Saturday, 16 November 2013

உணவுப்பாதுகாப்பு சட்டமாம்! இது வந்துவிட்டால் . . .


ஏழைகளுக்குச் செல்லவேண்டிய உணவு தானியங்கள் தனியார் முதலைகளுக்கு சென்ற அவலம்!
டெல்லி: உணவுப்பாதுகாப்பு சட்டமாம்! இது வந்துவிட்டால் இந்தியாவில் ஏழைகளே இருக்கமாட்டார்களாம் இதுதான் 'ஊழல்' காங்கிரஸ் தலைமை .மூ.கூ.வின் பெருமிதம். ஆனால் டெல்லியில் மக்களுக்கு ரேஷன் மூலம் போய்ச்சேரவேண்டிய கோதுமை மூட்டை மூட்டையாக தனியார் மில்களுக்குச் சென்றதை ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியின் ரகசிய விசாரணை அம்பலப்படுத்தியது.இந்தியத் தலைநகர் டெல்லியில் இது நடக்கிறது என்றால் மற்ற மாநிலங்களின் நிலைமை என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்கவே பயங்கரமாக இருக்கிறது.
டெல்லியில்..உள்ள ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா கிடங்கிலிருந்து 4 டிரக்குகள் ரேஷன் கடைகளுக்குக் கொண்டு செல்லவேண்டிய கோதுமை மூட்டைகளை தனியார் மாவு மில்களுக்கு எடுத்து சென்றது கேமராவில் பதிவாகியுள்ளது.டெல்லியின் லாரன்ஸ் சாலையில் மிகப்பெரிய மில்கள் உள்ளன. அங்குதான் இந்த 4 டிரக்குகளும் சென்றுள்ளது.பொது வினியோக கோதுமை இல்லாமல் இந்த 4 மில்களும் நடக்கவே நடக்காதாம்! போலீஸ், நடவடிக்கை, சட்டவிரோதம், ஏழைகள் வயிற்றில் அடிக்கிறொம் என்ற எதற்கும் அஞ்சாமல் இந்தக் கொள்ளையை நடத்துகிறது டெல்லி தனியார் மில்கள் இதற்கு அரசு எந்திரங்களும் உடந்தை.இந்த விவகாரமகேசவ்புர காவல் சரகப் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுப்பது போல் எடுத்து பிறகு தவறுகள் நடக்கவில்லை என்று கைவிரித்துள்ளது.இந்த கொடுமையான செயலை செய்வதில் டாப் டு பாட்டம் அதிகாரிகள் உடந்தை வேறு. மூட்டை ஒன்றுக்கு ரூ.200 எல்லா தலைகளுக்கும் செல்கிறதாம்!!ஒரு நாட்டின் தலைநகரில் இவ்வளவு அரசு எந்திரங்களின் உடந்தையுடன் பெரும் உணவுப்பொருள் கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் வந்தால் எல்லாம் சரியாகிவிடுமாம்

நரேந்திர மோடியின் வரலாற்று உளறல்கள் . . .

நரேந்திர மோடியின் வரலாற்று உளறல்கள்பா... பிரதமர் வேட்பாளராக நாடு முழுவதும் வலம் வரும் நரேந்திர மோடி - அவ்வப்போது கூட்டங்களில் உதிர்த்து வரும் வரலாற்று உளறல்கள் பற்றிய ஒரு தொகுப்பு.
திருச்சியில் மோடி:- தண்டியில் காந்தி உப்பு சத்தியாகிரகம் நடத்தியபோது, இங்கே வேதாரண்யத்தில் ..சி. தலைமையில் உப்பு சத்தியாகிரகம் நடந்தது.
வரலாறு:- வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்துக்கு தலைமை தாங்கியது ..சி. அல்ல; இராஜகோபாலாச்சாரி.
பாட்னா கூட்டத்தில் மோடி:- குப்தர் வம்சம் பற்றி நாம் நினைக்கும்போது உடனடியாக சந்திரகுப்தரின் ராஜநீதிதான் நினைவுக்கு வருகிறது.
வரலாறு:- சந்திரகுப்தர், குப்த வம்சத்தைச் சார்ந்தவர் அல்ல; அவர் மவுரிய வம்சத்தைச் சார்ந்தவர்.
பாட்னா கூட்டத்தில் மோடி:- மாவீரன் அலெக்சாண்டர் இராணுவம், உலகத்தையே படையெடுத்து வெற்றி கண்டது. ஆனால், பீகார் தக்சசீலாவில் பீகாரிகளால் அதே இராணுவம் தோல்வி அடைந்து ஓடியது. அதுதான் பீகாரிகள் வலிமை.
வரலாறு:- அலெக்சாண்டர் இராணுவம் கங்கையைக் கடந்து வரவே இல்லை. பீகாரிகளால் தோற்கடிக்கப்படவும் இல்லை. தக்சசீலாவும் பீகாரில் இல்லை; அது பாகிஸ்தானில் இருக்கிறது.
மோடி:- வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நாட்டின் வளர்ச்சி வீதம் 8.4 சதவீதமாக இருந்தது. இப்போது ஐக்கிய முன்னணி ஆட்சியில் 4.8 சதவீதம்தான்.
உண்மை:- வாஜ்பாய் ஆட்சியில் முதல் 6 ஆண்டில் சராசரி வளர்ச்சி 7 சதவீதம். கடைசி 5 ஆண்டு சராசரி வளர்ச்சி 5.9 சதவீதம் என்று மறுத்துள்ளார் .சிதம்பரம்.
டெல்லி பல்கலைகழகத்தில் மோடி:- குஜராத் பெற்றுள்ள வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சி.
உண்மை:- மனித மேம்பாட்டு குறியீடுகளின்படி குஜராத் சுகாதாரத்தில் 16 ஆவது மாநிலமாகவும், கல்வியில் 14 ஆவது மாநிலமாகவும் கட்டமைப்பு வசதிகளில் 11 ஆவது மாநிலமாகவும் இருக்கிறது.
மோடி:- பட்டேல் இறுதி ஊர்வலத்தில் நேரு கலந்து கொள்ளவில்லை.
உண்மை:நேரு கலந்து கொண்டார். "டைம்ஸ் ஆப் இந்தியா" உள்ளிட்ட நாளேடுகள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. மொரார்ஜி தேசாய் தனது சுயசரிதையிலும் குறிப்பிட்டுள்ளார்

கான்பூரில் மோடி:- திட்டக் குழுவுக்கு தலைமை தாங்கும் பிரதமர் ஒரு பொருளாதார நிபுணர். நாளொன்றுக்கு கிராமத்தில் குடும்ப வருமானம் ரூ.26-க்கு அதிகமாகவோ அல்லது நகரத்தில் ரூ.32க்கு அதிகமாகவோ இருக்குமானால், அவர்கள் வறுமைக் கோட்டை கடந்து விட்டதாகக் கூறுகிறார். இது ஏற்கக் கூடியது தானா?
உண்மை:- திட்டக்குழு இந்த வரையறையை ஒரு குடும்பத்துக்குச் சொல்லவில்லை. தனி மனிதருக்குச் சொல்கிறது. அத்துடன் மோடி குறிப்பிடுவதுபோல் வருமானத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படவில்லை. செலவின் அடிப்படையில் தான் திட்டக் குழு நிர்ணயித்துள்ளது.

Friday, 15 November 2013

மத்திய அரசின் நிதிக்கமிஷன் பாராட்டும் மகிழ்ச்சியும் ...

திட்டங்களை திரிபுரா அரசு சிறப்பாக அமலாக்குகிறது 
நிதிக்கமிஷன் பாராட்டு
திரிபுரா மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ரூ.67 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று 14வது நிதிக் கமிஷனிடம் திரிபுரா அரசு கோரிக்கை வைத்துள்ளது. பெருமளவிற்கு உள்கட் டமைப்பு வசதிகளை மேம் படுத்துவது, உள்ளாட்சி அமைப்புகளை வலுப் படுத்தி செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு செல வினங்களை ஈடுகட்டி மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்ய சிறப்பு ஒதுக்கீடாக ரூ.67 ஆயிரத்து 104 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்திருப்பதாக அகர்தலாவில் வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மாணிக் சர்க்கார் கூறினார். ஒய்.வி.ரெட்டி தலைமையிலான மத்திய அரசின் 14வது நிதிக்கமிஷன் மூன்று நாள் பயணமாக திரிபுரா வந்துள்ளது. இக்குழு முதலமைச்சரையும், உயரதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளையும் நேரில்சந்தித்து நிதிச்செலவினங்கள் குறித்தும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தது.இக்குழுவைச் சந்தித்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மாணிக் சர்க்கார், திரிபுரா மாநில அரசின் நிதி ஒழுங்கு மற்றும் நேர்மையான நிர்வாகம் குறித்து நிதிக்கமிஷன் பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவித்ததாக குறிப்பிட்டார். மத்திய திட்டங்கள் அனைத்தையும் சிறப்பான முறையில் அமலாக்கி வருவது குறித்து நிதிக்கமிஷன் பாராட்டு தெரிவித்தது என்றும், அதைக் கருத்தில் கொண்டு மேலும் நிதிஒதுக்குவது குறித்து பரிசீலிப்பதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.மேலும், நாட்டிலேயே 73 சதவீதம் அளவிற்கு வனப்பாதுகாப்பை உறுதி செய்து மிகப்பெருமளவில் காற்று மண்டலத்தை தூய்மைப்படுத்துவதில் திரிபுரா அரசே முன்னிற்கிறது எனவும் நிதிக்கமிஷன் பாராட்டியுள்ளது. இதை அங்கீகரித்து பசுமை போனசாக கூடுதல் நிதி ஒதுக்குமாறும் முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.                                                                                                     ....தீக்கதிர்