Tuesday 22 December 2015

21-12-2015 திண்டுக்கலில் நடைபெற்ற Forum கூட்டம் . . .

அருமைத் தோழர்களே! 21-12-2015 அன்று மாலை திண்டுக்கலில் மதுரை மாவட்ட  Forum கூட்டம்  தோழர் சந்திரகுமார் ,SNEA தலைமையில் நடைபெற்றது  . . . 
தோழர். J.ஜோதிநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார், தோழர் S. ஜான்போர்ஜியா கூட்டத்தின் நோக்கம், கோரிக்கைகள் குறித்து உரையாற்றினார். கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு தோழர்கள் வளச்சிபனிகள் குறித்து தங்களது அனுபவங்களை எடுத்துக் கூறினார்கள். . .

இறுதியாக, மதுரை மாவட்ட Forum கன்வீனர் தோழர்.S சூரியன் 22-12.2015 அன்று நாடு முழுவதும் நாம் நடத்த உள்ள  ஆர்பாட்டம், பென்சன்தார்களுக்கான 78.2% பஞ்சப்படியை உடனடியாக வழங்கக் கோரி நடைபெறுவதில் அனைவரும் சக்தியாக கலந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும், எதிர்வரும் 01.01.2016 முதல் 100 நாட்கள் நாம் கடைபிடிக்க வேண்டிய  " புன்னகையுடன் சேவை " திட்டத்தின் அவசியம் குறித்தும் விளக்க உரை நிகழ்த்தினார். தோழர் A.குருசாமி நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

No comments: