Thursday 8 October 2015

அக்டோபர்-8 பட்டு(பாட்டு)கோட்டை நினைவு நாள்...

காவேரிக்கரைக் கழனியில் உழவு வேலை செய்யும் தொழிலாளி, அவனுக்கு உணவு கொண்டு செல்லும் மனைவி ஆகியோரை ஒரு திரைப்படம் பார்ப்பது போலக் காட்சி அழகுடன் கவிதையாக்கி இருப்பதை எண்ணி வியப்படையாமல் இருக்க முடியுமா?
நாட்டின் முன்னேற்றத்திற்கு மிக மிக இன்றியமையாத ஒரு தொழில் விவசாயம் ஆகும். வேளாண்மை (விவசாயம்) செழித்தால்தான் நாட்டில் வறுமை ஏற்படாது. அதே நேரம் விவசாயத் தொழிலாளர் நலனும் பேணப்படவேண்டும். இந்த எண்ணங்களைப் பட்டுக்கோட்டையார் தம் பாடலில் வெளிப்படுத்தியிருப்பதைக் காணலாம்.
"சும்மா கெடந்த நிலத்தைக் கொத்தி
சோம்பலில்லாம ஏர்நடத்தி
கம்மாக்கரையை ஒசத்திக்கட்டி
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டிச்
சம்பாப் பயிரைப் பறிச்சு நட்டுத்
தகுந்த முறையில் தண்ணீர்விட்டு
நெல்லு வௌஞ்சிருக்கு - வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு - அட
காடு வௌஞ்சென்ன மச்சான் - நமக்கு
கையுங் காலுந்தானே மிச்சம்
என்று மனைவி கேட்கிறாள். வர்க்க உணர்வுடைய அந்த உழைப்பாளிக் கணவன் பதில் சொல்கிறான்.
காடு வௌயட்டும் பொண்ணே - நமக்குக்
காலம் இருக்குது
பின்னே . . .
இந்தப் பதில் அவநம்பிக்கையை நம்பிக்கையாக மாற்றுவது. நாடோடிமன்னன் என்ற திரைப்படத்தில் இப்பாடல் காட்சி அருமையாக அமைக்கப்பட்டுள்ளது.
...அக்டோபர்-8 பட்டு(பாட்டு)கோட்டை நினைவு நாளை போற்றுவோம்.

No comments: