அருமைத்தோழர்களே ! 10.10.15 சனிக்கிழமை அன்று மாலை உத்தமபாளையம் தொலை பேசியகத்தில் தோழர்கள், S. ராஜன், V. ஜீவானந்தம், S. பழனிவேல்ராஜன் ஆகியோரின் கூட்டுத் தலைமையில், கம்பம் & பாளையம் மற்றும் TNTCWU கிளைகளின் இணைந்த மாநாடு மிகவும், சிறப்பாக நடைபெற்றது. விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே BSNLEU சங்க கொடியை தோழர்.S.தங்கத்துரையும், TNTCWUசங்க கொடியை தோழர். P. சிவராஜும் ஏற்றிவைத்தனர். மாநாட்டில் அஞ்சலி உரையை தோழர். செந்தில்குமார் நிகழ்த்தினார். தோழர். M. பிச்சைமுத்து வரவேற்புரை நிகழத்தினார்.
மாநாட்டில் BSNLEU மதுரை மாவட்ட செயலர் தோழர்.S.சூரியன் நிகழ்த்தினார். அவரது உரையில் நமது BSNL நிறுவனத்தின் நிலை, மத்தியரசின் பொதுத்துறை சீரழிவு பாதை அதை முறியடிக்க BSNL அதிகாரிகள் + ஊழியர்களின் கடமை, இதுகாறும் சங்கம் நடத்திய இயக்கங்கள் குறித்தும் துவக்க உரையை நிகழ்த்தினார்.
மாநாட்டின் செயல்பாட்டறிக்கை, வரவு-செலவு சமர்பிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டு அதன் பின் புதிய நிவாகிகள் தேர்வு நடைபெற்றது.
பதவி கம்பம்
பாளையம் TNTCWU
தலைவர் V. ஜீவானந்தம் S. ராஜன்
R. இளங்கோவன்
செயலர் A. அன்புராஜ்
M. பிச்சைமுத்து
S.பழனிவேல்ராஜா
பொருளர் N. அரசன்
T.K. ஸ்ரீனிவாசன்
I. சுந்தரமூர்த்தி
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை வாழ்த்தி I.மணிவண்ணன் SDE-UTM, M. பாஸ்கரன் SDE-CBM, P. தேசிங்கு D.O.S, J.ஜேம்ஸ் TEI, P. கணேசன்B/S-PKM, S.முருகன், B/S-BOK ஆகியோர் உரையாற்றினர். அதன் பின் சங்கத்தின் மதுரை மாவட்ட செயலர் தோழர். சோனைமுத்து சிறப்புரை நிகழ்த்தினார். இறுதியாக தோழர் ராஜன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். புதிய நிர்வாகிகள் பணி சிறக்க நமது மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYZh588WQBJ5CwnQj-5zzDEQSWeNr5hJRL-XiYzVvRjfoprczz5RuKJxGrwqk-XppP2yHKLEMmwJzC0q7ANyFuoiYypO4vC1ow3e6LRuKaPT1HeTbA967PclfnLnM_vIEXNyM8TXMoaZc/s640/utm.jpg)
No comments:
Post a Comment