Wednesday 6 January 2016

சீர் மிகு 5-1-2016 மதுரை செயற்குழு கூட்டம் . . .

அருமைத் தோழர்களே !  நமது மதுரை மாவட்ட 5.1.2016 செயற்குழு கூட்டம் நமது மாவட்ட தலைவர் தோழர். சி. செல்வின் சத்தியராஜ் தலைமையில் மிக சீரும் சிறப்பாக, மதுரை தல்லாகுளம் CSC/TRCயில்  நடைபெற்றது.
செயற்குழு மறைந்து தலைவர்.தோழர்.எ.பி. பரதன், பதான்கோட்டில் உயரிழந்த ராணுவ வீரர்களுக்கும், முன்னாள் மாநிலச் செயலர் தோழர்.எ.சி. ஷா மறைவிற்கும், கடலூர் மற்றும் சென்னை வெள்ளத்தில் உயரிழந்த அப்பாவி மக்களுக்கும் அஞ்சலி செலுத்தியது.
செயற்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த மாநில உதவிச் செயலர் தோழர்.எம். முருகையா துவக்க உரையுடன், மாவட்ட செயற்குழுவை  வழி நடத்தினார் . மாநில சங்க நிர்வாகிகள் தோழர்.எஸ். ஜான்போர்ஜியா, பி . சந்திர சேகர்  ஆகிய இருவரும் சிறப்புரை  நிகழ்த்தினார்கள் .
மாவட்ட செயலர் எஸ். சூரியன் சமர்ப்பித்த ஆய்படு பொருள் அறிக்கை மீதான விவாதத்தில் 24தோழர்கள்ஆரோக்கியமான, செழுமையான   கருத்துக்களை முன்வைத்தனர். இறுதியாக மாவட்ட செயற்குழு , பல நல்ல முடிவுகளை எடுத்தது.
*  மதுரை மாவட்டம் எப்பொழுதும் போல் முன்மாதிரியாக செயல்பட்டு, அதிகப்படியான  வாக்குகளை பெற்று முதலிடம் வகிக்கும்.
* 7 வது  தேர்தலை சந்திப்பதற்கான அனைத்து திட்டங்களும் தீட்டப்பட்டு, ஒவ்வொரு பூத் வாரியாக வாக்குகளுக்கான எல்லை திட்டமிடப்பட்டுள்ளது.
*  100 நாட்டகள் "புன்னகையுடன் " சேவை மத்திய, மாநில FORUM செயல் திட்டத்தை சிறப்பாக அமல்படுத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
*  வெள்ள சேத மீட்பு பணிகளில் நமது சங்கம் ஆற்றிய பங்கை  வெகுவாக செயற்குழு பாராட்டியது.
*  மாநில சங்கம் ஏற்கனவே ஏற்றுக்கொண்டபடி மதுரை மாவட்ட பிரச்சனையை தாமதம் இன்றி தீர்த்து வைக்க வேண்டும் எனவும் செயற்குழு தீர்மானித்தது. 

No comments: