Saturday 20 June 2015

BSNLEU மத்திய செயற்குழு எடுத்துள்ள சில முக்கிய முடிவுகள்.

அருமைத் தோழர்களே ! ஹிமாச்சல் மாநிலத்தில் உள்ள டல்ஹௌசியில் கடந்த 16.06.15 முதல் 18.06.15 வரை நடைபெற்ற நமது BSNLEU மத்திய செயற்குழு எடுத்துள்ள சில முக்கிய முடிவுகள்:
1. அனைத்து மத்திய சங்கங்கள் அறிவித்துள்ள அகில இந்திய வேலைநிறுத்தமான, 02.09.2015 ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் BSNLEU சங்கமும் பங்கேற்பது.
2. Non executive ஊழியர்களின் தீராத பிரச்சனைகளுக்கு JAC மூலமாக தேவைப்படும் போராட்டங்களை  நடத்த CHQ நடவடிக்கை எடுக்கும் .
3. FORUM எடுத்த முடிவின் படி ஒரு மாத கால BSNL இன் புதிய திட்டங்களை விளக்கி பிரச்சார இயக்கத்தை அனைத்து மாநில,   மாவட்டங்களில் தீவிரமாக நடத்துவது .
4.மாநில, மாவட்ட கவுன்சில் கூட்டம் நடைபெறாத இடங்களில்,கவுன்சில்கூட்டம் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
5. மாவட்ட மட்டத்தில் ஒர்க்ஸ் கமிட்டி  கூட்டம் முறையாக நடைபெறுவதை மாவட்ட செயலர்கள் உத்தரவாத படுத்த வேண்டும்.
6. K .G . போஸ் நினைவு அறக்கட்டளை சார்பாக தொழிற் சங்க வகுப்புகள் நடத்தவேண்டும்
7."TELECRUSADER"பத்திரிக்கை தேவையான  எண்ணிகையை மாவட்ட செயலர்கள் மத்திய சங்கத்துக்கு தெரிவிக்க வேண்டும்
8.  தமிழ்  மாநில சங்க முன்மொழிவின்படி, அடுத்த அகில இந்திய மாநாட்டை  தமிழ் மாநிலத்தில் நடத்துவதற்கு மத்திய செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

No comments: