Sunday 11 August 2013

பாராட்டுக்கள் ....

சிந்துவை பாராட்டுவோம் 


உலக பாட்மிண்டன்  சாம்பியன்ஷிப்  தொடரில் விளையாடிய நமது இந்தியாவின் சிந்து, சீனாவில் உள்ள குவாங்சு  நகரில், 20வது உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்  போட்டியில், வெண்கலப் பதக்கம்  பெற்று உள்ளார் .

சிந்துவின்  தந்தை  பி.வி. ரமணா அவர்கள் இப்போட்டி  பற்றி கூறும் போது "சிந்து இன்னும் சிறப்பாக விளையாடி இருக்கலாம். இம்மாதிரியான சூழ்நிலையில் எப்படி செயல்பட வேண்டும் என கற்றுக் கொண்டிருப்பார்" எனக் கூறினார் .

சிந்துவின்  தாய் திருமதி. விஜயா கூறுகையில் "தனது இயற்கையான ஆட்டத்தினை சிந்து வெளிப்படுத்தவில்லை என்றும். அடுத்த தொடரில் நன்றாக விளையாடுவார்" என்றும் தெரிவித்தார். என்னவாக இருந்தாலும்  வெண்கலம் வென்ற மங்கை சிந்துவை  பாராட்டுவோம் .  

வாழ்த்துக்களுடன்  - எஸ்.சூரியன் ... மாவட்டசெயலர் .     



No comments: