Sunday, 2 November 2014

தொழிலாளர்களைக் கைவிட்டது நோக்கியாவா, இந்தியாவா?...

உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் தன் மக்களை இப்படியா கைவிடுவது?
நோக்கியன் விர்டா என்ற நதிபின்லாந்து மக்களின் பேச்சு வழக்கில் நோக்கியா எனச் சுருங்கிவிட்டது. அந்த நதியின் கரையில் 1868-ம் ஆண்டு அமைந்த காகிதக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைக்குஐடெஸ்டெம் என்கிற உரிமையாளர் நோக்கியா எனப் பெயரிட்டுள்ளார். அடுத்தடுத்து வளர்ந்த நோக்கியா நிறுவனம், 1980-களின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட செல்பேசிக்கும் அந்தப் பெயரையே சூட்டிசெல்பேசி உலகில் ஏக சக்ரவர்த்தியாக வளர்ச்சியும் பெற்றது. உலகில் 10 தொழிற்சாலைகள் மூலம் செய்யப்படும் உற்பத்தியைக் கொண்டுசந்தையில் பெரும் பகுதியைத் தன் கையில் வைத்திருந்த நிறுவனம்தான் நோக்கியா.2010-ல் இந்திய செல்பேசிச் சந்தையில் 50% தக்கவைத்திருந்த நோக்கியாநிறுவனம், 2014-ன் ஆரம்பத்தில் 21% ஆகக் குறைந்தது. தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் தனது பங்குகளை ஒப்படைத்துவிட்டு,இந்திய நிறுவனத்தை மட்டும் விற்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. நவம்பர் முதல் உற்பத்தி நிறுத்தம் குறித்த அறிவிப்பும்அது ஏற்படுத்தியுள்ள மற்றும் ஏற்படுத்தப்போகும் வேலை இழப்பும்இளம் தொழிலாளர் மத்தியில் பெரும் பதற்றத்தையும் பன்னாட்டு நிறுவனங்கள் மீதான கேள்விகளையும்உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் முதலீடும் வருவாயும்
செல்பேசி விற்பனையில்இந்தியச் சந்தையைக் கைப்பற்ற எடுத்த முயற்சியிலும் வெற்றி பெற்றது. இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கும் முன்னரே இந்தியச் சந்தையில் நோக்கியா செல்பேசிகள் விற்பனை செய்யப்பட்டாலும், இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கிய 2006-ல் மட்டும்15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு நோக்கியா செல்பேசிகள் பெரும்புதூரில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையாகியுள்ளன.இந்தியாவில் நோக்கியா நிறுவனம் 2005,  ஏப்ரல்மாதம் செய்து கொண்ட புரிந்துணர்வுஒப்பந்தம்மூலம்தொடக்கத்தில்ரூ. 675 கோடியும்பின்னர்அடுத்த கட்டத்தில்சில நூறு கோடி ரூபாயும் முதலீடு செய்யப்படும் என்றுஉறுதிப்படுத்தியது. தமிழ்நாடு அரசு தொழில்துறை அரசாணை எண்-59 இந்த விவரத்தை அளித்திருக்கிறது. இதற்காக சிப்காட் மூலம்,  ஸ்ரீபெரும் புதூர்ஏரிக்கரையில், 200 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம்செய்துஏக்கர் ஒன்றுக்கு 4.5லட்சம் ரூபாய்க்கு 99 வருடக் குத்தகைக்குக் கொடுக்கப்படும்பத்திரப் பதிவுக் கட்டணம் 0% என்பது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட புரிந்துணர்வுஒப்பந்தத்துக்குத் தமிழக அரசு ஒப்புதல் அளிக்கிறது என அரசாணைதெரிவிக்கிறது. இதற்கு மேல்வணிக வரிவிற்பனை வரி ஆகியவற்றை 10ஆண்டுகளுக்குச் செலுத்த வேண்டியதில்லை. வேலை ஒப்பந்த வரிகுத்தகை வரிநுழைவு வரி ஆகியவற்றிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் தாகியுள்ளது. இத்தனை சலுகைகளும்,தமிழக இளைஞர்களின்  வேலைவாய்ப்புக்காகவே என அரசுகள் அன்றைக்கு அறிவிப்பு செய்தன.மென்பொருள் இறக்குமதிஅதற்காகப் பணத்தைத் திருப்பிச் செலுத்தியது போன்றவை மத்திய வருமான வரித் துறையால் கேள்விக்குள்ளாக் கப்பட்டு,தற்போது வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரி பாக்கி என்று குறிப் பிடப்பட்டுள்ளது. மாநில அரசுவாட் வரியைத் தள்ளுபடி செய்தது. உள்நாட்டு விற்பனைக்குக் கொடுத்த சலுகையைவெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ததற்கெல்லாம் அளிக்க முடியாது என்று 2,400 கோடி ரூபாய் வரி கோரி வழக்குத் தொடுத்துமுடிவாகாமல் உள்ளது.இந்தப் பின்னணியில்தான் மைக்ரோசாஃப்ட்நோக்கியாவை விலைக்கு வாங்கியது. இந்திய ஆலையை வாங்க முடியாது என்று மறுத்து விட்டதால்,நோக்கியா பெயரில் செல்பேசி விற்கப்பட்டாலும் இந்தியாவில் உள்ள நோக்கியாவின் உரிமைஒப்பந்த தாரர் என்ற பெயரில் சுருங்கியது. ஒரு திரைப் படத்தில், “மாப்பிள்ளை இவர்தான். ஆனால்இவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது”  என்று வரும் நகைச்சுவையைப் போல்நோக்கியா செல்பேசி விற்பனையாகும்ஆனால்நோக்கியாவுக்குச் சொந்த மில்லை என்கின்றனர்.
கனெக்டிங் பீப்பிள் - டிஸ்கனெக்டிங் எம்ப்ளாயீஸ்
இந்தியாவில் உள்ள நோக்கியா ஆலையைமைக்ரோ சாஃப்ட் வாங்க மறுத்ததால்குறிப்பிட்ட காலத்துக்குகுறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே ஆர்டர் என்று ஒப்பந்தம் செய்துகொண்டதாகக் கூறுகிறார்கள். எனவேமுதலில் ஒப்பந்தத்  தொழிலாளர்கள்பயிற்சித் தொழிலாளர்கள் என்று   5,000   தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர், 4,500 நிரந்தரத் தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தில் வெளியேற் றப்பட்டார்கள். உதிரி பாக உற்பத்தி நிறுவனங்களிலும் இது பிரதிபலித்தது. அங்கும் விருப்ப ஓய்வு,ஆலை மூடல் காரணமாக சுமார் 5,000-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.மேலும்பல்லாயிரம் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. இளம் தொழிலாளர்கள் தங்கள் வேலையைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கிறார்கள். அரசுகளும் மாத காலமாக எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் மவுனம்  சாதிக்கின்றன. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டதுஅவர்களின் எதிர்காலம்குடும்ப நிலை போன்றவை குறித்து அரசுகளிடம் எந்தப் பதிலும் இல்லை. உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என்று தன்னைப் பெருமையுடன் கூறிக்கொள்ளும் ஒரு நாடுதன் மக்களை இப்படியா கைவிடுவது?

Saturday, 1 November 2014

பி.எஸ்.என்.எல் கட்டணக் குறைப்பு .01.11.14 முதல்...

அன்பிற்கினியவர்களே! நமது பி.எஸ்.என்.எல் நிறுவனம் தந்து சேவையில் கட்டணக் குறைப்பு .01.11.14 முதல் அமல் படுத்த அறிவித்துள்ளது அதனுடைய விபரம் வேலூர் தினமணி செய்தித்தாளில் வெளிவந்துள்ளது.

இறைவனை படைக்கும் மனிதர்கள்!

இறைவனைத்தேடி நாம் செல்வதுதான் பொதுவாக மக்களின் வழக்கம். ஆனால் அதற்கு மாறாக நாம் செல்லும் சாலைகளில் நமக்காக காத்திருக்கிறார்கள் கடவுளர்கள்
வாசுகியின் மீது திருமால், குழலுடன் கண்ணன் ,பழனிமலை முருகன், பிரமாண்ட பிள்ளையார் என அத்தனை கடவுளர்களும் விதவிதமான வடிவங்களில் நிறங்களில் நம் இல்லத்துக்கு வந்துவிடும் ஆவலோடு சாலையோரங்களில் தவம் கிடக்கிறார்கள் நமக்காக. அத்தனையும் கடவுளர் பொம்மைகள். அதனருகில் கடவுளை விற்கும் ஆர்வத்தில் கசங்கிய உடையும் ஒட்டிய வயிறுமாக சில மனிதர்கள். அவர்கள்தான் அந்த கடவுளர்களை உருவாக்கிய மனிதர்கள்.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்றார் ஒரு தலைவர். ஆனால் இறைவனையே படைக்கும் இவர்கள் முகத்தில் மட்டும் சிரிப்பு என்பதை காணவே முடியவில்லைசின்னக் குடில், பிடித்த வண்ணத்தில் கூரை, வெயிலில் ஒய்வெடுக்கவும், மழையில் ஒதுங்கிக்கொள்ளவும் கூரையில் சிறு சிறு ஒட்டைகளுடன் கூடிய குடில் அல்லது கூடாரம். இதுதான் இவர்களின் மாளிகை. எல்லா ஊர்களின் நெடுஞ்சாலைகளிலும் இப்படி ஒரு கூட்டம் ஏழ்மையின் நிரந்தர முகவரியோடு இருக்கிறார்கள்.

மழைக்காலங்களில் இத்தைகைய குடிசைப் பகுதிகளை கடந்து செல்லும் போதெல்லாம் யாரோ காதுகளில் முகாரி ராகம் பாடுவதாகவே உணர்கிறோம். பெரும்பாலும் வடமாநிலத்தவர்களாகவே இருக்கிறார்கள் அதுவும் இன்றைக்கு.. நேற்று தமிழகத்தில் தஞ்சம் அடைத்தவர்கள் அல்ல. வயிற்றுப் பாட்டுக்கு   கையில் கொஞ்சம் திறமையோடு, உழைப்பை நம்பி பல வருடங்களுக்கு முன் இங்கு வந்தவர்கள். இத்தனை வருடங்களில் வயதானதைதவிர அவர்கள் தோற்றத்தில் எந்த மாற்றமுமில்லை. வறுமை அப்படியே தொடர்கிறது.
ஊரின் ஒதுக்குப்புறத்தில் தங்கியபடி மேற்கூறிய கடவுளர்கள் பொம்மைகளை, குடும்பத்தினர் இணைந்து செய்கிறார்கள். பகல் இரவு என்று வேலை நேரம் ஒதுக்கிக்கொள்வது கிடையாதுபகலில் மக்கள் கூடும் இடங்களில் தங்கள் பொம்மைகளுக்கு கடைவிரிக்கிறார்கள்இதுவும் நிரந்தரமல்ல. ஒரு இடத்தில் இருந்து வெளியேறக் கேட்டுக் கொண்டால், அடுத்த இடம் தேடிப் பிடிக்கிறார்கள்சில பிரச்னைகளுக்குப்ப்பிறகு வேறு இடத்தில் தங்கவேண்டிய நிலை. பெரியவர்கள் வயிற்றுப்பாட்டுக்கு வழி தேடிக்கொண்டிருக்க, அவர்களின் பிள்ளைகள் கல்வியை இழந்து  விடுகின்றனர். அவர்கள் நிச்சயம் பள்ளிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருக்காது. .குபேரன் பொம்மையை வீட்டின் பூஜை அறையிலிருந்தால் செல்வம் கொழிக்கும்.. ஏழ்மை நீங்கும் என்பதெ ல்லாம் காலம் காலமாக புழங்கி வரும் மூடநம்பிக்கைதான் என்பதை பட்டவர்த்தனமாக முகத்தில் அறைந்து சொல்கிறது சாலையோரத்தில் குபேர பொம்மையை விற்கும் இந்த கைவினைக் கலைஞர் களைப் பார்க்கிறபோதுகாரணம் அத்தனை குபேர பொம்மைகளும்  இந்த குடிசைகளில்..!

பொருளியல் அரங்கம் - க.சுவாமிநாதன்...

மேக் இன் அமெரிக்கா:ஜெயவிலாஸ் குழுமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் டெக்ஸ்டைல்ஸ் அதிபர் ராம்குமார் வரதராஜன் ரூ.240 கோடி முதலீட்டை அமெரிக்காவில் வட கரோலினா மாநிலத்தில் செய்யப் போகிற செய்தி ஏற்கனவே வந்தது.முதலில் குஜராத் அல்லது ஆந்திராவில் தான் முதலீடு செய்வதாக இருந்தாராம். ஆனால் வடகரோலினாவில் மின்சாரச் செலவினம் மொத்த இடுபொருள் செலவில் 4 சதவீதமே உள்ளதாம். ஆனால் இந்தியாவிலோ 15 சதவீதம் வரை ஆகிறதென்கிறார் ராம் குமார் வரதராஜன். (தி இந்து பிஸினஸ்லைன் 29.10.14) ஒரு யூனிட் மின்சாரத்திற்கு இங்கு ரூ.6.90 எனில் அங்கு ரூ.3 மட்டுமே. இங்கு தனியார் மின்சார வணிக நிறுவனங்களிடம் போனால் இன்னும் ஒரு ரூபாய் கூட ஆகிறது. இந்தியாவில் கோவிந்தராஜ் டெக்ஸ்டைல்ஸ் உற்பத்தியின் பெரும் பகுதி அருப்புக்கோட்டையிலேயே நடைபெறுகிறது. சீனாவுக்கு நுhல் ஏற்றுமதி செய்வதானால் துhத்துக்குடி துறைமுகத்திற்கு 100 கிமீ ,பின்னர் கொழும்பு-சிங்கப்பூர் வழியாக கப்பல் சீனா போய் சேர 31 நாட்கள் ஆகிறதாம். ஆனால் அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு 20 நாட்களில் போய்விடுகிறது. அமெரிக்க உற்பத்தியில் 15 சதவீத செலவினம் குறைவு கிடைப்பதால் முதலீட்டை அங்கு கொண்டு செல்கிறார்.சேது சமுத்திரத்திற்கு முட்டுக் கட்டை , மின்சாரத்துறையில் அரசு முதலீடுகளுக்கு வெட்டு என வகுப்புவாதம் - நவீன தாராளமயத்தை இணைத்து குழைத்து அமலாக்குகிற மோடியால் கப்பல் போக்குவரத்து தாமதம், மின்சாரக் கட்டண உயர்வு ஆகிய பிரச்சனைகளை எப்படி தீர்க்க முடியும் !சத்தம்தான் பெரிதாக உள்ளது. சாதிப்பதற்கான திட்டம் எங்கே !
மேக் இன் சீனா:மோடியின்மேக் இன் இந்தியாமுழக்கம் தன்னை வெகுவாக ஈர்த்ததாக டாடா குழுமத்தின் சேர்மன் சைரஸ் மிஸ்ட்ரி அறிவித்த ஒரு மாதத்திற்குள்ளாக சுமார் ரூ.10,700 கோடி முதலீட்டை சீனாவில் செய்துள்ளார். அக்டோபர் 21, 2014 அன்று தனது முதல் hகுவார்லேண்ட் ரோவர் தொழிற்சாலையை டாட்டா சீனாவின் சாங்சு நகரில் திறந்துள்ளார்.இந்தியாவின் இறக்குமதிப்பட்டியலில் இல்லாத சீனப் பொருட்களே இல்லை என்பது தனிக்கதை. பெங்களூரு பட்டுப் புடவைகளுக்கான பட்டு நூல் தேவையில் 99 சதவீதம் சீனாவிலிருந்தே இறக்குமதியாகிறது.2013ல் இருதரப்பு வணிகத்தில் சீனாவிலிருந்து ரூ.3.06,000 கோடி இறக்குமதி ஆனதெனில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியானதோ ரூ.90,000 கோடிகள்தான். இந்தியா 159 சீனப் பொருட்கள் மீது இறக்குமதி குவிப்பு தடுப்பு வரி போட்டும்கூட இதுதான் நிலைமை.
மேக் இன் இந்தியா:இந்தியாவிற்கு முதலீடு வருகிறதோ இல்லையோ இங்கிருந்து சிவப்பாகவும், கறுப்பாகவும் பணம் வெளியேறிவிடுகிறது. உச்சநீதிமன்றம் கறுப்புப் பணப்பட்டியலை அளிக்காத மோடி அரசைக் கண்டித்து சொன்ன வார்த்தைகள் கடுமையானவை. “எங்களது முந்தைய ஆணையை நாங்கள் மாற்றமாட்டோம். அதில் ஒரு வரியைக்கூட மாற்றவோ திருத்தவோ மாட்டோம். அந்நிய நாடுகளிடமிருந்து நீங்கள் பெற்ற எல்லா விவரங்களையும் தரவேண்டும். விசாரணையின் அடுத்தக் கட்டத்தை நாங்கள் தீர்மானிப்போம். அந்நிய வங்கி கணக்குதாரர்களுக்கு ஏன் நீங்கள் பாதுகாப்பு குடை பிடிக்கிறீர்கள். அவர்கள் மீது நீங்கள் கரிசனம் காட்ட வேண்டாம். அதை சிறப்பு புலனாய்வுக்குழு பார்த்துக் கொள்ளட்டும். விசாரணை எதையும் நடத்துகிற சிரமம் உங்களுக்கு வேண்டாம். சிபிஐ விசாரணையா, வருமான வரி விசாரணையா, வேறு அமைப்பு மூலமாகவா என்பதை நாங்கள் முடிவு செய்கிறோம். கறுப்புப் பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வருகிற வேலையை அரசாங்கத்திடம் விட நாங்கள் தயாராக இல்லை. அப்படிவிட்டால் அது எங்கள் வாழ்நாளுக்குள் நடக்கவே நடக்காது. எனவே நாங்களே செய்ய வேண்டியதை செய்கிறோம் !”வலிமையான பிரதமர் என வர்ணிக்கப் பட்ட தேர்தலுக்கு முந்தைய மோடிக்கும், இன்றைய மோடிக்கும் உள்ள வித்தியாச த்திற்கு வேறு என்ன சாட்சியம் வேண்டும் !
எச்சரிக்கை:இந்தியாவிற்குள் முதலீடுகள் வருமா? கறுப்புப் பணம் திரும்பி வருமா? என்று விவாதம் நடைபெறும் வேளையில்எபோலாஇறக்குமதி ஆகிவிடுமோ என்ற எச்சரிக்கையை பேராசிரியர் பீட்டர் பைலட் விடுத்துள்ளார். இவர் 1976ல் எபோலா வைரசைக் கண்டுபிடித்தவர்.“இந்தியாவின் அதிகமான மக்கள் தொகையும், பெரும் அடர்த்தியாக மக்கள் வாழ்கிற நகரங்களும் ஒரு சவாலை முன்வைக்கின்றன. எபோலா பாதிப்பு இங்கு வந்தால் நோயாளிகளை பிரிப்பதிலும், அவர்களுடனான தொடர்புகளை அடையாளம் காண்பிப்பதிலும் நிறைய சிரமங்கள் இருக்கும். சுகாதார சீர்கேடுகளும் ஒரு முக்கிய பிரச்சனையாகும்மருத்துவம், சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடுகளில் வெட்டு. அரசுத் தலையிடாமை போன்ற பொருளாதாரப் பாதையே அமெரிக்க நாடுகளில்எபோலாபரவலுக்கு காரணம் என்பது விவாத அரங்குகளில் அதிகம் வெளிப்படுவதில்லை.விஞ்ஞானிகளின் முகங்களும், குரல்களும் ஊடகங்களின் கண்களுக்கும், காதுகளுக்கும் கவர்ச்சியாக இல்லையோ !

கருத்துப்பட . . . கார்டூன் . . . கார்னர்.