Friday 25 April 2014

நமது மத்திய சங்க (BSNLEU- CHQ )நேசனல் கவுன்சில் செய்தி .

23-04-2014 NJCM முடிவுகள்: - 01.10.2000 பதவி உயர்வு பெற்றவர்களுக்கான ஊதியப் பிடித்தம் குறித்து. .
AGENDA NO(10) : Pay fixation in case of Non-Executives absorbed in BSNL, who had opted for IDApay scale from the date of promotion after 01.10.2000.
Management said that this issue is being actively persued with the DoT and expressed hope that a favourable order would come soon. The Staff Side demanded that in the mean while recovery being made at the field level should be stopped. Management agreed to look into this.
01-10-2000க்கு முன் ஊழியர்களுக்கு  தரப்பட்ட பதவி உயர்வை இன்கிரிமெண்ட் தேதிக்கு விருப்பம் கொடுத்தவர்களுக்கு  தற்போது 2008 DOT உத்தரவைக்காட்டி, அவ்வாறு இன்கிரிமெண்ட் தேதிக்கு மாற்றித் தர முடியாது எனக்கூறி,இந்தியா முழுவதும்  பல ஊழியர்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டுவருகிறது. நமது மதுரை மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட  136 தோழர்களுக்கு சம்பளத்தில் மாதாமாதம் பிடித்தம் செய்யப்படுகிறது.
இப்பிரச்னையை நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம்,மாவட்ட நிர்வாகத்துடன்  பேச்சு வார்த்தைநடத்தி பல மாதம்  பிடித்தத்தை நிறுத்தி வைத்திருந்தோம். தொடர்ந்து இப் பிரச்னையை  மத்திய சங்கத்திற்கு நமது மாநிலச் சங்கத்தின் மூலமாக மத்திய சங்கத்தின் கவனத்திற்கு  கொண்டு சென்றோம். மதுரை  வந்திருந்த நமது பொதுச்செயலர்  தோழர் P.அபிமன்யு, மாநில செயலர் தோழர்.எஸ்.செல்லப்பா ஆகியோரிடம் நேரடியாக பிரச்னையை விளக்கி பேசினோம்.மாநில செயற்குழுவிற்கு வந்தபோதெல்லாம்,நமது பொதுச்செயலர்   தோழர்.பி .அபிமன்யு  அவர்களிடம் நினைவூட்டப்பட்டது.
 இப் பிரச்சனை குறித்து நமது பொதுச்செயலர்,தோழர் அபி அவர்கள்  BSNLகார்ப்பரேட் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியதோடு, நிர்வாகத்திடம் தொடர்ந்து விவாதித்து வந்தார். அதனுடைய தகவலையும், இப் பிரச்சனையை தேசிய கூட்டு ஆலோசனை குழுவில் எழுப்பபட்டுள்ளது குறித்து நமது தமிழ் மாநில சங்கத்திற்கும்,நமது மதுரை மாவட்ட சங்கத்திற்கும் கடிதம் ஏற்கனவே , எழுதிருந்தார் என்பதை நாம் நமது மாவட்ட செயற்குழுவில் பதிவு செய்துள்ளோம்.என்பது நமது தோழர்கள் அனைவரும் அறிந்த ஒன்று. இருப்பினும்,இப்போது 23.04.2014 அன்று  நடைபெற்ற NJCM கூட்டத்தில் ஊதியப் பிடித்தம் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமென நமது ஊழியர் தரப்பு சார்பாக வலியுர்த்தப்பட்டுள்ளது.BSNL நிர்வாகம் இப் பிரச்சனை குறித்து  உடனடி கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளது.
மேலும்,23/04/2014டெல்லியில்நடைபெற்றNJCMதேசியக்குழுகூட்டத்தில் 
 எடுக்கப்பட்டுவிவாதிக்கப்பட்டபிரச்சினைகள் குறித்த சிறு குறிப்பு :
*  JTO/JAO தேர்வு எழுதி தேர்ச்சியுறாதவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது ஏற்றுக்கொள்ளப்படவில்லை….. இருப்பினும் பாடத்திட்டத்தில் இடம் பெறாத கேள்விகள், தவறான கேள்விகள் கேட்கப்பட்டது  பற்றி பரிசீலிக்கப்படும்.
* புதிய JTO ஆளெடுப்பு விதி ஒப்புதல் பெறப்பட்டபின் JTOவாக OFFICIATING செய்யும் 1500 TTAக்களும் நிரந்தரம் செய்யப்படுவர்
* JTO/JAO தேர்வு எழுதுவதற்கான சேவைக்காலம் 7 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைக்கப்படும்.
*  SC/ST தோழர்களுக்கு நிரப்பப்படாத காலியிடங்கள் BACKLOG VACANCY ஏதும் இல்லை.இது பற்றி DOTக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
* வழக்கு நிலுவையில் உள்ளதால் கருணை அடிப்படையில் TSM ஆகப்பணிபுரியும் தோழர்களின் பணி நிரந்தரம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும் குறிப்பிட்ட சில தோழர்களது நிரந்தரம் பரிசீலிக்கப்படும்.
* பயிற்சிக் காலத்திற்கான உதவித்தொகை STIPEND புதிய சம்பள விகிதத்தில் 01/01/2007ல் இருந்து வழங்கப்படும்.
*  புதிய ஆளெடுப்பு பற்றி ஆய்வு செய்யப்படும். தொழிற்சங்கங்கள் மற்றும் ஆலோசனைக்காரர்களின் CONSULTANT உதவி ஏற்கப்படும்.
*  01/10/2000க்குப்பின் வரக்கூடிய பதவி உயர்வு தேதியில் இருந்து சம்பளப்பொருத்தம் 2000 WAGE REVISION அளிப்பது பற்றி முடிவெடுக்கப்படும்.
*  அனைவருக்கும் இலவச SIM வழங்குவது சாதகமாக முடிவெடுக்கப்படும். பிற நிறுவனங்களை அழைப்பதற்கு OFF NET CALLS  மாதம் 50 வரை சலுகை அளிக்கப்படலாம்.
*  ஒழுங்கு நடவடிக்கைகளை விரைந்து முடிக்க மாநில நிர்வாகங்களுக்கு வலியுறுத்தப்படும்.
*   TSM தோழர்களுக்கான BSNL ஏற்பு உத்திரவு DOTக்கு அனுப்பபட்டுள்ளது. 
நமது BSNLEU மத்திய சங்கத்தின் தொடர்முயற்ச்சிக்கு,நமது மாவட்ட சங்கத்தின் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்என்றும் தோழமையுடன் --எஸ்.சூரியன் ..D/S-BSNLEU

No comments: