Wednesday 16 December 2015

மதுரை தொலை தொடர்பு மாவட்ட Forum கூட்டம் . .

அருமைத் தோழர்களே ! 16-12-15 அன்று மாலை 6 மணிக்கு மேல் மதுரை BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில் மதுரை தொலை தொடர்பு மாவட்ட FORUM கூட்டம் ,SNEA மாவட்ட செயலர் தோழர்.K தெய்வேந்திரன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது . . . 
 கூட்டத்தின் நோக்கம் குறித்து FORUM கன்வீனர், தோழர்.எஸ். சூரியன் விளக்கினார். கூட்டத்தில் BSNLEU ,  SNEA ,  AIBSNLEA ,  TSOA ,  SNATTA ,  AIBSNLOA ,  TNTCWU ஆகிய சங்கங்கள் சார்பாக 19 தோழர்கள் கலந்து கொண்டு ஆரோக்கியமான கருத்துக்களை வழங்கினார்கள். மதுரை மாவட்டத்தில்  NFTE சங்கம் மட்டும் மத்திய, மாநில அமைப்பின் முடிவிற்கு மாறாக   கூட்டு இயக்கத்தில் கலந்து கொள்வதில்லை என எடுத்துள்ள நிலைபாடு சரியல்ல என்ற வரையரவிற்கு  ,FORUM வந்துள்ளது.
எதிர்வரும் 22-12-2015 அன்று உணவு இடைவேளையில் மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் 1 மணிக்கு, ஓய்வூதியர்களுக்கு தரப்பட வேண்டிய 78.2% பஞ்சப்படியை வழங்க வலியுறித்தி  சக்தி மிக்க ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. தேனி , திண்டுக்கல் ஆகிய (வாய்பு உள்ள ) இடங்களிலும்   ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுமென FORUM  முடிவெடுத்தது. 
01-01-2016 முதல் 100 நாட்களுக்கு "SERVICE WITH SMILE"  என்ற அகில இந்திய அமைப்பு முடிவை நமது மதுரை மாவட்டத்தில் சிறப்பாக அமல் படுத்திட 19-12-2015 அன்று தேனியிலும் , 21-12-2015 அன்று திண்டுக்கல்லிலும் மாவட்ட செயலர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு கூட்டத்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
கோரிக்கை மற்றும் கூட்ட முடிவுகளை விளக்கி ஒரு நோட்டிஸ் வெளியிடுவது எனவும், 22-12-2015 ஆர்பாட்டத்திற்கு ஒரு போஸ்டர் வெளியிடுவது எனவும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்ட முடிவுகளை சிரமேற் கொண்டு நிறைவேற்றிட வேண்டுகிறோம்....என்றும் தோழமையுடன், S. சூரியன்....FORUMகன்வீனர் & D/S-BSNLEU.

No comments: