Thursday 19 February 2015

தமிழறிஞர் உ.வே.சாமிநாதையர் பிறந்த தினம்(1855)

. வே. சாமிநாதையர் (பெப்ரவரி 19,1855 - ஏப்ரல் 28,  1942,) உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன்   சுருக்கமாக உ.வே.சா. இவர் சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார். ஒரு தமிழறிஞர். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் . வே. சாமிநாதன் குறிப்பிடத் தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். .வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

தமிழ்த் தாத்தாவின் நினைவினைப் போற்றுவோம்