Thursday 21 January 2016

19-01-2016 பாண்டியில் நடைபெற்ற "SWAS" கருத்தரங்கம்...

அருமைத் தோழர்களே ! கடந்த 19-01-2016 அன்று BSNLலில் உள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் சார்பாக   பாண்டியில் நடைபெற்ற "SWAS" கருத்தரங்கம்..(புன்னகையுடன் கூடிய சேவைக்கான கருத்தரங்கம்)தமிழ்நாடு FORUM சார்பாக புன்னகையுடன் சேவை திட்டத்தை திறம்பட செயல்படுத்த, புதுவையில் ஒரு எழுச்சியூட்டும் கருத்தரங்கம் நடைபெற்றது . தோழர் பட்டாபிராமன் ,மாநில செயலர் NFTE  கருத்தரங்கத்தை தலைமை தாங்கி நடத்தினார் . நமது மாநில தலைவரும் FORUM ஒருங்கிணைப்பாளருமான தோழர் S .செல்லப்பா அவர்கள் கருத்தரங்கம் நடத்துவதற்கான நோக்கம் பற்றி  விளக்கினார். அகில இந்திய   FORUM  ஒருங்கிணைப்பாளரும், நமது BSNLEU சங்கத்தின் பொதுச்  செயலருமான    தோழர் P அபிமன்யு , தோழர் சந்தேஸ்வர் சிங், பொது செயலர் , NFTE, தோழர் .செபஸ்டியன் , பொது செயலர் SNEA, தோழர் வேணுகோபால் , AIBSNLEA மற்றும் நமது தமிழ் மாநிலச் செயலர், தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன் உட்பட அனைத்து சங்க மாநில செயலாளர்கள் உரையாற்றினர். நிர்வாக தரப்பில் தலைமைப் பொது மேலாளர் உயர்திரு பூங்குழலி , திரு . ரவி, PGM (F) ,திரு . சந்தோசம் ,GM (NWP-CM), திரு P.V கருணாநிதி , GM மற்றும் Ms.லீலா சங்கரி , GM , பாண்டிச்சேரி ஆகியோர் உரையாற்றினார். 800 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் தமிழ் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து கருத்தரங்கில் கலந்துகொண்டார்கள். நமது மதுரை மாவட்டத் திலிருந்து  புதுவை கருத்தரங்கில் 12 பேர் கலந்து கொண்டனர்.

No comments: