Thursday 30 April 2015

திருநகர் கிளையில் பணி நிறைவு பாராட்டுவிழா . . .

அருமைத் தோழர்களே ! நமது திருநகர் BSNLEU கிளை சங்கத்தின் சார்பாக தோழர்.
A.முருகையா TM  அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டுவிழா, "கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது" என்ற   சொல்லாடை  கேற்ப, நமது திருநகர் கிளச்சங்கம் மிக சிறப்பான ஏற்பாட்டை செய்து இருந்தது, கிளை சங்கத்திற்க்கு   நமது BSNLEU மதுரை  மாவட்ட சங்கத்தின்  பாரட்டுக்களை   உரித்தாக்குகின்றோம் .  .  .
இந்த 30.04.2015 பணிநிறைவு செய்த நமது திருநகர் கிளையின் உறுப்பினர் அருமைத் தோழர். முருகையா மிக, மிக அமைதியானவர், எளிமையானவர், உறுதியான உறுப்பினர், நல்ல பண்பாளர் எனவே, அவருக்கு நடைபெற்ற பணிநிறைவு பாராட்டு விழாவில்  அனைத்து  உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொண்டனர்.
 தோழர் முருகையாவின் பணி சிறப்பை, நமது சங்கத்தின் மீது உள்ள பற்றை நமது கிளைச் செயலர், தோழர். நாராயணன், மாவட்டச் செயலர் தோழர். சூரியன், மாவட்ட அமைப்பு செயலர் தோழர். சண்முகவேல் ஆகியோர் பாராட்டி , பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கி கெளரவித்தனர். தோழர் முருகையா ஏற்புரை நிகழ்தினார் அதன்பின் விழா இனிதே நிறைவுற்றது... வாழ்த்துக்களுடன், எஸ். சூரியன் D/S-BSNLEU.

கார்டூன் . . . கார்னர் . . .


நல்லா கிளப்புறாய்ங்க பீதிய..


30.04.15- வேலைநிறுத்தம் - பஸ், ஆட்டோ, லாரி ஓடாது...

பொதுப் போக்குவரத்துத் துறையை முற்றிலும் தனியார்மயமாக்கும் திட்டத்துடனும், அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும் வகையிலும் மத்திய பாஜக அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. சாலை விபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கை என்ற பெயரில், மோடி அரசு கொண்டுவந்துள்ள இந்த மசோதாவிற்கு, நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனொரு பகுதியாக, வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் வாகனத் தொழிலாளர்கள் வியாழனன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.சி..டி.யு., ..டி.யு.சி., பி.எம்.எஸ்., எச்.எம்.எஸ்., .என்.டி.யு.சி. உள்ளிட்ட 11 மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்த அழைப்பின் பேரில் நடைபெறும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில், நாடு முழுவதும் 43 தொழிற் சங்கங்கள் பங்கேற்கின்றன.தமிழகத்தில் தொ.மு., திராவிட தொழிற் சங்க பேரவை, எம்.எல்.எப்., விடுதலை தொழிலாளர் முன்னணி, பட்டாளி தொழிற் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றன. வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் பேருந்துகள், லாரிகள், சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள் ஓடாது என்றும், தமிழகத்தில் மட்டும் 2 லட்சத்து 40 ஆயிரம் ஆட்டோக்களும், சென்னையில் மட்டும் 72 ஆயிரம் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், டாடா மேஜிக், அபே ஆட்டோக்களும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய சட்டம் தனியாருக்கு சாதகமாகவும், பொதுமக்களின் உரிமையை பாதிப்பதாகவும் உள்ளதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் ஓடாது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் நல்லதம்பி தெரிவித்துள்ளார். இந்த வேலைநிறுத்தத்தையொட்டி, தனியார் பேருந்து ஊழியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிய உள்ளதாக, தனியார் பேருந்து உரிமையாளர் சங்க மாநிலத் தலைவர் தங்கராஜ் கூறியுள்ளார்.
பொதுமக்கள் நலனை தனியாருக்கு காவு கொடுக்கும் சட்டம்
பாஜக அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்டத்தின்படி, ஏற்கெனவே ஓட்டுநர் உரிமங்களைப் பெற்றவர்கள் (இருசக்கர வாகனங்களுக்கு உட்பட) மறுபடியும் உரிமம் பெற வேண்டும்; எல்எல்ஆர் பெற்றபின் 9 மாதங்களுக்குப் பின்னர்தான் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்க முடியும்;எல்.எல்.ஆர் எடுப்பதற்கு ஒருமுறையும், ஓட்டுநர் உரிமத்திற்கு ஒருமுறையும் மொத்தம் 2 முறை தேர்வு எழுத வேண்டும்; இந்த தேர்வுகளை தனியார் நிறுவனங்கள்தான் நடத்தும்; அவர்கள்தான் உரிமங்களையும் வழங்குவார்கள்; மோட்டார் சைக்கிள் உட்பட எந்தவொரு வாகனமாக இருந்தாலும், அதில் சிறிய சாதாரண பழுது ஏற்பட்டால்கூட, குறிப்பிட்ட தனியார் கம்பெனியில்தான் சர்வீஸுக்கு விட வேண்டும்;குறிப்பிட்ட தனியார் கம்பெனிகளின் உதிரி பாகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; மீறுவோருக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும்; மேலும் விபத்து ஏற்பட்டால் ஓட்டுநருக்கு ரூ.1 லட்சம் அபராதம், 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். அதேபோல அரசுப் போக்குவரத்தே இருக்கக்கூடாது; அனைத்தும் தனியாருக்குக் கொடுக்கப்பட வேண்டும்;தற்போது தேசியமயமாக உள்ள பேருந்து பெர்மிட்டுகள் அனைத்தும், புதிய சட்டத்தின் மூலம் தேசிய ஆணையத் தின் கைக்குப் போய்விடும்; அவர்கள் பெர்மிட்களை எடுக்க உலகளாவிய அளவில் டெண்டர் விடுவார்கள்.

வன்மையாக . . . கண்டிக்கின்றோம் . . .


சென்னை CGM(O)-ல் எழுச்சி மிகு பட்டினி போர்...

 அருமைத் தோழர்களே ! அநீதி களைய 29.04.15 அன்று சென்னை CGM(O)-ல் 600 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட எழுச்சி மிகு பட்டினி போர்  மிக மிக சக்தியாகதமிழ் மாநில Forum சார்பாக நடைபெற்ற நிகழ்சியை  காண ...இங்கே கிளிக் செய்யவும்.

Wednesday 29 April 2015

ஏப்ரல்-29, மிகப் பெரிய ஓவியர் ராஜா ரவி வர்மா பிறந்த நாள்.

ராஜா ரவி வர்மா அவர்கள், இந்திய கலை வரலாற்றில் மிகப் பெரிய ஓவியர்களுள் ஒருவராக கருதப்படுபவர். தனது ஓவியங்களில் சித்தரித்ததால், மிகவும் பிரபலமானார். இவர், இந்திய பாரம்பரிய கலைக்கும், சமகால கலைக்குமிடையே ஒரு முக்கிய இணைப்பை வழங்கினார். இதன் மூலமாக, உலகத்தின் கவனத்தை இந்திய ஓவியங்கள் பக்கமாக திசை திருப்பினார். ராஜா ரவி வர்மா அவர்கள், அழகான புடவை அணிந்த பெண்களின் ஓவியங்களை மிக மிக சீராகவும், தெய்வீகமாகவும் சித்தரித்தார். அவர் சம்பிரதாயப் பற்றுடையவர்கள் மத்தியில் தற்காலத்தவராகவும், தற்காலத்தவர்கள் மத்தியில் ஒரு பகுத்தறிவுவாதியாகவும் கருதப்பட்டார். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்து, நவீன காலத்துக்கு ஏற்றவாறு மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை இந்திய ஓவியக்கலைக்குள் புகுத்தியவரான ராஜா ரவி வர்மா அவர்கள். 
பிறப்பு: ஏப்ரல் 29, 1848.,   பிறந்த இடம்: கிளிமானூர், திருவிதாங்கூர், கேரளா,. 
இறந்தது: அக்டோபர் 2, 1906.

29.04.15 சென்னை CGM(O)-ல் பெருந்திரள் போராட்டம்...























அநீதி களைய இன்று (29.04.15) சென்னை தலைமை பொதுமேலாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ள போராட்டம் வெற்றி பெற நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின்  வாழ்த்துக்கள்...எஸ். சூரியன் ---D//S-BSNLEU.

Tuesday 28 April 2015

ஏப்ரல் - 29 பாரதிதாசன் பிறந்த நாள்...


29.04.2015 பணி நிறைவு பாராட்டு விழா-வாழ்த்துக்கள்...


கார்டூன் . . . கார்னர் . . .

திருடப்பட்ட செல்போனை கண்டுபிடிக்கமுடியும்...


அணு ஆயுதத்துக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்...

அணு ஆயுதத்துக்கு எதிராக அமெரிக்காவில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அணு ஆயுத ஒழிப்பு மாநாடு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இந்த ஆண்டு இந்த அணு ஆயுத ஒழிப்பு மாநாடு நியூயார்க் நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி நியூயார்க் நகரில் உள்ள யூனியன் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் அணு ஆயுதத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதில் ஜப்பான் உள்பட உலகம் முழுவதும் இருந்து மக்கள் கலந்து கொண்டனர். அணு ஆயுதம் முற்றிலும் ஒழிக்க வேண்டும், அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். இதில் கலந்து கொண்ட ஜப்பான் நாட்டை சேர்ந்த அணுகுண்டு வீச்சில் தப்பி பிழைத்த 83 வயதான பெண் கூறும்போது, இப்போதிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அணுஆயுதம் இல்லாத உலகை காண விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.