Thursday 3 March 2016

7-3-16 அநீதிகளைய ஆர்பாட்டம் ஆர்பரித்து வாரீர்.

அருமைத் தோழர்களே !                  
எதிர்வரும் 07-03-16 திங்கள் மதியம் 1 மணிக்கு மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் அநீதிகளையக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திட நமது BSNLEU + TNTCWU ஆகிய இரு  மாவட்ட சங்கங்களும் அறைகூவல் விடுக்கிறது.
                                                    கோரிக்கைகள் 
  • பிரதி மாதம் 7ந் தேதிக்குள் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குக.
  • EPF,-ESI,-E.ROLL அமலாக்க "நோடல்" அதிகாரியை நியமனம் செய்க .
  • டிரைவர்  கிருஷ்ணமூர்த்தி மாற்றல் உத்தரவை அமல்படுத்துக .
  • தோழர்.குருசாமி மாற்றலை அமல்படுத்துக .
  • தோழர். ஜெயபிரகாஷ் மாற்றலை அமல்படுத்துக .
  • பென்சன் /drawal /எலக்ரிக்கல் செக்சன்களில்  ஆள் நியமனம் செய்க .
  • ஒரே" பூத்" கட்டுப்பாட்டில் உள்ள மாற்றல்களை அமல்படுத்துக .
  • ஏற்றுக்கொண்ட தோழியர். சுப்புலட்சுமி தற்காலிக மாற்றல் உத்தரவிடுக.
  • ஒருவர் கூட இல்லாத போடியில் TTA நியமனம் செய்க.
  • தேனி   "ட்ரான்ஸ் மிஷன்" பகுதிக்கு Sr.TOA  நியமனம் செய்க.
  • ஆண்டிபட்டி SDE அத்து மீறலை முறைப்படுத்துக. 
  • முறையாக TM-TTAகளுக்கு டூல்ஸ் வழங்குக. 
மேற்கண்ட பிரச்சனைகள் குறித்து பலமுறை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்விற்கு வந்தவைகள் கூட " சொத்தையான " காரணத்தை சொல்லி நிர்வாகத்தின் இழுத்தடிக்கும் போக்கை இனியும் ஏற்க முடியாது. மாற்று சங்கங்களின் பொய்யான அவதூறுகளை தவிடு பொடியாக்கிட , அனைவரும் திரண்டு வாரீர் என அழைக்கின்றோம்.
                                                             ---- என்றும் தோழமையுடன் 
C. செல்வின் சத்தியராஜ்                                                                                                            S. சூரியன் 
K.  வீரபத்திரன்                                                                                                                                  N. சோணைமுத்து 

No comments: