Friday 10 July 2015

தோழர் S.ராஜாமணிக்கு BSNLEU கிளை பாராட்டுவிழா...

அருமைத்தோழர்களே ! நமது மேலூர் BSNLEU கிளைச்செயலர்  தோழர். S.  ராஜாமணிக்கு நமது  சங்கத்தின் சார்பாக 10.07.15 அன்று மாலை, மேலூர் தொலை பேசியகத்தில்   பணி நிறைவு பாராட்டு விழா, தோழர். எஸ். மகாதேவன் தலைமையில் மிகவும் சீரும் சிறப்புமாக  நடந்தேறியது......

 நமது பெருமைமிகு BSNLEU சங்க கொடியை தோழர்.S. ராஜாமணி ஏற்றிவைத்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற பாராட்டுவிழாவில் மாவட்ட சங்க நிர்வாகிகளும், முன்னணித் தோழர்களும் பாராட்டுரை நிகழ்த்தினார்கள். தோழர்.S. ராஜாமணியை பாரட்டிப்பேசிய அதே நேரத்தில், நமது BSNL நிறுவனத்தின் வளர்ச்சி, பாதுகாப்பு குறித்தும் நமது மத்திய,மாநில, மாவட்ட, கிளைசங்கங்கள் எடுத்துவரும் தொடர் நடவடிக்கை குறித்தும், இன்றைய மத்திய அரசு கடைப்பிடித்து வரும் தொழிலாளர், மக்கள் விரோத நிலைபாடுகள் பற்றியும் சுட்டிக்காட்டி, நமது கடமை குறித்தும் எடுத்தியம்பினர். நிகழ்ச்சிக்கு சிறப்பாக  மேலூர் கிளைத் தோழர்கள், ஒப்பந்த ஊழியர்கள் முதற்கொண்டு ஒருவர்விடாது அனைவரும் (மூன்று பெண்கள் உட்பட) கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தது என்பது, நமது சங்கத்தின் மீது உள்ள பிடிப்பையும், தோழர்.S. ராஜாமணி மீது உள்ள அன்பையும் வெளிப்படுத்தியது. கூட்டத்தில் எதிர்வரும் செப்டம்பர்-2 மத்திய தொழிற்சங்கங்கள் நடத்த உள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தில் நமது BSNLEU தோழர்கள் அனைவரும்சக்தியாககலந்து கொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.பணிநிறைவு பெற்றுள்ள தோழர்S. ராஜாமணி நெகிழ்வான ஏற்புரை நிகழ்த்தினார். அதன் பின் நடைபெற்ற ஆண்டு நிர்வாகிகள் கூட்டத்தில் தலைவர், செயலர், பொருளர் முறையே, தோழர்கள் பக்கிரி, ரிச்சர்டு, ஜெயராமன் உள்ளடக்கிய புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய பொருளர் தோழர்.ஜெயராமன் நன்றி கூற விழ இனிதே நிறைவுற்றது.
--- புதிய நிர்வாகிகள் பனி சிறக்க நமது மதுரை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது...

No comments: