Tuesday 23 August 2016

செப்-2, வேலைநிறுத்த தயாரிப்பு ...2-ம் நாள் பிரச்சார பயணம்.

அருமைத் தோழர்களே ! நமது மதுரை மாவட்டத்தில், செப்-2, வேலைநிறுத்த தயாரிப்பு ...2-ம் நாள் பிரச்சார பயணம் 23-08-16 காலையில் நாகமலையில் துவங்கியது  அதன்பின்  உசிலை , சோழவந்தான், அலங்காநல்லூர் இறுதியாக மதுரை திருப்பாலையில் பிரச்சார கூட்டம் நிறைவு பெற்றது...
2-ம் நாள் நடைபெற்ற மேற்கண்ட பிரச்சார இயக்கத்தில் ... மாவட்டத்தலைவர் தோழர். பிச்சைக்கண்ணு, மாவட்டசெயலர் தோழர். செல்வின் சத்தியராஜ், மாவட்ட உதவி செயலர்கள் தோழர். செல்வம், தோழர். சந்திரமோகன் மற்றும் மாவட்ட அமைப்பு செயலர் தோழர். மனுவேல் பால்ராஜ் ஆகியோர் பங்கு பெற்றனர்...
அனைத்து அலுவலகங்களிலும், தொலை நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மிகவும் உற்சாகமாக செப்டம்பர் -2 வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்வோம் என் உறுதியாக கூறினார்கள் . வேலைநிறுத்தம் நிச்சயம் வலுவான வெற்றியைப்பெறும் என்பதில் எந்த வித ஐய்யமும் இல்லை.

No comments: