Sunday 14 June 2015

திண்டுக்கல் BSNLEU புறநகர் கிளையின் புதிய பதிவு . . .

அருமைத்தோழர்களே! நமது திண்டுக்கல் BSNLEU புறநகர் கிளையின் 10 வது ஆண்டுமாநாடு 13.06.15 அன்று மிக சீரும் சிறப்புமாக  தலைவர் தோழர்.ஜெயகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. நமது  BSNLEU சங்க கொடியை தோழியர்.சண்முகவள்ளி  ஏற்றிவைக்க மாவட்ட அமைப்புசெயலர் தோழர்.பரிமள ரெங்கராஜ் அவர்கள் எழுப்பிய   விண்ணதிரும் கோஷங்களுக் கிடையே கொடியேற்ற நிகழ்சி நடந்தேறியது. மாநாட்டின் அஞ்சலி உரையை தோழர்.ஜோசப்ராஜ் நிகழ்த்த, வரவேற்புரையை கிளைச் செயலர் தோழர். குருசாமி  நிகழ்த்தினார். 
கிளைமாநட்டினை  மாவட்ட செயலர் தோழர். எஸ்.சூரியன்  துவக்கி வைத்து உரை நிகழ்த் தினார். அவரது உரையில் நமது BSNL நிறுவன பாதுகாப்பிற்காக, சுமார் 2.5 லட்சம் BSNL ஊழியர்களும், அதிகாரிகளும் இணைந்து இந்தியா முழுவதும் நடத்தி முடித்த உன்னதமான, தேச பக்த ஏப்ரல்-21 & 22 வேலை நிறுத்தம், இன்றைய மத்திய பாஜக ஆட்சியின் மக்கள் விரோத, தேச விரோத செல்பாடுகள்,  அனைத்து தரப்பு மத்திய தொழிற் சங்கங்கள் இணைந்து நடத்த இருக்கும் செப்டம்பர்-2 அகில இந்திய வேலைநிறுத்தம், ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனைகள் தீர்விற்காக 12.06.15 அன்று சென்னையில் CGM-உடன் நடந்த பேச்சு வார்த்தையின் முடிவுகள் குறித்தும் விவரித்தார்.
அதன்பின் ஆண்டறிக்கை , வரவு-செலவு சமர்பிக்கப்பட்டு ஏற்று கொள்ளப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வு ஒருமனதாக நடைபெற்றது. தலைவர், செயலர், பொருளர் முறையே, தோழர்கள் P.ஜெயகிருஷ்ணன், A.குருசாமி, N.பிச்சைமணி ஆகியோர் தேர்ந்தெடுக் கப்பட்டனர். மாநாட்டினை வாழ்த்தி தோழர்கள், எஸ். உதய சூரியன், என். தண்டபாணி, ஆர். சக்திவேல், எ. பிச்சைகண்ணு, எஸ். சுமதி, எ. சிவபிரகாசம், ஜே. ஜோதிநாதன், எஸ். காசிராஜன், எஸ். பரிமள ரெங்கராஜ், எ. வைத்திலிங்க பூபதி, எம். சௌந்தர ராஜன் ஆகியோர்  உரைநிகழ்த்தினர். மாநில அமைப்பு செயலர். தோழர்.சி . செல்வின் சத்தியராஜ், டெல்லியில் 01.05.15 அன்று DOT செயலரிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்த தகவல்களை விவரித்து உரைநிகழ்த்தினார். இறுதியாக பொருளர் தோழர். என். பிச்சை மணி நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது. 
மாநாடு ஏற்பாடு என்ற தன்மையானாலும் சரி, மாநட்டில் பங்கேற்பானாலும் சரி, விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும் கதராடை அணிவித்து மகிழ்ந்த பாங்கானாலும்  சரி, சிற்றுண்டி உபசரிப்பானாலும் சரி இப்படி அனைத்து வகையுலும் ஒரு புதிய பதிவை ஏற்படுத்திய திண்டுக்கல் புறநகர் கிளைச்செயலரை, கிளையை நமது மதுரை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது. புதிய நிர்வாகிகள் பனி சிறக்க மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்....எஸ். சூரியன் , D/S-BSNLEU.

No comments: