Wednesday, 29 October 2014

28.10.14-தமிழ் மாநில JAC கூட்ட முடிவுகள் . . .

 

20வது மாநில கவுன்சில் முடிவுப்படி EPFபொறுப்பாளர். . .

நமது 20 வது மாநில கவுன்சில் முடிவுப்படி EPFபொறுப்பாளர்  மாநில நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டுள்ளது அதற்கான கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.

புதிய தமிழ் மாநில BSNLEUசங்க நிர்வாகிகள்CGM(O) கடிதம்.


நமது மதுரை மாவட்ட BSNLEUசங்கத்தின் வாழ்த்துக்கள்--எஸ்.சூரியன்.D/S

BSNLலில் அனைத்து சங்கங்களின் தொடர் போராட்டம்...


Tuesday, 28 October 2014

27.10.2014 திண்டுக்கல்லில் - நகர JCTU சார்பாக நடந்தவை. . .

அருமைத்  தோழர்களே! திண்டுக்கல்லில் நமது தோழர்களின் முயற்சியால் நகர JCTU சார்பாக, 27.10.2014 ஞாயிறு மாலை, பிச்சாண்டி பில்டிங்கில் ஒரு அற்புதமான, மிக முக்கியமான, தொழிலாளி வர்கத்திற்கு இன்றைய அதிமுக்கிய பொருள் குறித்து நல்ல தொரு கருத்தரங்கத்தை நடத்தியுள்ளனர்.கருத்தரங்கத்தின் தலைப்பு - இந்திய தொழிற்சட்டம் - சீர்திருத்தங்களும்- தொழிலாளர் நலன்களும் என்பது ஆகும். 
இன்று பொறுப்பேற்றுள்ள அரசு தனக்கு மிருக பலம் இருக்கிறது, ஆகவே எதைவேண்டு மானாலும் செய்யலாம், அதை கேட்பதற்கு யாருமில்லை என்ற ஆங்காரத்தோடு நமது நாட்டின் தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தையும் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக வும், கார்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவும் திருத்துகின்ற முயற்ச்சியை மிக தீவிரமாக எடுத்துள்ளது. நமது மண்ணில் தொழில் துவங்கும் தனியார் கார்பரேட் நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள ஓரிரு தொழிலாளர் நலச்சட்டங்களை கூட மதிக்காமல் காலில் போட்டு மித்திக்கின்ற நிலை உள்ளதை சீர்செய்ய  தனியார் கம்பெனிகளை தட்டிக் கேட்காமல் கை கட்டி வேடிக்கை பார்க்கும் அரசு, இருப்பதையும் அல்லது முழுமையாக தனியார் கம்பெனிகளின் ஆதரவு நிலைஎடுப்பதை தொழிலாளி வர்க்கம் இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது. நமது மத்திய சங்க பொதுச் செயலர் தோழர்.பி .அபிமன்யு அவர்கள் நமது திருச்சி 7வது  மாநில மாநாட்டில் குறிப்பிட்டது போன்று நாடுமுழுவதும் மத்திய அரசின் தொழிலாளி விரோத செயல்களுக்கு எதிராக, மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக அங்கங்கு அனைவரையும் திரட்டி போராட வேண்டி உள்ளது.
அதனுடைய ஒருபகுதியாகவே திண்டுக்கல் கருத்தரங்கம் நடைபெற்றது என்றால் அது மிகையாகது.தோழர்.ஆர்.கருமலையான், தமிழ் மாநில செயலர் -CITU, அவர்களின் எழுச்சி உரையாக இருந்த கருத்தரங்க கூட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் கலந்துள்ளனர். நமது திண்டுக்கல் தோழர்களின் இந்த நல்ல முயற்ச்சியை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.-- என்றும் தோழமையுடன்,எஸ்.சூரியன் ---D/S-BSNLEU.

மக்கள் விரோத மருந்து கொள்கை . . .

சமீபத்தில் மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ்பஸ்வான் அளித்த ஒரு பேட்டியில் மக்களுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ சேவைகள் இலவசமாக அளிக்கப்படும் என்றும், அத்தியா வசிய மருந்துகளின் விலைகள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். இவர் சொன்னதற்கும், அவர் அங்கம் வகிக்கும் தேசிய ஜன நாயக கூட்டணி அரசு செய்கின்ற செயலுக்கும் சம்பந்தமே இல்லை.கடந்த செப்டம்பர் 22ஆம் தேதியன்று மத்திய அரசு ஒரு சுற்றறிக்கையின் மூலம் ஏற்கனவே விலை நிர்ணய கட்டுப்பாட்டிற்குள் இருந்த 108 மருந்துகளின் விலைகளை சந்தையும், மருந்து நிறுவனங்களும் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அனைத்து தடைகளையும் நீக்கியது.இந்த அறிவிப்பு ஓர் தொடர்ச்சியாகவே காணப்படுகிறது. ஏற்கனவே மருந்துகளின் விலைகள் உயர்ந்து கொண்டுதான் உள்ளது. உதாரண மாக இருதய நோய்க்காக பொருத்தப் பட்ட `ஸ்டெண்ட்எனும் இருதயகருவியை அபாட் எனும் பன் னாட்டு நிறுவனம் ரூ.40,700 க்கு இறக்குமதி செய்து ரூ.1,20,000 க்கு இந்திய மக்களுக்கு விற்கிறது. என்ன விலை வித்தியாசம் பாருங் கள். கிட்டத்தட்ட மூன்று மடங்கு லாபம்.இந்திய நாட்டில் 4.1 கோடி மக்கள் சர்க்கரை நோயாலும், 6கோடி பேர் ரத்த அழுத்த நோயினாலும், 5.7 கோடி பேர் இருதய நோயினாலும் 22லட்சம் பேர் காச நோயினாலும், 11லட்சம் பேர் புற்றுநோயாலும், 22 லட்சம் பேர் எயிட்ஸ் நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய நாட்டில் அரசு மருத்துவ மனை களில் போதுமான தரமான மருத்துவசேவைகள் இல்லாத காரணத்தி னால், மக்கள் தனியார் மருத்துவ மனைகளை நாடிச் செல்கின்றனர். தனி நபர் ஒருவர் தன்னுடைய வருமானத்தில் 36 சதவீதம் மருத்துவத் திற்காக செலவு செய்கிறார்.2004ல் இந்த செலவு மாதம் ரூ. 391 ஆக இருந்தது. 2012ல் ரூ. 1083 ஆக உயர்ந்துள்ளது. அரசு முறையான மக்கள் நலக் கொள்கைகளை அமல் படுத்தி இருந்தால் இத்த கைய செலவுகளை தவிர்த்திருக்கலாம். குறிப்பாக சுகாதார மேம்பாடு, நோய் தடுப்பு திட்டங்கள், மருத்துவ உயர் சிகிச்சை, நவீன மருத்துவம் போன்றவற்றை நடை முறைப்படுத்தியிருக்க வேண்டும். இவற்றை அமல் படுத்திட 10.7 லட்சம் கோடி தேவைப்படுகிறது. ஆனால் இந்திய அரசு 12வது ஐந்தாண்டு திட்டத்தில் வெறும் 3.8 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு அதுவும் சரிவர பயன்படுத்தப்படவில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றது.கடந்த நாடாளு மன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் இந்தியாவை மாற்றுகின்றேன் என்று கூறி வந்தார்.
இந்திய பன்னாட்டு முதலாளிகளும் இவருக்கு ஆதரவாக களம் இறங்கிவெற்றி பெறச் செய்து ஆட்சி பீடத்தில் அமர்த்தினர். அமர்த் திய 6 மாதங்களில் மக்களின் வாழ்க் கையில் விளையாட தொடங்கி விட்டார். தன்னை ஆட்சியில் அமர்த்திய, முதலாளிகளுக்கு ஆதரவாக கொள்கைகளை திட் டங்களை தொடர்ந்து அமல்படுத்தி வருகிறார்.உதாரணமாக கடந்த பல ஆண்டுகளாக இடது சாரிகள், முற்போக்கு அமைப்புகள் போராடி உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னர் மருந்து விலை நிர்ணய ஆணை அமலுக்குவந்தது. அதாவது உயிர் காக்கும் மருந்துகளின் விலைகளை அரசே நிர்ண யிக்கும் என்பதுதான்.2014 மே மாதத்தில் 489 மருந்துகள் மருந்துவிலை நிர்ணய கட்டுப்பாட்டிற்குள் இருந்து வந்தது. கடந்த ஜூலை மாதத்தில் சர்க்கரை நோய் , இரத்த அழுத்தம், இருதய நோய், தடுப்பூசி போன்ற 108 மருந்துகளின் விலை களை மருந்து விலை நிர்ணய கட்டுப்பாட்டிற்குள் வரும் என்று அரசு அறிவித்து அதன்படி விலை களும் குறைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் செலவு குறையும் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அறிவிப்பு வந்தவுடன் பன்னாட்டு இந்திய நாட்டு மருந்து நிறுவன பெரும் முதலாளிகள் புலம்பினர்.
இந்திய பார்மசிட்டுகள் அலையன்ஸ் அமைப்பின் தலைவர் கே.கே.ஷா அவர்கள் இந்த விலை குறைப்பினால் 5500 கோடி ரூபாய்மருந்து நிறுவனங்களுக்கு இழப்புஏற்படும் என்றும், மொத்த வர்த்த கத்தில் 12 சதவீதம் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளார். இதைக்கேட்ட மோடி அரசு தனது எஜமானர்களுக்கு விசுவாசம் காட்டும் விதமாக உடனடியாக கடந்த 2014 செப்டம்பர் மாதம் 108 மருந்துகளின் விலைகளை அரசு நிர்ணயிக்காது என்றும், மருந்து நிறுவனங்களே விலையை நிர்ணயித்துக் கொள்ளும் என்று அறிவித்தார். இந்த செயலின் அர்த்தம் என்னவெனில் இழப்பு ஏற்படும் என்று சொன்ன ரூ.5500 கோடியை மருந்துகளின் விலைகள் ஏற்றத்தின் மூலமாக ஏழை, எளிய மக்களின் தலையில் சுமத்தப்படும் என்பதுதான். அறிவிப்பு வந்தவுடன் மருந்து நிறுவனங்கள் விலைகளை பல மடங்கு உயர்த்தியுள்ளது. விபரங்கள் அட்டவணைக்குள் மருந்து நிறுவன முதலாளி களுக்கு இந்த சலுகை மட்டும் போதவில்லையாம் மேலும் பல்வேறு சலுகைகள் அரசு செய்து தர வேண்டும் என்று பிரமல் லபேராட்டரிஸ் இயக்குநர் அஜய் பிரமல் கூறுகிறார்.
அவர் இந்திய காப்புரிமை சட்டம் முழுமையாக திருத்தப்பட வேண்டும், மருந்து பரிசோதனைகளில் உள்ள தடை களை நீக்க வேண்டும் , மருந்துகளை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு அளிக்கும் லஞ்ச லாவண்யங்களை அரசு கண்டு கொள்ளக்கூடாது என்று வெட்ட வெளிச்சமாக கூறி யுள்ளார்.இந்த (மத்திய அரசு ஏழை, எளிய மக்களின் நலனை காக்கும் கொள்கைகளை வகுக்கும் அரசாக இல்லை மாறாக பெரும் முதலாளிகளின் லாபத்தை பெருக்கும் ஆணைகளை பிறப்பிக்கும் அரசாக உள்ளது) இந்திய மக்களின் நலனை பாதுகாத்திட அரசு முன் வர வேண்டும். அதற்கான இயக்கங்களை, போராட்டங்களை அனைத்து பகுதி மக்களும் நடத் திட வேண்டும்.கே.சி.கோபிகுமார்.

அறிஞர்களின்மவுனம்ஆபத்தானது -ரொமிலா தாப்பர்...

மதவெறி நோக்கில் பாடப் புத்தகங்கள் திருத்தப்படுவது குறித்தும், மதச்சார்பின்மை அடிப்படையிலான புத்தகங்கள் பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்படுவது குறித்தும் அறிஞர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்று வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் வற்புறுத்தினார்.புதுதில்லியில் நிகில்சக்கரவர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பில், ‘கேள்வி எழுப்புவதா? கேள்வி எழுப்பாமல் இருப்பதா? - இதுதான் இப்போதைய கேள்விஎன்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.முன்பை விட இப்போது ஏராளமான அறிஞர்கள் உள்ளனர். ஆனால், அதிகாரத்தோடு மோத அவர்கள் மறுக்கின்றனர். சிந்தனை சுதந்திரத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்படும்போது கூட அவர்கள் மவுனம் சாதிக்கின்றனர். ஏனெனில் அவர்கள் சர்ச்சையற்ற முறையில் இயங்க விரும்புகின்றனர் அல்லது தங்களது அறிவாற்றலை அமுக்கிக் கொள்ள சம்மதிக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.பண்டைய இந்தியாவில் பிராமணர் அல்லாத சிந்தனையாளர்கள் நாத்திகர்கள் அல்லது கடவுள் மறுப்பாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்டனர்.
தற்போது இந்துத்துவா போதனைகளை ஏற்க மறுப்பவர்கள் அத்தனை பேரும் மார்க்சிஸ்ட்டுகள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுகின்றனர் என்று ரொமிலா தாப்பர் குறிப்பிட்டார்.பகுத்தறிவுச் சிந்தனை என்பதுதான் நம்முடைய அறிவுலகின் பாரம்பரியம். அதை முன்னெடுத்துச் செல்ல அறிஞர்கள் துணிச்சலுடன் முன்வர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இனவெறி, மதவெறி அடிப்படையில் மனித உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராக அறிஞர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.இன்றைய நாளில் அறிஞர்கள் என்று அறியப்படுபவர்கள் அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்ப அஞ்சுகின்றனர். அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களது சிந்தனைகளை திணிக்கும்போது அதற்கு எதிராக எதுவும் பேசாமல் மவுன சாட்சியாகிவிடுகின்றனர் என்றார் அவர்.மதச்சார்பற்ற கோட்பாடுகளை முன்வைக்கும் புத்தகங்கள் தடை செய்யப்படு கின்றன.பாடத் திட்டங்கள் மதவெறி அடிப்படையில் திருத்தி எழுதப்படுகின்றன. மத மற்றும் அரசியல் தலையீடுகளின் காரணமாக இவ்வாறு நடக்கிறது. அரசியல் அதிகாரத்தை கண்டு அறிஞர்கள் அஞ்சுவதால்தான் சிறு எதிர்வினையை கூட செய்வதற்கு இவர்கள் தயங்குகின்றனர் என்று குறிப்பிட்ட ரொமிலா தாப்பர், மத அடிப்படையிலான அரசியல் திட்டமிட்டு வளர்க்கப்படுவதால் மக்களிடையே பகைமை உருவாக்கப்படுகிறது. இதனால் சுதந்திரமான சிந்தனை மறுக்கப்படுகிறது. அறிஞர்கள் இத்தகைய போக்கை எதிர்த்து மேலும் மேலும் கேள்வி எழுப்ப வேண்டும். அறிவுத்தளத்தில் போர்புரிய வேண்டும். ஆனால், இதுமிகவும் குறைவாகவே உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

‘ஆதார்’ யாருடைய ஆதாயத்திற்காக? . . .

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத் எதிர்த்துபிரச்சாரம் செய்ததன் மூலம்தான், மக்களிடமிருந்த அதிருப்தியை அறுவடை செய்து ஆட்சிக்குவந்தது பாஜக கூட்டணி. ஆனால், முந்தைய ஆட்சிக்காலத்தில் விதைக்கப்பட்டு வளர்க்கப் பட்ட தவறான பலத் திட்டங்களை அப்படியே பின்பற்ற துவங்கியுள்ளது நரேந்திர மோடி அரசு.நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடுகளை செய்தது மன்மோகன்சிங் அரசு. இதனால் சுரங்க ஒதுக்கீடுகளை ரத்துசெய்தது உச்சநீதிமன்றம். ஆனால் தற்போது நிலக்கரி சுரங்கங்களை மீண்டும் அதே முதலாளிகளுக்கு வழங்க அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது மோடி அரசு. பெட்ரோல் மீதான அரசுக் கட்டுப்பாட்டை நீக்கியது முந்தைய அரசு. டீசலுக்கான அரசு கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது இன்றைய அரசு.சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக நுகர்வோருக்கு வழங்கும் திட்டத்தை முந்தைய அரசு அறிமுகப்படுத்தியது. இப்போது தாங்களும் அதேப் பாதையை தொடரப் போவதாக பாஜக கூட்டணி அரசு அறிவித்துள்ளது. ஆதார் அட்டை என்ற அரைகுறையான, பல்வேறு குளறுபடிகளைகொண்ட திட்டத்தை முந்தைய அரசு அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் அனைத்து மானியங்களும் ஆதார்அட்டையுடன் இணைக்கப்படும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தினால் உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டத்தை முற்றாக ரத்து செய்வோம் என்றும் பாஜகவினர் பசப்பினர். அப்போதைய உள்துறை அமைச்சகம் கூட ஆதார் திட்டத்தின்கீழ் திரட்டப்படும் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியது.
ஆனால்,தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் ஆதார் அட்டை திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும் மானியங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு உதவிகளும் இதனுடன் இணைக்கப்படும் என்றும் கூறியுள்ளது. இந்த நிலைமாற்றத்திற்கான காரணம் என்ன என்று கேட்டால் இந்த ஆணையத்தின் தலைவரான தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த நந்தன்நீல்கேனி என்பவர் அமைச்சர்களை சந்தித்துஆதார் அட்டையின் அவசியத்தை வலியுறுத்தினாராம். உடனே அரசு ஒப்புக் கொண்டதாம். இந்த திட்டத்திற்காக இதுவரை 4906 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்ஜெட்டில் 2,039 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மேற்கொள்ளும் நிறுவனத்திற்கு உண்மையில் இது அவசியம் தான்.ஆனால், இந்தத் திட்டம் பல்வேறு குளறுபடிகளோடு, குறைபாடுகளோடு மேற்கொள்ளப்பட்டது என்பது ஒருபுறமிருக்க, பயோ மெட்ரிக் அடிப்படையில் திரட்டப்படும் தகவல்கள் அனைத்தும் அமெரிக்க உளவு நிறுவனமான CAA அமைப்பிற்கு அப்படியே செல்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியதோடு திட்டத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்தியது. குடிமக்களுக்க பன்னோக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்போவதாக கூறியபாஜக தற்போது ஆதாரிடம் மீண்டும் சரணடைந்துள்ளதன் மர்மம் என்ன? இதில் அமெரிக்க நிர்ப்பந்தம் இருக்காது என்று நிராகரிக்க முடியாது. ஆதாரால் அதிக ஆதாயம் பெறுவது அமெரிக்கா என்பது மறுப்பதற்கில்லை.