கம் ஆகியோர் உரையாற்றினர். இந்த அமர்விற்கு ஆர்.நீலா தலைமை வகித்தார்.கருத்துரிமை காக்க கரங்கள் கோர்ப்போம் என்ற நிகழ்வில் கவிக்கோ அப்துல் ரகுமான், பிரபஞ்சன், பொன்னீலன், வண்ணதாசன், டி.செல்வராஜ் உள்ளிட்ட படைப்பாளிகள் கலந்துகொண்டனர்.கரிசல் கிருஷ்ணசாமி, கரிசல் கருணாநிதி, திருவுடையான், அன்புமணி, வைகறை கோவிந்தன், உமா, வசந்தி, ராயப்பன், சுகந்தி ஆகியோர் பாடல்கள் பாடினர். தமுஎகச மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் ..சாந்தாராம் நன்றி கூறினார்.வாழ்த்துதமுஎகச-வின் 40-வது ஆண்டு மாநில சிறப்பு மாநாடு வெற்றிபெற முன்னோடி எழுத்தாளர்கள் கு.சின்னப்பபாரதி, மேலாண்மை பொன்னுச்சாமி, காஸ்யபன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.கலை இலக்கிய இரவுதொடர்ந்து கலை இலக்கிய இரவு மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் ஸ்ரீரசா தலைமையில் நடைபெற்றது. என்.ஸ்ரீதர் வரவேற்றார். முன்னாள் நீதிபதி கே.சந்துரு, திரைக்கலைஞர் ரோகிணி, மேடைக்கலைவாணர் என்.நன்மாறன், பேரா. அருணன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.இதில், ‘முற்போக்கு தமிழ் மரபுசிறப்பு மலர் வெளியிடப்பட்டது. கா.பிரகதீஸ்வரன் மலரை வெளியிட அஞ்சலி நல்லெண்ணெய் நிறுவனம் சார்பில் கே.எஸ்.ஆர்.நடராசன் பெற்றுக்கொண்டார்.
நவகவி-1000’ கவிதை நூலை .குமரேசன் வெளியிட, பாண்டியன் ஊறுகாய் நிறுவனர் ஜி.கந்தசாமி பெற்றுக்கொண்டார். கரிசல் குயில் கிருஷ்ணசாமியின்மனுஷிஇசை குறுந்தகடை நா.முத்துநிலவன் வெளியிட தேவி டிரேடர்ஸ் எஸ்.ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
நாட்டுப்புற கலைச்சுடர் விருதை இரா.முருகவேல் ()வேலு ஆசான் (தப்பாட்டக்கலைஞர், அலங்காநல்லூர்) மயிலை பாலுவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.மதுரை எஸ்.மலைச்சாமி குழுவினரின் கிராமியக்கலை நிகழ்ச்சி, அலங்காநல்லூர் சமர் கலைக்குழுவின் தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றன. இந் நிகழ்வில் நமது BSNLEU அரங்கத்தில் இருந்து தோழர்கள் செல்வின் சத்தியராஜ், சூரியன், வைத்திலிங்க பூபதி, சௌந்தர், சோனைமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.  

Sunday 29 November 2015

கோகோ கோலா நிறுவனத்தால் வாரணாசியில் தண்ணீர் தட்டுப்பாடு...

கோகோ கோலா குளிர்பான நிறுவனம், நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்துவதால், வாரணாசியை சுற்றியுள்ள கிராமங்களில், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
.பி., மாநிலத்தில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, இங்குள்ள வாரணாசி தொகுதியில் இருந்து தான், லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.இங்கு, மெதிகான்ச் என்ற இடத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த,பிரபல குளிர்பான நிறுவனமான, கோகோ கோலாவின் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த நிறுவனம், குளிர்பானம் தயாரிப்பதற்காக நிலத்தடி நீரை அதிகம் பயன் படுத்துகிறது. இதனால், இந்த பகுதியில் உள்ள, 18க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றின் தலைவர் அமித் ஸ்ரீவத்சவா கூறியதாவது: கடந்த, 1999ல், கோகோ கோலா தொழிற்சாலை இங்கு அமைக்கப்பட்டதில் இருந்து, கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அதற்கு முன், எந்த பிரச்னையும் இல்லை. குளிர்பானம் தயாரிப்பதற்காக, நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப் படுகிறது; அதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், உயர் அதிகாரிகளிடமும், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமும் புகார் அளித்துள்ளனர். நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கு, கோகோ கோலா நிறுவனத்துக்கு தடை விதிக்கும்படி அதில் வலியுறுத்தியுள்ளனர்

கலைவாணர் N.S. கிருஷ்ணன் பிறந்த நாள் நவம்பர் 29...

தமிழ் திரைப்படத்துறையில்கலைவாணர்என அழைக்கப்பட்ட N.S.. கிருஷ்ணன் அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர். “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்புஎன்ற பாடல் ஒன்றே என். எஸ். கலைவாணரின் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக் காட்டாகும். தமிழ் சுனிமா உலகில் நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன். தமிழில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராக விளங்கிய இவர், உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளின் போல, சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர். ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு இந்திய சினிமா வரலாற்றிலேயே நகைச்சுவையில் அறிவுபூர்வமான பல கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுமார் 57 ஆண்டுகளைக் கடந்து, சினிமா ரசிகர்களின் மனதில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் கலைவாணர் N.S.. கிருஷ்ணன்
பிறப்புநவம்பர் 29, 1908
அவர், 1908  ஆம் ஆண்டு நவம்பர் 29  ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ளநாகர்கோவிலுக்குஅருகில் ஒழுங்கினசேரி என்ற இடத்தில், ‘சுடலையாண்டி பிள்ளை’, என்பவருக்கும், ‘இசக்கியம்மாலுக்கும்மகனாக ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், கல்வி என்பது அவருக்கு எட்டாக்கனியாகவே போய்விட்டது. நான்காம் வகுப்புடன் தன்னுடைய பள்ளிப்படிப்பைப் நிறுத்துக்கொண்ட அவர், சிறுவயதிலேயே நாடகக் கொட்டையில் தின்பண்டங்கள் விற்கத் தொடங்கினார். நாளடைவில் நாடகங்கள் அவரை மிகவும் ஈர்த்ததால், ஒரு நாடகக்குழுவில் சேர்ந்து சிறிதுகாலம் நடித்து வந்தார். அதன் பிறகு தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து ஒரு நாடகக்குழுவை தொடங்கிய N.S.. கிருஷ்ணன் அவர்கள், பல நாடகங்களை இயக்கியும் நடித்தும் வந்தார்.
சிரிக்க வைத்த மாபெரும் சிந்தனையாளர் கலைவாணர்
இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், வாழ்வியலை ஒரு சில நொடிகளிலேயே புரிய வைக்கும் ஆற்றலை உண்டாக்கியவையாகும். யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக சிந்தனை மிகுந்த கருத்துக்களை வெளிப்படுத்தினார். அறிவியல் கருத்துக்களையும், தன்னுடைய நகைச்சுவை வாயிலாக வெளிப்படுத்தியவர். பல சீர்த்திருத்த கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். குறிப்பாகச் சொல்லப்போனால் N.S.. கிருஷ்ணன் அவரகள், சாதாரண நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல, தன்னுடைய சிரிப்பால் அனைத்து மக்களையும் சிந்திக்க வைத்தவர். இதானால் தான் இவருக்குகலைவாணர்என்ற பட்டம் 1947 ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நடராஜா கல்வி கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
இல்லற வாழ்க்கை
1931 ஆம் ஆண்டு நாகம்மை என்னும் பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு, ஒரு முறைவசந்தசேனாபடப்பிடிப்பிற்காக புனேவிற்கு சென்ற போது, டி. எம். மதுரம் என்ற நடிகையுடன் காதல் வயப்பட்ட இவர், விரைவில் திருமணமும் செய்துக்கொண்டனர். இவர் திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ஆவார். பின்னர், டி. எம். மதுரத்தின் தங்கை வேம்பு என்பவரை மூன்றாம் மனைவியாக மணம் புரிந்தார். நாகம்மைக்கு கோலப்பன் என்னும் மகனும், டி. எம். மதுரத்திற்கு ஒரு பெண் குழந்தையும், வேம்புக்கு நான்கு மகன்களும்,
மறைவு
நகைச்சுவையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய என். எஸ் கிருஷ்ணன் அவர்கள், 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி, தன்னுடைய நாற்பத்தொன்பதாவது வயதில் காலமானார். தமிழ்நாடு அரசு, அவரது நினைவாக, சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு, ‘கலைவாணர் அரங்கம்எனப் பெயர் சூட்டியது.தமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் உருவாகி, சாதித்து, மறைந்திருக்கலாம், ஆனால்,N.S.கலைவாணரைப் போல், நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைத் திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக்கூறியவர் எவரும் இல்லை. கருத்துக்களை வழங்குவதில் மட்டும் இவர் வள்ளலாக இருந்துவிட வில்லை, தமது வாழ்க்கையிலும் ஆயிரக் கணக்கானவர்களுக்குப் பணத்தை வாரி வழங்கிய அற்புத மனிதர் ஆவார். உண்மையை சொல்லப்போனால், N.S.. கிருஷ்ணன் அவர்களை நகைச்சுவை நடிகர் என்ற வட்டத்துக்குள் அடைத்துவிட முடியாது, சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதிகளைத் தூவிய மாபெரும் சிந்தனையாளர். காலங்கள் மாறினாலும், திரைப்படத்துறையில் மாற்றங்கள் பல நிகழ்ந்தாலும், N.S.. கலைவாணர் அவர்கள் நூற்றாண்டுகள் பல கடந்தும், கலையுலகில் சாகா சரித்திர நாயகனாக வாழ்ந்துவருகிறார் என்பதில், எந்தவித ஐயமும் இல்லை.

30.11.15 நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் 15 அம்ச கோரிக்கை . . .

அருமைத் தோழர்களே ! எதிர்வரும் 30.11.15 அன்று ஒப்பந்த ஊழியர்களின் நியாயமான  15 அம்ச கோரிக்கையை வலியுறித்தி நாடு தழுவிய அளவில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொண்டு மிகவும் சக்தியாக நடத்திட வேண்டுகிறோம்  . . . மதுரை லெவல்-4 தவிர மற்ற இடங்களில் அதாவது திண்டுக்கல், தேனி, பழனி போன்று சாத்தியமான இடங்களிலும் ஆர்பாட்டம் நடத்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம் ...