Sunday 17 November 2013

வ.உ.சி என்று அழைக்கப்படும் கப்பலோட்டிய தமிழன் . . .

..சி. (1872-1936)
..சி என்று அழைக்கப்படும் ..சிதம்பரனார் 1872ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 5ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் என்னும் ஊரில் பிறந்தார். இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வமாக ஈடுபட்டார். 1906ஆம் ஆண்டு வங்கச் சுதேசி இயக்கத்தை வலுப்படுத்த வேண்டி, சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்றைத் தொடங்கினார். மதுரையில் ஐந்தாம் சங்கத்தை நிறுவிய பாண்டித்துரைத் தேவர் ஒரு லட்சம் ரூபாயை இவர் தொடங்கிய சுதேசிக் கப்பல் கம்பெனியில் முதலீடு செய்தார். ஆங்கிலேயரின் கப்பல் வாணிகத்தை எதிர்த்து, இவர் கப்பல் வாங்கி அதைத் தூத்துக்குடிக்கும் கொழும்புவுக்கும் இடையே ஓட விட்டார். இதனால் இவர் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்டார். ஆங்கிலேயர் இவர் ஓட்டிய கப்பலைப் பறிமுதல் செய்தனர்.

1907 ஆம் ஆண்டு நடந்த சூரத் மாநாட்டில் அஞ்சா நெஞ்சர் என்று கூறப்படும் திலகர் பெருமானுக்கு உறுதுணையாக ..சி. விளங்கினார். 1908 ஆம் ஆண்டில் இவர் கைது செய்யப்பட்டு 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். பின்னர் இத்தண்டனை ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. சிறையில் செக்கிழுத்தார்; கல்லுடைத்தார். இதனால் இவர் செக்கிழுத்த செம்மல் எனப் போற்றப்பட்டார். 1936ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 18ஆம் நாள் தூத்துக்குடியில் மறைந்தார்.

No comments: