Friday 4 March 2016

தோழர் J.சௌந்தர ராஜனுக்கு தோழமை வாழ்த்துக்கள்...

1984-1985 ஆண்டுகளில் மஸ்தூர்  தோழர்களை லைன்மேன் ஓய்வரையில் அமரக்கூட என அனுமதிக்காத ஆதிக்க காலம் அது, கடலூர் "போஸ்டல் ஹவுஸ்" அடைக்கலமாக இருந்தது அவர்களுக்கு. அங்கு கூடுவதும், விவாதிப்பதும், ஜனநாயக குரல் எழுப்பவும் களம் அமைந்தபோது ஒன்றாக கூடிய இளம் தோழர்கள் சௌந்தர், துரை, பாலு, ஜோதி இப்படி நீண்ட படைவரிசை இருந்தது. மஸ்தூர்கள் அந்த மாவட்டத்தில்தான் தனியாக இருக்கவேண்டும் என்றவர்கள் மத்தியில் ஜனநாயகத்தை நிலைநாட்ட எழுந்த உன்னத K.G.போஸ்    படைவரிசையில் பல போராளிகள் செயலுக்கு வந்த போது  அவர்களின் உயிர் தோழராக  இருந்தவர். டெலிகாம் மெக்கானிக்காக   பதவி உயர்வு பெற்று  சங்கத்திலும், இலாக்காவிலும் சிறந்த பணியாற்றி 29.02.16 அன்று தோழர் J.சௌந்தர ராஜன் பணி நிறைவு பெற்றுள்ளார். அன்புத்   தோழன்  எல்லா நலமும் பெற்று பல்லாண்டு வாழ தோழன்.S. சூரியன் தோழமை   வாழ்த்துக்கள்...

No comments: