Thursday 25 June 2015

ரயில்வே தனியார்மயம் கண்டித்து 30.06.15 ஆர்ப்பாட்டம்...

அருமைத்தோழர்களே ! நரேந்திரமோடி அரசாங்கம் அமைத்த "பிபேக் தேப்ராய்" கமிட்டி ரயில்வேயை தனியார் மயமாக்க தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இந்த அறிக்கைக்கு எதிராக ஜூன் 30ஆம் தேதியைகருப்பு தினம்என கடைபிடிப்பது என ரயில்வே தொழிற்சங்கங்கள் முடிவெடுத் துள்ளது. ரயில்வே துறையை தனியார் மயமாக் குவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என நமது BSNLEU "டல்ஹௌசி" மத்திய செயற்குழு அறைகூவல் விட்டுள்ளது. எனவே நமது BSNL ஊழியர் சங்கத்தின் அனைத்து கிளை சங்கங்கள் ஜூன் 30ஆம் தேதி, மத்திய அரசு  ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என நமது BSNLEU மத்திய, மாநில, மதுரை மாவட்டசங்கங்கள் தோழமையுடன் கேட்டுக்கொள்கிது.....மத்திய சங்கத்தின் பத்திரிக்கை செய்தி காண  கிளிக் செய்யவும்.

No comments: