Saturday 2 January 2016

தமிழகத்தில் ஊழலை வேரறுக்க நடிகை ரோகிணி யோசனை . . .

இளைஞர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெற்று அதிகார மையங்களில் அமர்ந்தால் ஊழல்களை வேரறுக்கலாம் என, திண்டுக்கல்லில் நடிகை ரோகிணி பேசினார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில மாநாடு திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று மாலை பிரதிநிதிகள் மாநாடு நடந்தது. மாநில தலைவர் முத்துக்கண்ணன் தலைமை வகித்தார்.பாலபாரதி எம்.எல்.., வரவேற்றார். மாநாட்டில் நடிகை ரோகிணி பேசியதாவது: சினிமாவைத் தாண்டி சமூகத்தை பார்க்கும் போது உண்மையான சில விஷயங்கள் உள்ளன. சினிமா மட்டுமே வாழ்க்கை இல்லை. சமூகத்தில் ஏற்பட்டுள்ள அநீதிகளுக்கு பேராட இது போன்ற மாநாடுகள் தான் உதவுகின்றன.தற்போது கல்விக்காகவும், வேலைக்காகவும் போராட வேண்டிய சூழல் உள்ளது. சமூகத்தை மாற்றக்கூடிய வலிமை இளைஞர்களின் கையில்தான் உள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வுகளில் மாணவர்கள் அதிகளவில் பங்கேற்று வெற்றி பெற்று அதிகார மையத்தில் அமர்ந்தால் ஊழல்களை வேரறுக்கலாம், என்றார்.

No comments: