Thursday 25 August 2016

24-08-16,மதுரையில் திரிமுனால் காங்கிரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

அருமைதோழர்களே!  கடந்த 19.08.2016 அன்று நமது மேற்கு வங்க BSNLEUமாநில சங்க அலுவலகத்தின் மீது,  திர்ணாமூல் கூலி ஆட்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.  அலுவலகத்தில் இருந்த நாற்காலிகள்,மின் விசிறிகள்விளக்குகளை சேதப்படுத்தினர்அலுவலக மேஜை உள்ளிட்டபொருட்களை வெளியில் தூக்கி எறிந்துள்ளனர்நமது 
பூட்டை உடைத்துதிர்ணாமூல் குண்டர்கள் அவர்களின் பூட்டை பூட்டி சென்றுள்ளனர் . 
நமது மாநில சங்க அலுவலகம்,CTO வளாகத்தில் இருக்கிறதுஇருப்பினும்திர்ணாமூல் கூலி ஆட்கள் துணிந்துதாக்குதல் நடத்தி உள்ளனர்உடனடியாகநமது மேற்கு வங்காள மாநில சங்கம்மாநில தலைமை மேலாளரிடம்புகார் தெரிவித்தும்இன்று வரை நடவடிக்கை எதுவும் இல்லைகுறைந்தபட்சம், FIR கூட  பதியப்படவில்லை   என்பது வேதனையான ஒன்றுநமது மத்திய சங்கம் CMD அவர்களிடம் முறையீடு செய்துள்ளது.திர்ணாமூல் குண்டர்களின் தாக்குதலை கண்டித்து 24.08.2016, புதன்கிழமை அன்று நாடு முழுவதும் கண்டனஆர்ப்பாட்டம் நடத்த நமது BSNLEU மத்திய சங்கம் அறைகூவல் கொடுத்துள்ளதுஅதன்படி,...
மதுரையில் 24-08-16 மதியம் 1 மணிக்கு லெவல்-4 வாழகத்தில் மாவட்ட தலைவர் தோழர்.எ. பிச்சைக்கண்ணு தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 35 பெண்கள் உட்பட நூற்று கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொன்டு கண்டன முழக்கம் எழுப்பினர். தோழர்கள் கே. பழனிக்குமார் . எஸ். சூரியன், என். சோணைமுத்து, மற்றும் மாவட்ட செயலர் தோழர்.சி. செல்வின் சத்திய ராஜ் ஆகியோர் கண்டான் உரை நிகழ்த்தினார்கள். இறுதியாக மாவட்ட அமைப்பு செயலர் தோழியர். வி. ராஜேந்தரி நன்றி கூறினார்.


No comments: